.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Sunday, 15 August 2010

புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரே ஸ்ரீலங்கா அரசு வகுத்திருக்கும் சாம, தான, பேத, தண்ட வியூகம்

கேணல். ஹரிஹரன்

ஸ்ரீலங்காவிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் பிரிவினைவாத போராளிகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) கொள்கை சார்ந்த நினைவலைகளில் ஊறிப்போயிருக்கும் ஆற்றலைச் செயலிழக்கச் செய்வதற்காக இந்து தத்துவசாத்திரத்தில் கூறப்பட்டுள்ள நான்கு வழிகளான சாம,தான, பேத,தண்ட வழிமுறைகளைச் ஸ்ரீலங்கா அரசு கையாள்வது போல் தெரிகிறது. சாம என்பது தர்க்க ரீதியான காரணங்களையும் இயல்பறிவினையும் பயன்படுத்தி தன்னுடைய நிலமையினை விளக்குதல் என்பது குதிரைக்கு காரட்டினைக்காட்டி முன்னகர்த்துவது போன்ற பாரம்பரிய தந்திரத்தை பயன்படுத்தி வெற்றி கொள்ள முடியாவிட்டால் அவரை விலைக்கு வாங்கு என்கிற பொறிமுறை. பேத என்பது முன்றாவது தெரிவு, அரசியல்வாதிகளுக்கு பலவித சலுகைகளையும் வழங்கி அவர்களுக்கிடையே பிளவினை ஏற்படுத்தி ஒரு சாராரின் ஆதரவினைப் பெறுதல். தண்ட என்பது கடைசிக்கட்டமுயற்சியாக படைகளை பயன்படுத்துதல் (அல்லது ஒத்துவராத மறு சாராரை காரட்டைக் காட்டியும் நகராத குதிரைக்கு தடியடி கொடுத்து வழிக்கு கொண்டு வருவது போல் நடத்துவது).

சமீபத்தில் பொதுமக்கள் முன் பகிரங்கமாக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) முன்னாள் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிநிதியும் உயர்மட்ட பாதுகாப்பு கைதியுமான குமரன் பத்மநாதன் (கே.பி) விவகாரம் பற்றிய ஸ்ரீலங்கா அரசின் முக்கிய திட்டமானது பேத வியூகத்தின் ஒரு கண்ணியே ஆகும். இது மிகப்பெரிய புலம்பெயர் சமூகத்தை கையாள ஸ்ரீலங்கா அரசு எடுத்திருக்கும் வேட்டைத் திட்டத்திற்கு கனகச்சிதமாகப் பொருந்துகிறது. ஏற்கனவே புலம்பெயர் தமிழர்களிலிருந்து சில பிரபலமான பிரமுகர்களுடன் (இவர்கள் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள்) தொடர்பு கொண்டு செயற்பட்டதின் பயனாக அவர்கள் கே.பி உடன் கை கோர்த்து வடக்கின் மீள் கட்டுமான பணிகளிலிறங்கச் சம்மதித்துள்ளார்கள்.

இதனை கே.பி தனது சமீபத்திய ஊடக நேர்காணல்களில் உறுதிப்படுத்தியுள்ளார். அவரது கூற்றுப்படி அவரால் புதிதாக வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசசார்பற்ற நிறுவன (NGO) அமைப்பான வடக்குகிழக்கு புனர்வாழ்வு அபிவிருத்தி நிறுவனம் (NERDO) புனர்வாழ்வு, மீள்கட்டுமானம், மீள்குடியேற்ற பணிகளில் முக்கிய பங்கினை ஏற்பதற்கு தயார் நிலையிலுள்ளது. பல வருட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு தொடர்புகளினால் செல்வாக்குள்ள பல புலம்பெயர் பிரமுகர்களுடன் கே.பி வலுவான தொடர்பினை ஏற்படுத்தியிருந்தார்.அவர்களில் எல்லோருமே கே.பியின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் காரணமாக ஏற்பட்டவைகளை மீளமைக்க புலம்பெயர் தமிழர்கள் ஐக்கிய அமைப்பு ஒன்றினை ஏற்படுத்தி பணிகளைத் தொடர்வதற்கான வாய்ப்பு ஒன்றை கே.பி ஒருசாரர் முன்வைத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. கடும்போக்கு விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் அவரை ஒரு தேசத்துரோகி என்று நியாயப்படுத்த முயல்வார்கள்.

அரசாங்கத்துடன் ஒத்துழைக்கும் தமது செயலை நியாயப்படுத்தி கே.பி கூறுகையில், தமிழர்கள், நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சகாப்தம் முடிவடைந்த ஒரு காலகட்டத்தில் வாழ்கின்றபோது, யதார்த்தங்களை நன்கு புரிந்து கொண்டு புதிய சவால்களை எதிர்கொள்ளும் உத்திகளை மீள்நோக்கு செய்தல் அவசியம். கே.பி மேலும் கூறுகையில்” மக்களின் நலன்களில்மட்டுமே அக்கறை உள்ளது, முக்கியமாக சிறுவர்கள், தற்காத்துக்கொள்ள வழியின்றி முடமாக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய நிதியுதவி போன்றவை, மக்கள் யுத்தத்தினால் சலிப்படைந்து விட்டார்கள், அவர்களது துயர் துடைக்க எடுக்கப்பட வேண்டிய ஒவ்வொரு முயற்சியும் அரசியற் கலப்படமற்ற தூய்மையான மனிதாபிமான முயற்சியாக இருத்தல் வேண்டும்.”

இது அப்பட்டமான உண்மை. கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடி உயரப் பறந்து கொண்டிருந்த போது அவர்களின் ஆதரவாளர்களிடத்தில் இத்தகைய தர்க்கரீதியான காரணங்கள் நல்லபடியாக ஏற்கப்படவில்லை. ஆனால் இடர்சூழ்ந்த இந்த நேரத்தில் கே.பி போன்றதொரு மூத்த தலைவரிடமிருந்து வெளிவரும் இவ்வாறான வார்த்தைகள் நிச்சயமாக அவர்களின் மனங்களில் குறைந்த படசம் ஒரு இரண்டாவது சிந்தனையையாவது தோற்றுவிக்கும்.

அவரது நேர்காணலின்போது கே.பி கூறியவை சாதாரண இயல்பறிவுக்கும், இன்றைய நடைமுறைக்கும் ஏற்ற கருத்துக்கள். 9ஃ11 ல் அல்- குவைவதா அமெரிக்கா மீது நடத்திய தாக்குதலும் அதைத்தெடர்ந்து, ஜிகாத் பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்த போரும் உலகஅரசியல் தலைவர்களிடையே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (எதிரான மனப்போக்கைத் தோற்றுவித்ததே தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்விக்கு மூலகாரணமாக இருந்தது. புதிய சூழலுக்கேற்ப விடுதலைப் புலிகளின் உத்திகளை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசர தேவையினை பிரபாகரன் உணரவில்லை. கே.பி யின் அவதானிப்பு “ இன்று ஒரு புதிய உலகம் ஒழுங்கில் உள்ளது, ஆயத இயக்க பிரசாரங்களை அது சகித்துக்கொள்ளாது, இதுதான் கசப்பான உண்மை.” தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை கோஷங்களை இன்னமும் முழங்கி வருபவர்களுக்கு மிக அவசியமான யதார்த்தத்தை இது உணர்த்துகிறது.

தடுப்புக்காவலையும் மீறி அதிகரித்து வரும் கேபியின் பகிரங்க பிரதர்சனங்கள், தமிழ் அரசியல் தலைவர்களிடையே ஒருவித மனஉளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. தங்கள் நிலையை ஸ்திரமற்றதாக்க ராஜபக்ஸ முயற்சிக்கும் தந்திர விளையாட்டே இது என அவர்கள் கருதுகிறார்கள .கே.பி ஒரு சாதாரண கைதியாக இல்லாமலிருப்பது சிலவேளை அவர்களது இந்த அச்சத்துக்கு காரணமாக இருக்கலாம.; .பிரபாகரனின் உள்ளக அமைச்சின் முக்கிய அங்கத்தவரான ஒருவர், அவரது ஏனைய சகாக்கள் சட்ட நடவடிக்கையினை எதிர்நோக்கும்போது இவர் மட்டும் ‘குவான்டனாமா பே (Guantanamo Bay)’ யின் ஸ்ரீலங்கா பதிப்பான தடுப்புக்காவல் சிறையில் தனது பாதங்களை குளிர வைத்து சொகுசாக வீற்றிருக்கிறார். மலேசியாவில் நிகழ்ந்த அவரது கைதும் ஸ்ரீலங்காவிடம் அவர் ஒப்படைக்கப்பட்ட விதமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின் நிகழ்ந்த பரபரப்பான ஒரு பெரிய கதை.

ஆனால் அவரது முதல்வருட தடுப்புக்காவல் சிறைவாசம் முடியுமுன்னரே மாயமனிதர் போன்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயத கொள்வனவாளர் பீனிக்ஸ் பறவைபோல் புலிப்போராளிகளின் சாம்பலில் இருந்து உயிர்த்தெழுந்து அரசியல் பெருவோட்டத்தில் இணைவார் என்று பரவலான வதந்திகள் கிளம்பியிருந்தன. ஒரு கைதியாக இருந்தும் ஊடக இடைவெளிகளை அவர் விடாது நிரப்பி வருவது அரசியல் யாத்திரைக்கான தனது செயல்முறைகள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது என்பதன் அறிகுறியாக இருக்குமோ? இது அவரைப்பற்றி வெளிவந்த பல கதைகளுடன் நன்கு பொருந்துகிறது, மிகவும் பிரபலப்படுத்தப்பட்ட அவரது வன்னிப் பயணத்திலிருந்து இது ஆரம்பமானது, புலம்பெயர் தமிழ் தலைவர்களுடன் வன்னி சென்று அங்கு நடைபெறும் மிள்குடியேற்ற நடவடிக்கைகளை பார்வையிட்டு அதன்பின்னர் அரச சார்பற்ற நிறுவனம் ( NGO) ஒன்றை ஆரம்பித்து புலம்பெயர் பங்களிப்பினைக் கோரியதும் இதிலடக்கம்.

கே.பியின் வெளிப்படையான நேர்காணல் கூற்றுக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியையும் தமிழ் மக்களின் இன்னல்களை மட்டும் வெளிப்படுத்தாது பாதுகாப்புச் செயலரையும், ஜனாதிபதியையும் துதிபாடுவது கேக்துண்டங்களுக்கு மாச்சீனி சேர்த்து சுவை கூட்டும் விளம்பர உத்தியாகவுமுள்ளது. கே.பி க்கு வழங்கப்பட்டுள்ள பொதுசனத் தொடர்பு சலுகையானது ஸ்ரீலங்கா அரசின் திட்டமிட்ட ஒரு சூதாட்டம். எப்படியோ அவரது அரசியல் புனர்வாழ்வு தொடரப்போவது, இப்போது பாதுகாப்பிலிருக்கும் 737 முன்னிரைப் புலிப்போராளிகளுக்கு எதிராக அரசு சட்டநடவடிக்கை மேற்கொள்ளும் போது, கே.பி முடிக்குரிய தரப்பு சாட்சியாக மாறி சாட்சியமளித்த பின்னரே. விசேட நீதிமன்றங்களை அமைத்து விசாரணைகளை மேற்கொள்ளா விட்டால் இந்நடவடிக்கைகள் முடிவடைய ஒரு வருடத்தக்கு மேலாகும். இந்த உத்தேசக்கணிப்பீடு சரியாயின், வரும் 2011 ல் அரசியல் வானில் சஞ்சரிக்க கே.பி க்கு இடம் கிடைத்து விடும். ஏற்கனவே யுத்தத்திற்கு முன் ஸ்ரீலங்கா அரசு இறக்கிவிட்ட பல முயற்சிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் கால்பதித்திருந்த பல நாடுகளில் தங்கள் நிலையைக் கட்டிக்காக்கப் படாதபாடு படும்படியான நிலைக்கு தள்ளிவிட்டிருந்தது. ஜனாதிபதி, பிரதமர், வெளியுறவு அமைச்சர் என்று எல்லோருமே கடந்த காலங்களில் தங்கள் வெளிநாட்டுப் பயணங்களின் போது இந்நோக்கினை வலியுறுத்தி வந்தார்கள். இம் முயற்சிகளுக்கு புறமே தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பினைத் தகர்த்தெறிய இன்டர்போலின் (Interpol) கூட்டு முயற்சியினையும் நாடப்போவதாக ஸ்ரீலங்கா அரசு கூறியிருந்தது.

இம் முயற்சிகளுக்கு மேலும் ஊக்கமளிப்பது போல சமீபத்தில் ஸ்ரீலங்கா இராணுவ புலனாய்வுப்பிரிவினர், தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவின் தலைவர் கஸ்ட்ரோவின் புதைக்கப் பட்டிருந்த நாட்குறிப்பையும் மற்றும் சில விரிவான விடயங்கள் தொகுக்கப்பட்ட ஆவணங்களையும் தோண்டி எடுத்துள்ளார்கள். இவ் ஆவணங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சகல சர்வதேச செயற்பாடுகளையும், மனிதக் கடத்தல், ஆயதக்கடத்தல்களில் தொடர்புடையவர்களையும் மற்றும் கிழக்காசியா, மேற்குஐரோப்பா, கனடா, ஆபிரிக்கா ஆகிய இடங்களிலுள்ள நிதிவளத் தளங்கள் பற்றியும் நன்கு விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

இதில் குறிப்பிடவேண்டிய சுவராஸ்யமான ஓரு விடயம் வார இறுதியில் காலியில் நடைபெற்ற கடற்பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பாதுகாப்புச் செயலர் கோத்தபாயா ராஜபக்ஸ இந்நோக்கம் பற்றி பேசும்போது “சுயமாக நாம் எவ்வளவோ பலம் வாய்ந்தவர்களாக இருந்தாலும், அரசு சாராத தனிநபர்களினால் சர்வதேசம் ஊடாக வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராகத் தனிமைப்பட்டு இயங்கினால் நாம் பலமற்றவர்களாகவே இருப்போம்” என்று குறிப்பிட்டார்.

புலம் பெயர் தமிழர்களின் ஈழக்குறிக்கோளையும், தமிழ்போராளிகளை உயிர்த்தெழுப்பிக்க நடக்கும் முயற்சிகளையும் மறக்க வைக்க ஸ்ரீலங்கா அரசினால் முடியுமா? ஆம் என்று பதிலளிப்பதாயின் சமமற்ற பல கலவைகளின் கூட்டான புலம்பெயர் சமூகத்தின் சிக்கலான பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும். அத்தோடு எவ்வாறு புலம்பெயர் தமிழ் சமூகம் தமிழ்போராளிகளின் பிரதான ஆதரவாளியாக மாறியது என்பதின் சரித்திர சம்பந்தம் வாய்ந்த உண்மைகளையும் தவிர்க்க வேண்டி இருக்கும்.

புலம்பெயர் தமிழர்கள் ஈழப்பிரச்சினைக்கு ஆதரவு வழங்கும் விடயத்தில் இருதுண்டுகளாக பிளவுபட்டு நிற்கிறார்கள், அடிப்படையில் அவர்கள் இரு வேறுபட்ட தளங்களில் நின்று செயற்படுகிறார்கள். ஒன்று உணர்ச்சிப் பெருக்கில் செயற்படும் தளம்,பல வருடங்களாக தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களையும் தங்கள் சொந்த பந்தங்களை இழந்த சோகங்களையும் அடிப்படையாகக் கொண்டது. இன்னமும் இன்னலின்பிடியில் சிக்கித் தவிக்கும் தமது உறவுகளுக்கு நேரடியாகச் சென்று உதவ முடியாத இயலாமை அவர்களை இப்போது கடும் கோபத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஸ்ரீலங்காவில் நடப்பவைகளால் உணர்ச்சி வயப்பட்டு தத்தளிக்கும் பெரும்பான்மையோர் அநேகமாக இந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான். கே.பியின் ஆதரவுடன் ஸ்ரீலங்கா வகுக்கும் வியூகத்தில் இநதப் பகுதியினர் விழுந்து விடலாம், அரசியல் முன்னேற்பாடுகளையும் தொடஙகி அரசு ஒரே கணையில் இரு இலக்கை வீழத்தலாம்.

மறு பாதியினர் ஆழமான கொள்கைப் பற்றாளர்கள், தமிழின் தனித்துவத்தை பேணிப் பாதுகாப்பதும் தமிழீழத்தை உருவாக்குவதுதான் அதற்கான ஒரே வழி என்றும் விசுவசிப்பவர்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றத்திற்கு முன்னரே இவர்கள்தான் தமிழீழத்தின் ஆரம்ப கர்த்தாக்கள். இந்தப் பாதியினர் கடந்த கால அனுபவங்கள் காரணமாக பெரும்பான்மை சிங்களவர்களின் அரசியல் அபிலாசைகளில் ஆழமான சந்தேகம் கொண்டுள்ளார்கள். அதுதான் பிரிவினைவாதம் என்கிற ஊற்றின் தொடக்கம். கே.பி வழங்கும் விளக்கங்கள் அநேகமாக இந்தப் பகுதியினரின் மனங்களை முற்று முழதாக வெற்றி கொண்டுவிட முடியாது.எப்படியாயினும் அவர்களின் நம்பிக்கை முறைகளில் ஒரு கீறலை ஏற்படுத்தலாம்.

இந்தப் பகுதியினரிடத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் நம்பிக்கைகளை பொய்யாக்கும்விதமான ஒரு அரசியல் தீர்வே இவர்களுக்குத் தேவை. கடந்த மூன்று தசாப்தங்களாக ஆட்சி செய்த அரசாங்களால் இதை அணுகவே முடியவில்லை. இப்போது கூட ஒரு சிறிய அளவே நிறைவேற்றப்பட்டுள்ளது. அரைகுறை தீர்வான அரசியலமைப்பின் 13வது சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது கூட வெறும் வாய்பேச்சளவிலேயே உள்ளது.

ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவரும் பயங்கரவாதம் பற்றிய ஆய்வுகளில் சர்வதேசப் புகழ் நேடிய அதி உயர் தகைமைகளைக் கொண்ட பேராசிரியர் றோகான் குணரட்ன கடந்த வாரம் ஸ்ரீலங்காவின் தலைநகர் கொழும்பில் யுத்தத்தின் பின் எதிர்நோக்கும் சவால்கள் என்கிற தலைப்பில் பேசும்போது இந்த உள்வீட்டு உண்மைகளை தொட்டுக்காட்டினார். அவர் கூறியதாவது” சுதந்திரம் கிடைத்த காலத்திலிருந்து ஸ்ரீலங்காவின் தலைவர்கள் பல இனம் பல மதம் கொண்ட சமூகமாக ஆட்சி செய்யத் தவறியதின் தாக்கமே ஸ்ரீலங்காவின் இன-அரசியல் மோதல்கள். ஸ்ரீலங்கா அரசியல் தலைவர்கள் ஸ்ரீலங்காவின நீண்டகால தேசிய நலன்களை குறுகிய கால அரசியல் இலாபத்துக்காக விட்டுக் கொடுத்துள்ளனர்.” ஸ்ரீலங்கா அரசியல்வாதிகள் இனி எப்போதும் இனம் மதம் சார்பான அரசியல் நடத்த மாட்டோம் என்கிற புரிந்துணர்வை தம்முள் கட்டியெழுப்பி, இளையோர் மனங்களில் நஞ்சு பாய்ச்சி அவர்களை தீவிரவாதிகளாக்குவதை தவிர்த்து, இன,மத பிரிவினைகளுக்கு வலுவூட்டுவதை நிறுத்தினால், அன்றி இந்த நாட்டில் துர்ப்பாக்கியமான கடந்த கால இன்னல்கள் அநேகமாக மீண்டும் மீண்டும் ஏற்படக்கூடும். ஸ்ரீலங்கா அரசும் அரசியல் தலைவர்களும் அரசியல் நம்பிக்கை என்ற ஜீவாதார நிலையை கட்டியெழுப்ப முயற்சிக்கிறார்கள் என்பதற்கு எந்த அறிகுறியும் தென்படாததால் அவரது வார்த்தைகளை கவனத்தில் எடுத்து நன்கு செயற்படவேண்டும்.

இத்தாலிய தத்துவமேதை மச்சியவெல்லியானின் ( Machiavellian ) கோட்பாடுகளுக்கமைய (“எவனொருவன் காலத்திற்கேற்ப செயற்படுகிறானோ அவனே பயனடைவான், எவனது செயல்கள் காலத்திற்கு பொருந்தாதோ அவனது முயற்சிகள் பயன் தராது.”) இதை அணுகாவிட்டால் புலம்பெயர் சமூகத்தை கையாளும் முயற்சி சாதகமான தீர்வினைத் தராது.

(கேணல். ஹரிஹரன் தெற்காசியப் பிராந்திய ஓய்வுபெற்ற இராணுவ புலனாய்வு நிபுணர். இந்திய அமைதி காக்கும் படையினர் ஸ்ரீலங்காவில் பணியாற்றிய போது புலனாய்வுப் பிரிவின் தலைவராகப் பணிபுரிந்தவர்.அவர் சென்னை சீன கற்கை நிலையத்துடனும், தெற்காசிய ஆய்வுகள் மையத்துடனும் இணைந்து பணியாற்றி வருகிறார்.

email: colhari@yahoo.com



Thursday, 12 August 2010

ஈழத்தமிழர் - வரலாற்றுச் சுவடுகள் 1

வெள்ளையர்களை எதிர்த்து 'பாயும் புலி' பண்டாரவன்னியன் வீரப்போர்




இலங்கையில், வெள்ளையர்களை எதிர்த்து வீரப் போர் புரிந்து உயிர்த் தியாகம் செய்தவன், பண்டாரகவன்னியன்.

தமிழ்நாட்டில், வெள்ளையர்களை எதிர்த்து இறுதிமூச்சு உள்ளவரை போராடியவன் வீரபாண்டிய கட்டபொம்மன். அவனைப்போல, இலங்கையில் வெள்ளையரை எதிர்த்தவன் 'பாயும் புலி' பண்டாரகவன்னியன். முழுப்பெயர் குலசேகர வைரமுத்து பண்டாரகவன்னியன்.

தமிழர் ஆட்சி

யாழ்ப்பாணத்தை ஒட்டிய வன்னிப்பிரதேசத்தை பண்டாரகவன்னியன் ஆண்டு வந்தான்.

வடக்கே யாழ்ப்பாணம் பரவைக்கடலையும், தெற்கே அருவிஆற்றையும், மேற்கே மன்னார் மாவட்டத்தையும், கிழக்கே திரிகோணமலையையும் எல்லையாகக் கொண்டது வன்னி ராஜ்ஜியம்.

பண்டாரகவன்னியனும், கண்டி தமிழ் மன்னன் விக்கிரம ராசசிங்கனும் நெருங்கிய நண்பர்கள்.

டச்சுக்காரர்களை விரட்டிவிட்டு, இலங்கையில் பல இடங்களை கைப்பற்றிக்கொண்ட வெள்ளையர்கள், பண்டாரகவன்னியனிடம் கப்பம் (வரிப்பணம்) கேட்டனர்.

தமிழ்நாட்டில், வெள்ளையருக்கு வரி கொடுக்க வீரபாண்டிய கட்டபொம்மன் மறுத்தது போல், பண்டாரகவன்னியனும் கப்பம் கட்ட மறுத்தான். கப்பம் கேட்டு வந்த வெள்ளையனை விரட்டி அடித்தான்.

வெள்ளையர்கள் விடவில்லை. 1797 -ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி எல்லிஸ் டொய்லி என்ற தளபதியை பண்டாரகவன்னியரிடம் அனுப்பி, கிஸ்தியை வசூலித்து வருமாறு கூறினார்கள்.

வெட்டி வீழ்த்தினான்

வெள்ளையர்கள் மீண்டும் மீண்டும் ஆட்களை அனுப்பி கப்பம் கேட்டதால், பண்டாரகவன்னியன் வெகுண்டான். எல்லிஸ் டொய்லி என்ற அந்த வெள்ளைக்கார தளபதியை வாளால் வெட்டி வீழ்த்தினான்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும், வெள்ளையர்கள் கடும் கோபம் கொண்டனர். படைகளை திரட்டிக் கொண்டு, பண்டாரகவன்னியன் மீது போர் தொடுத்தனர்.

கற்பூரப்புல் என்ற இடத்தில் இருதரப்பு படைகளும் மோதின. பண்டாரகவன்னியன் ஆவேசத்துடன் வீரப்போர் புரிந்து, பல வெள்ளைக்கார வீரர்களை வீழ்த்தினான்.

தமிழ் படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், வெள்ளையர் படை புறமுதுகிட்டு ஓடியது.

மீண்டும் போர்

ஆங்கிலேயர்கள், எப்படியாவது பண்டாரகவன்னியனை தோற்கடித்து விடவேண்டும் என்று பெரும் படை திரட்டினர். இதைத் தெரிந்து கொண்ட பண்டாரகவன்னியன், ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு கோட்டையை, 1803-ம் ஆண்டில் தாக்கினான். காப்டன் ரிபேக் தலைமையில் இருந்த வெள்ளையர் படைகளுக்கும், பண்டாரகவன்னியன் படைகளுக்கும் கடும் போர் நடந்தது. பண்டாரகவன்னியன் வெற்றி பெற்றான். வெள்ளையர் படை பின்வாங்கி ஓடியது.

மும்முனைத் தாக்குதல்

வெள்ளையர் பண்டாரகவன்னியனை எதிர்க்க புதிய வியூகம் வகுத்தனர். யாழ்பாணம், மன்னார், திரிகோணமலை என்ற மூன்று இடங்களில் இருந்தும் வெள்ளையர்கள் ஒரே நேரத்தில் படையெடுத்துச் சென்று, பண்டாரகவன்னியனை தாக்கினர்.

வெள்ளையர்களின் படைகளுடன் ஒப்பிடும் போது, பண்டாரகவன்னியனின் படை மிகச் சிறியது. இருப்பினும், அஞ்சாமல் வீரப்போர் புரிந்தான்.

போரில் பண்டாரகவன்னியன் படுகாயம் அடைந்தான். அவனுடைய வீரர்கள், பனங்காமம் என்ற இடத்துக்கு பண்டாரகவன்னியனை தூக்கிச் சென்றனர். சிகிச்சை அளித்து குணப்படுத்த எவ்வளவோ முயன்றும் பலன் இல்லை.

1803-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி பண்டாரக வன்னியன் உயிர் பிரிந்தது.

பண்டாரகவன்னியன் மாண்ட இடத்தில் ஒரு நடு கல் உள்ளது. அதில், "இந்த இடத்தில் பண்டாரகவன்னியனை கேப்டன் வான் டெரிபெர்க் தோற்கடித்தான்" என்று குறிப்பிட்டுள்ளது.


வெள்ளையர்கள் எழுதிய வரலாற்றில், பண்டாரகவன்னியனை ஒரு 'கொள்ளைக்காரன்' என்றே குறிப்பிடுகின்றனர்.

வீரப்பாண்டிய கட்டபொம்மனையும் இதேபோல கொள்ளைக்காரன் என்று அவர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.
கட்டபொம்மனும், பண்டாரகவன்னியனும் சமகாலத்தவர். கயத்தாரில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தேதி 17-10-1799.

கண்டியை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் - தொடரும்....


காணொளி: தென்னாடு முதல் கம்போடியா வரை

தென்னாடு முதல் கம்போடியா வரை தமிழர் வரலாற்று எச்சங்கள்

உலகிலுள்ள எல்லா அதிசயங்களையும் வெல்லவல்ல தமிழர் அதிசயங்கள்.

இதை அநேக தமிழரே அறியாமல் இருப்பதுதான் வேதனை தரும் செய்தி.




காணொளி:உலகின் ஒப்பற்ற தமிழர் அதிசயங்கள்.
கம்போடியாவில் சூர்யவர்மனால் கட்டப்பட்ட தலம்.
இந்த 'BBC documentary'ல் தமிழரின் பங்கு குறிப்பிடப்படவில்லை. நாமே நம்ம வரலாறுகளை அறியாமலிருக்கும் போது மற்றவர்களைக் குறை கூறி ஏது பலன்?!

கீழேயுள்ள காணொளியையும் பார்க்கவும்.
after watching this, watch the video below too.


அங்கூர் வாட் என்பது, அங்கூர், கம்போடியாவிலுள்ள ஒரு இந்துக் கோயில் தொகுதியாகும். இந்துக்கோவில் பெளத்த முறைப்படி பெளத்தர்களால் பேணப்பட்டு வருகின்றது. இரண்டு மத அடையாளச் சின்னங்களும், தமிழ்ப் பல்லவகாலக் கட்டிட, சிற்ப வேலைப்பாடுகளும் காணப்படுகின்றன். இது இரண்டாம் சூரியவர்மன் (கிபி 1113-1150) என்பவரால் கட்டப்பட்டது.வாட் என்பது கோயில் என்பதைக் குறிக்கும் கெமர் மொழிச் சொல்.

ஒரு அகழியும், மூன்று மண்டபங்களும் மத்தியிலுள்ள ஐந்து கோயில்களைச் சூழவுள்ளன. மேற்கிலிருந்து வரும்போது அகழியின் மேல் அமைந்துள்ள நீண்ட பாலத்தினூடாக முதலாவது வெளி மண்டபத்தை அணுகலாம்.

முதல் மண்டபம் வெளிப்புறம் சதுரத் தூண்களையும், உட்புறம் மூடிய சுவரையும் கொண்டுள்ளது. தூண்களுக்கு இடைப்பட்ட விதானம் (ceiling) தாமரைவடிவ அலங்காரங்களைக் கொண்டுள்ளது. மூடிய சுவர் நடன உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இச் சுவரின் வெளிப்புறம் தூண்களோடுகூடிய பலகணிகள், அப்சரஸ்கள் மற்றும் விலங்குகளின் மீதமர்ந்து நடனமாடும் ஆண் உருவங்கள் முதலியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. எல்லா மண்டபங்களினதும் சுவர்களில் அப்சரஸ் உருவங்கள் காணப்படுகின்றன. முதல் மண்டபத்திலிருந்து நீண்ட வழிமூலம் இரண்டாவது மண்டபத்தை அடைய முடியும். இது இரண்டு பக்கங்களிலும் சிங்கச்சிலைகள் அமைந்த படிக்கட்டைக் கொண்ட மேடையிலிருந்து அணுகப்படுகிறது. இரண்டாவது மண்டபத்தின் உட்சுவர்களில் வரிசையாக அமைந்த புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. மேற்குப் பக்கச் சுவரில் மகாபாரதக் காப்பியக் காட்சிகள் காணப்படுகின்றன. மூன்றாவது மண்டபம், உயர்ந்த terrace இன் மீது அமைந்து ஒன்றுடனொன்று மண்டபங்களால் இணைக்கப்பட்ட ஐந்து கோயில்களைச் சூழ அமைந்துள்ளது. மண்டபங்களின் கூரைகள், பாம்புகளின் உடல்களையும், சிங்கம் அல்லது கருடனின் தலையையும் கொண்ட உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.


Angkor Wat (or Angkor Vat) (Khmer: អង្គរវត្ត) is a temple complex at Angkor, Cambodia, built for the king Suryavarman II in the early 12th century as his state temple and capital city. As the best-preserved temple at the site, it is the only one to have remained a significant religious center since its foundation—first Hindu, dedicated to the god Vishnu, then Buddhist. The temple is the epitome of the high classical style of Khmer architecture. It has become a symbol of Cambodia, appearing on its national flag, and it is the country's prime attraction for visitors.

Angkor Wat combines two basic plans of Khmer temple architecture: the temple mountain and the later galleried temple, based on early South Indian Hindu architecture, with key features such as the Jagati. It is designed to represent Mount Meru, home of the devas in Hindu mythology: within a moat and an outer wall 3.6 kilometres (2.2 mi) long are three rectangular galleries, each raised above the next. At the center of the temple stands a quincunx of towers. Unlike most Angkorian temples, Angkor Wat is oriented to the west; scholars are divided as to the significance of this. The temple is admired for the grandeur and harmony of the architecture, its extensive bas-reliefs and for the numerous devatas (guardian spirits) adorning its walls.

read more @
http://en.wikipedia.org/wiki/Angkor_Wat


உலகிலுள்ள எல்லா அதிசயங்களையும் வெல்லவல்ல தமிழர் அதிசயம்.

இதை அநேக தமிழரே அறியாமல் இருப்பதுதான் வேதனை தரும் செய்தி.

The Chola Dynasty


When Cholas were invading Lankapuri(Sri Lanka), it was under the rule of Pallava kings of Singai Empire. Whole of Lanakpuri came under the rule of cholas. It's important to note that Chola ruled Lankapuri for only 130 years. But the Pallava kings Of Singai Empire ruled India for 1,300 years. We will look at that in details in another topic.




Video: Wonders of all wonders; unrecognized by the world(In English).
Watch the whole video.


தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில் அல்லது தஞ்சை பெரிய கோயில் தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது. தஞ்சைப் பெரியகோவில் எனவும் இக்கோவில் அறியப்படுகிறது.

இக்கோயில் கட்டப்பட்டபோதிருந்த காலம், சோழராட்சியின் பொற்காலமாகும். தமிழ்நாடு முழுவதும் ஒரே குடைக்கீழ் இருந்ததுடன், எல்லைக்கப்பாலும் பல இடங்கள் சோழப் பேரரசின் கீழ் இருந்ததுடன், பெருமளவு வருவாயும் கிடைத்துவந்தது. பெருமளவு ஆள்பலமும், அரசனின் சிவபக்தியோடு கூடிய ஆளுமையும், இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயிலை சுமார் 7 ஆண்டுகளில் கட்டிமுடிப்பதற்குத் துணையாக இருந்தது.

இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது


Longevity

The Chola empire went from about 200 BC all the way to about 1300 AD with a gap in between from about 200 AD to 800 AD when they were not ruling. This would make the Cholas one of the if not the longest lasting empire in India.


Navy and Marine Trade


The Cholas were excellent mariners. They had flourishing trade with China that was conducted through sea not land. What the Cholas also excelled at was having a strong Navy.


International Conquest


The Cholas did something that no other Indian empire did. They left India in search of new territory. The map below shows the territories controlled by Rajendra Chola I.


Neglected

Now I could be wrong but if my memory serves me correct the Chola empire and its achievements have been neglected the Indian education system and society in general. I do recall being taught about the Cholas in class 9 or 10 history. But that was about it. I cannot recall a reference to the Cholas (Except for the Chola Sheraton in Chennai) anywhere in day to day life. One often sees Ashoka, Maurya, Akbar, Shah Jahan etc being referred to or used. To the best of my knowledge no Bollywood movie has ever been made on the Cholas. I do not recall reading books on how great Rajendra Chola I was etc. I do not believe there is any road in Delhi named after Rajendra Chola or any Chola (A lot of Delhi roads are named after great Indian rulers).


Look at the classification of Indian Navy ships (http://www.bharat-rakshak.com/NAVY/Surface.html). I see none called the Chola class or Rajendra class. And yet it was the Cholas, not anyone else who dared to leave the subcontinent and conquer.


The Cholas seem to be neatly tucked away.


Why do I think its important to know more about the Cholas and Rajendra Chola's naval achievements? Well its quite simple. We have all read about Marco Polo and Vasco De Gama. A lot of Indians probably also know of the great naval battle between Nelson and Napolean. But how many of us know about the Chola's naval strength? What kind of ships did the Cholas have? What kind of weaponry did the ships have? What was Rajendra Chola's strategy when he took these overseas territories? What kind of trade ships did they have? Who were his captains? Who charted the route to China?


I know how the British sunk the Bismarck because radio stations in India played a song about it day in and day out. But I do not know anything about the Chola Navy. A shame isn't it?
Well, now that my rant is over I can go back and read more about the Cholas and hopefully one day get back to seeking more information on the 535 AD eruption of Krakatoa.



Raja Raja Cholan

Raja Raja Cholan was the greatest among all the Chola kings. There were other Chola kings before and after him. We will explore them in another episode.


Rajaraja Chola I (Tamil: இராசராச சோழன்) is one of the greatest emperors of the Tamil Chola Empire and India, who ruled between 985 and 1014 CE. He established the Chola empire by conquering the kingdoms of southern India expanding the Chola Empire as far as Sri Lanka in the south, and Kalinga (Orissa) in the northeast. He fought many battles with the Chalukyas in the north and the Pandyas in the south. By conquering Vengi, Rajaraja laid the foundations for the Later Chola dynasty. He invaded Sri Lanka and started a century-long Chola occupation of the island.

He streamlined the administrative system with the division of the country into various districts and by standardizing revenue collection through systematic land surveys. He built the magnificent Brihadisvara Temple in Thanjavur and through it enabled wealth distribution amongst his subjects. His successes enabled his son Rajendra Chola I to extend the empire even further.

read more @
http://en.wikipedia.org/wiki/Raja_Raja_Chola_I

If the above video is not working, try this






Courtesy:
http://o3.indiatimes.com/meragussa2/archive/2007/01/15/3381649.aspx
wikipedia
& Google! Video


-End of Part 6-

Our goal is to strengthen Tamils by knowing their heritage through historical, archeological & genealogical research and education. It's only a small step. Join us & lets restore our heritage for many generations to come. We are exploring ancient history, recent past and present state of Tamils & Thamil language around the globe.

We need to preserve our heritage inorder for future generations to know their roots. Let's declare an annual Tamils' global history week. Let's have seminars, conferences & conventions worldwide annually.

|| Part-1 || Part-2 || Part-3 || Part-4 || Part-5 || Part-6 || Part-7 || Part-8 || Part-9 || Part 10 || Part-11(coming soon) ||


So every one will wonder how the Sinhala race become the majority in Singai Empire/Tronote(திருநாடு)/Lankapuri/Thampapanni(Aryans)/Serendip(Greek/Arabs)/Ceylon(British)/Sri Lanka(North indians)... continue reading... you will finally get to know.

ஆண்டவர்கள் ‘பயங்கரவாதி’களான கதை. நிலத்துக்கு சொந்தக்காரர்கள் அகதிகளான வரலாறு.

more will follow @
http://tamilcause.blogspot.com


Tuesday, 10 August 2010

பரதநாட்டியம் - தமிழரின் உயிர்ப்பான உயர்கலை

பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மைவாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். பரத முனிவர் என்ற சித்தரால் உண்டாக்கப்பட்டதனால் பரதம் என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம்தான் பரத நாட்டியம். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக்கலைஞரின் முக பாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம்.

Bharatanatyam (Tamil: பரதநாட்டியம்) is a classical Indian dance form originating in Tamil Nadu, India. One of the oldest of the classical dance forms in India. Bharatanatyam is usually accompanied by the classical music. It has its inspirations from the sculptures of the ancient temple of Chidambaram, Tamilnadu. Bharat...anatyam, as the name depicts is the combination of:BHA- Bhava (Expression), RA- Raga (Music) and TA- Tala (Rhythm) Bharatanatyam is a traditional dance-form known for its grace, purity, tenderness, and sculpturesque poses. Today, it is one of the most popular and widely performed dance styles and is practiced by many dancers all over the world.

Thursday, 5 August 2010

தமிழிலிருந்து பிறந்ததே வடமொழி (சமஸ்கிருதம்)

தமிழே சித்தர்கள் மொழி; தமிழே ஞான மொழி; தமிழிலிருந்து பிறந்ததே வடமொழி (சமஸ்கிருதம்)

Tuesday, 3 August 2010

படிக்கவேண்டும் புதிய பாடம்!!

முரளி நடேசன்

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஒரு நீண்ட வரலாறுண்டு. இருப்பினும் தமிழ்மக்களின் மனங்களின் தடம்பதித்த சில வரலாற்றுத் துணுக்குகளை மீள்நினைவுக்குட்படுத்தல் பொருத்தமாகும். ஒரு இயக்கத்தை உருவாக்குவது என்பது கஷ்டம் மிகுந்த அத்தியாயம். அதன் கட்டமைப்பு குலையாமல் மூன்று தசாப்தங்கள் வரை நகர்த்தி வந்தது என்பது பெரும் எதிர்நீச்சல்கள் மலிந்த அத்தியாயம்.

இக்கட்டமைப்பு குலைபடாமல் தொடர்ச்சியாக கொண்டுசெல்லப்பட வேண்டுமாயின் ‘பேதங்கள் மறந்த ஒற்றுமை‘ அவசியம். புலத்திலும் தலத்திலும் ‘சிங்களம்‘ தமிழ்மக்கள் மத்தியில் ஒற்றுமையீனத்தை உருவாக்கி தமிழர் உரிமைகளை பறிப்பதற்கான காய்நகர்த்தல்களை செய்து வெற்றிகொண்டு வருவதை நாம் உணர்தல் வேண்டும். எல்லைகள் அற்ற தடைகளைத் தாண்டி இயக்கம் வளர்ந்துள்ளது என்பதை காட்டுவதற்கு எத்தனையோ வரலாற்றுக் குறிப்புகளை முன்வைக்கலாம். கடந்த கால அத்தியாயங்களில் வரலாற்றின் ஒரு பகுதியைப் படிப்பினைக்காக பார்ப்போம்.

சந்ததியார், கண்ணன், பார்த்தன், சுந்தரம், உமாமகேஸ்வரன், பொபி, தாஸ், பற்குணம், மைக்கல், மாத்தையா, கௌசல்யன், அற்புதன்(EPDP), யோகேஸ்வரன், தர்மலிங்கம், அமிர்தலிங்கம் இவர்கள் எப்படி மரணித்தார்கள் என்பதை எனக்கோ உங்களுக்கோ விபரம் தெரியாது, ஆனால் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும், ஆரம்பகால உறுப்பினர்களுக்கும், அதைச் செய்தவர்களுக்கும் மிக நன்றாகத் தெரியும். இவர்கள் எல்லோரும்(ஸ்ரீ சபாரத்தினம், பத்மநாபா, உமாமகேஸ்வரன், பிரபாகரன், பாலகுமார்) தமிழ் மக்களின் விடிவிற்காகவும், தமிழீழ மலர்வுக்காகவும் சிங்களத்திற்கெதிராக போராட புறப்பட்டவர்களே ஆவார்கள். பலர் இந்த போராட்டத்தை மழுங்கடிக்க நினைத்த அன்னிய ஆதிக்க சக்திகளின் சதி வலைக்குள் சிக்கி சின்னாபின்னமாகிப் போனார்கள். இவர்களில் இறுதிவரை நின்று இலட்சியம் மாறாமல் வெற்றி பெற்றவர்கள் விடுதலைப்புலிகள் மட்டுமே. இருப்பினும் கடைசியில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் பலரையும் சர்வதேச சதிவலைக்குள் சிறுகச் சிறுக சிக்க வைத்துவிட்டார்கள்.

தமிழீழ விடுதலைக்காக அடியெடுத்து வைத்த தலைவர்களை உண்மையிலேயே விசுவாசிப்பதாக இருந்தால்,

அவர்கள் முதல் அடியெடுத்து வைத்த நோக்கம், கொள்கை தமிழீழத் தாயகத்துக்காகத்தானென்றால்(தமிழரின் தாகம்),

தேசத்தின் விடிவிற்காய் உயிர்நீத்த அனைவரும் மாவீரர்கள்தான் என்றால்

பிரிந்து நின்று கூத்தாடிக் கோஷமிடுவதை விடுத்து அவர்களின் கனவை நனவாக்குங்கள்.

தற்பொழுது யாரை யார் கொன்றார்கள், ஏன் கொன்றார்கள் என்பதுவல்ல எமது பிரச்சனை. நாம் எல்லோரும் விடுதலை இயக்கங்களை ஆரம்பித்து, அவற்றில் இணைந்து போராட புறப்பட்ட நோக்கம், தேவை இன்னும் தீர்க்கப்படவுமில்லை, அடையப்படவுமில்லை. இன்னும் தொடங்கிய இடத்திலேயே நிற்கிறது. தமிழர்கள் நாங்கள் தெளிவாக ஒன்றைமட்டும் புரிந்துகொள்ள வேண்டும். தமிழர்கள், சிங்களவர்களால் மெல்ல மெல்ல ஒழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதையும், தமிழர் நிலங்கள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதையும், தமிழர்கள் எந்த உரிமையுமின்றி சிங்களவர்களின் அடிமைகளாக வாழ்ந்துகொண்டிருப்பதையும் இன்னமும் உணரமுடியாமல் இருப்பது பெரும் வேதனைக்குரியது.

எமது உரிமை நிலைநிறுத்தப்பட வேண்டும்.

எமது சுதந்திரம் உறுதி செய்யப்படவேண்டும்.

எமக்கென்று ஒரு நாடு வேண்டும்.

அதற்காக சிங்கள ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடவேண்டும்.

அதை விடுத்து அவன் LTTE, இவன் PLOTE, நான் TELO, நீ EPRLF, கிழக்கு, வடக்கு என்ற பிரிவினை வாதங்களை விடுத்து ஒரு குடையின் கீழ் நின்று எமது பொது எதிரியை, அந்நிய ஆதிக்க சக்திகளை எதிர்த்து வெற்றிகொள்ள வேண்டும். தமிழன் மீண்டும் தலை நிமிர்ந்து இந்த உலகத்தின் ஒரு முன்மாதிரியான இனமாக வாழ்ந்து காட்டவேண்டும்.


யூத இனத்தின் ஒற்றுமையின் பலத்தையும், திறனாற்றல் குணாதிசயங்களையும் கண்டறிந்த மேற்குலகமும் அரபுக்களும் அவர்களை அழிக்க நினைத்தார்கள், ஆனால் அவர்கள் தமது ஒற்றுமையால் இன்று உலகே வியக்கும் வண்ணம், பயப்படும் வண்ணம் வளர்ந்து நிற்கிறார்கள். தமிழர்களுக்கிடையில் உள்ள ஒரே காரணியான ஒற்றுமையின்மையே சிங்களவர்களுக்கு வாய்ப்பாகிறது. அத்தோடு தமிழர்களை வளர விட்டால் தமக்கு ஆபத்து வந்துவிடும் என நினைக்கும் அன்னிய ஆதிக்க சக்திகளும் தமிழர்களின் இந்த நிலையை சரிவர பயன்படுத்துகிறார்கள்.

ஆரம்ப காலத்தில் உமாமகேஸ்வரன் விடுதலைப்புலிகள் இயக்கத்தை விட்டு நீக்கப்பட்டபோது சரியோ தவறோ தமிழர் ஒற்றுமையைப் பற்றி மட்டுமே சிந்தித்திருப்பாராயின், போராடச்சென்ற நோக்கத்தை சற்று யோசித்துப் பார்த்திருப்பாராயின் வேறொரு இயக்கத்தை ஆரம்பிக்காது ஒதுங்கியிருக்கலாம். அப்படி ஒதுங்கியிருந்தால் எத்தனையோ இளைஞர்கள் அவர்கள் சென்ற பாதையை விட்டு விலகியிருக்க மாட்டார்கள்.மாறாக சென்றபாதையை திசை திருப்பி விடுதலைப்புலிகளுடன் இணைந்து மேலும் தமிழீழத்துக்கான போராட்டத்துக்கு வலுச் சேர்த்திருப்பார்கள். மேலும், PLOTE இயக்கத்தில் இருந்தவர்கள் காரணமின்றி கொத்துக் கொத்தாக உட்கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். அந்த இளைஞர்களின் போராட்ட சக்தி, ஆட்பலம் என்பன இந்த போராட்டத்திற்கு பயன்படாமலேயே மூழ்கடிக்கப்பட்டிருக்கப்பட மாட்டாது.

பிற்காலத்தில் PLOTE போராளிகள் தேசியம், சுயநிர்ணயம் தனிஈழம் என்ற ஒரே கொள்கையின்கீழ் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து போராட முடியாமலேயே போய்விட்டது. அதற்கான காரணம் விடுதலைப்புலிகளின் அணியில் இணைவதற்கு உயிருக்கு உத்தரவாதமற்ற நம்பிக்கையீனம். அக்கால கட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களை விட மேலதிக எண்ணிக்கையான எத்தனையோ வீர மறவர்கள், இன உணர்வுள்ள இளைஞர்கள், திறமையான போராளிகள், சிந்தனைவாதிகள்(தராக்கி சிவராம் போன்றோர்) ஏனைய இயக்கங்களில்(PLOTE, TELO, EPRLF, EROS போன்ற) உள்வாங்கப்பட்டிருந்தார்கள்.

இதேபோல கருணா பிற்காலத்தில் பிரபாகரனால் வன்னிக்கு அழைக்கப்பட்டபோது பிழை செய்தாரோ இல்லையோ தமிழர் ஒற்றுமையை மட்டுமே சிந்தித்திருப்பாராயின், தமிழர் போராட்டம் வெற்றிபெற வேண்டும் என்று நினைத்திருப்பாராயின், வடக்கு கிழக்கு என்று போராளிகளுக்குள் பிளவு ஏற்பட்டுவிடக் கூடாதென்று எண்ணியிருப்பாராயின், விடுதலைப்புலிகள் அழிந்துவிடக்கூடாதென்று உறுதியாய் இருந்திருப்பாராயின் மரணதண்டனையேயாயினும் ஏற்று வன்னி சென்றிருப்பார்.

எதை எதை சிங்களவனும் அன்னிய ஆதிக்க சக்திகளும் எதிர்பார்க்கின்றனவோ அதையே தான் நாமும் செய்துகொண்டு இருக்கிறோம், எதிர்காலத்தில் செய்யவும் போகிறோம். காட்டிக்கொடுப்பதிலும் துரோகம் செய்வதிலும் நாம் தமிழர்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை இந்த உலகிற்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். இவர்கள் எவ்வளவு தான் வீரம் நிறைந்த போராளிகளாகவும், மதிநுட்பமிக்க திறமைசாலிகளாகவோ இருந்தாலும் தெரிந்தோ தெரியாமலோ அன்னிய ஆதிக்க சக்திகளின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானது மட்டுமல்லாமல் தமிழர் வரலாற்றில் மாறாத வடுவாக பழிச்சொல்லுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை ஆட்சேபிக்க முடியாது.

நாம் சிங்கள மற்றும் அன்னிய ஆதிக்க சக்திகளின் திட்டம் நிறைவேற ஒத்துழைப்பதற்காக பிரிந்தே நிற்கிறோம். அதாவது இந்திய நலனிற்காக இந்தியாவை வழிநடாத்தும் RAW அமைப்பு தமிழீழ போராட்டத்தை அழிப்பதற்காக அதில் ஒரு நடவடிக்கையாக விடுதலைப்புலிகளை ஆத்திரமூட்டி இந்திய மக்களால் நேசிக்கப்படும் ஒரு தலைவரை அவர் எவராக இருப்பினும் கொலைசெய்ய வைத்தால் விடுதலைப்புலிகள் மேல் வைத்திருக்கும் ஆதரவை இந்தியத் தமிழ்மக்களிடமும் இந்திய மக்களிடமுள்ள தமிழீழ ஆதரவுத் தளத்தையும் உடைத்தெறிவதே ஒரே வழி என முடிவுசெய்தார்கள். பின் செய்தும் முடித்தார்கள், அதில் வெற்றியும் பெற்றார்கள்.

தமிழ் இயக்கங்களுக்கிடையில் விரோதத்தை வளர்த்தார்கள். டக்லஸ் தேவானந்தா போன்றவர்களைக் கொண்டு தமிழ்நாட்டில் கொலை கொள்ளை நடாத்தி ஒட்டுமொத்த இந்தியத் தமிழர்கள் மத்தியில் இலங்கைத் தமிழர்கள் பற்றியும் அவர்களது போராட்டம் பற்றியும் ஒரு வெறுப்பை தோற்றுவித்தார்கள். இலங்கையிலே தமிழர் தலைவர்களை இயக்களைக் கொண்டே கொல்லவைத்து இலங்கைத் தமிழர்களிடையே இயக்கங்கள் மேலான வெறுப்பைத் தோற்றுவித்தார்கள்.
இவற்றிலிருந்து நாம் படிக்கவேண்டிய புதிய பாடம் ஒற்றுமை என்பது புலனாக வில்லையா?

அன்பான தமிழ் மக்களே!

ஏன் இன்னும் நாம் விழித்துக் கொள்ளாமல் இருக்கிறோம்??? ஏன் இன்னும் இன்னும் எம்மை நாமே அழிப்பதற்கு துணைபோகின்றோம்??? தயவுசெய்து சிந்தியுங்கள்!!!!!!!!

tmnadesan@hotmail.com

நன்றி: தணல்



Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis