.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Tuesday 10 November 2009

காணொளி: உமாமகேஸ்வரனின் தீர்க்க தரிசனம் - 1983

புளோட் உமாமகேஸ்வரனின் தீர்க்க தரிசனம் - 1983

க. உமாமகேஸ்வரன் (முகுந்தன், இறப்பு: ஜூலை 16, 1989), தமிழீழ மக்கள் விடுதலைக்கழக (புளொட்) இயக்கத்தின் செயலதிபரும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (டி.பி.எல்.எவ்) அமைப்பாளரும் ஆவார். 1976 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயற்படத்தொடங்கிய போது அதன் முதற் தலைவராக தெரிவுசெய்யப்பட்டவர். உமாமகேஸ்வரன் 1989 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி கடற்கரையோரத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.




வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை நிலஅளவையாளர் திணைக்களத்தின் உயரதிகாரியாக கடமையாற்றிய உமாமகேஸ்வரன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொழும்புக்கிளை செயலாளராகவும் நீண்டகாலமாக செயற்பட்டார்.

இக்காலகட்டத்தில் அவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம், அ. அமிர்தலிங்கம் போன்ற தமிழ்த் தலைவர்களுடன் மாத்திரமன்றி சிறுசிறுகுழுக்களாக செயற்பட்டு வந்த அனைத்து ஆயுதப்போராட்ட அமைப்புகளின் தலைவர்களையும் ஒன்றிணைத்து ஓரணியில் திரட்டும் தீவிர முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்தவர்.

1975 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் தனித்தும் சிறுசிறு குழுக்களாகவும் செயற்பட்டு வந்த ஈழப்புரட்சிகர அமைப்பு (ஈரோஸ்), புதிய புலிகள், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) போன்ற ஆரம்பகால போராட்ட அமைப்புகளின் தலைவர்களுடனும் நெருக்கமான நட்புறவை கொண்டிருந்தார். அவர்களுக்கான வெளியுலகத் தொடர்புகள் உட்பட பல்வேறு தேவைகளையும் கொழும்பில் இருந்தவாறே மேற்கொண்டிருந்தார்.

பாலஸ்தீனத்தில் ஆயுதப்பயிற்சியை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய உமாமகேஸ்வரன் தலைமறைவு வாழ்க்கையூடாகவே போராட்டப்பணிகளை முன்னெடுத்துச் சென்றார்.

அரசியல் ரீதியான கருத்து முரண்பாடுகள் காரணமாக 1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி தமிழீழ மக்கள் விடுதலை கழக (புளொட்)த்தை தோற்றுவித்தார்.

என். சண்முகதாசன், சரத்முத்தெட்டுவேகம, வாசுதேவ நாணயக்கார, விக்கிரமபாகு கருணாரட்ன, அண்ணாமலை போன்ற இடதுசாரி தலைவர்களுடனும் ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைவர் விஜயகுமாரணதுங்க மற்றும் தென்னிலங்கையின் முற்போக்கு சக்திகளுடனும் நெருக்கமான உறவை பேணிவந்தார் உமாமகேஸ்வரன். இதன் காரணமாக வவுனியாவின் எல்லைப்புற ஊர்கள் மற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெரும்பான்மையின இளைஞர்கள் இவரின் வழிகாட்டலை ஏற்று புளொட் அமைப்பில் இணைந்து செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

6 comments:

  1. உமாமகேஸ்வரனின் உரையை கேட்டு அதிர்ந்துபோனேன்.

    இவ்வாறு தமிழீழ விடுதலை போராட்டத்தில் தீர்க்கதரிசனமான தலைவர் ஒருவர் இருந்திருக்கிறார் என்பதை அறிந்து நான் உண்மையாகவே வியப்புற்றுள்ளேன். இவ் தலைவர் போன்றவர்கள் இன்று எம்மத்தியில் இல்லாமல் போனது எமது இனத்தின் சாவக்கேடு.

    தமிழீழ போராட்டத்தை சர்வதேச சமூகம் எவ்வாறு நசுக்கும் அதனையும் தாண்டி எமது விடுதலையை நாம் முன்னெடுத்தே தீரவேண்டும் என்ற அவரது ஆணித்தரமான நிலைப்பாட்டை நமது மக்கள் புரிந்து கொள்ளாமல் விட்டதுடன். அவரை ஒர் துரோகியாக சித்தரித்து இன்று அனைத்தையுமே இழந்துவிட்டு நடுவீதியில் நிற்கின்றோம்.

    நான் கருதுகின்றென் இவரது இயக்கம் 1988ம் ஆண்டு மாலைதீவை கைப்பற்ற முயற்சி செய்ததுகூட இந்தியாவில் இருந்து போராட முடியாது என்பதை நன்கு உணர்ந்து எமது போராட்டத்துக்கு ஒர் பின்புலம் தேவை என்பதை உணர்ந்துதான் மாலைதீவை கைப்பற்ற முயற்சி செய்திருக்கிறார்.

    இவர்கள் போன்ற தலைவர் இனிமேல் எமது இனத்தில் உருவாகுவார்களா? உமாமகேஸ்வரன் போன்ற தலைவர்கள் மீண்டும் எமக்கு வந்து எமக்கு விடுதலையை பெற்றுதருவாரா?

    தமிழீழ தேசத்தின்
    அபிமானி
    தென்னவன்

    ReplyDelete
  2. வெறுமனே வாயால் சொல்வது எளிது ! அதன் நடைமுறைச்சாத்தியம்பற்றி ஆராய்ந்து அதை முன்னெடுப்பதுதான் சிரமமான பணி !
    அப்படிப்பார்த்தால், தந்தை செல்வாதான்,” தமிழீழம் ஒன்றே தமிழனுக்கு ஒரேவழி ” என்பதை முதலில் வெளியிட்ட தீர்க்கதரிசி !
    லெனின், கார்ல்மர்க்ஸ் போன்றோர்தான் “ உலகில் அடக்குமுறைகள் ஒழிக்கப்படவேண்டும் “ என்று முதன்முதலில் உரைத்த தீர்க்கதரிசிகள் !

    எந்தவகையில், உமாமகேஸ்வரன் தீர்க்கதரிசியானார் ?

    மாலைதீவுக்கும், இந்தியாவுக்குமிடையில் பாதுகாப்பு உடன்பாடு உள்ளதென்பது தெரியாமல் -
    மாலைதீவைக்கைப்பற்றப்போய், மூக்குடைபட்டவரெல்லாம் தீர்க்கதரிசியாம் !
    ஹஹஹஹ்ஹஹ !

    ReplyDelete
  3. மாலைதீவுக்கும், இந்தியாவுக்குமிடையில் பாதுகாப்பு உடன்பாடு உள்ளதென்பது தெரியாமல் -
    மாலைதீவைக்கைப்பற்றப்போய், மூக்குடைபட்டவரெல்லாம் தீர்க்கதரிசியாம் !
    ஹஹஹஹ்ஹஹ !////
    read the real story. it was a coup planed by RAW. failed by nature. thats all. as usual RAW messed up and uma was in the middle of the play. like this only we know the problem. all movements started for the good thing.but other than ltte others were functioning for RAW. thats why all the movements was eleminated by ltte and ltte was eleminated by RAW. India want to control all the movements but no eelam. it was its policy forever. ltte only understood and came out of india. all these uma and pahtma. and douglas was fools and changed their policies. this is not the war created by tamils.it was created by india for its selfishness.

    ReplyDelete
  4. uma avargalin inap patru vanakkathukku uriyathu..... aanaal malatheevai kaippatruvathil intha RAW win kaikkooliyagave seyalbattaar...

    ReplyDelete
  5. உமாமகேஸ்வரனின் தீர்க்க தரிசனம்
    உமாமகேஸ்வரன் 1983ஆம் ஆண்டு தொடக்கம் இந்தியா ஒருகாலமும் இலங்கை பிரிக்கப்படுவதை அனுமதிக்காது என்பதை தெளிவாக எமது மக்களுக்கு கூறி வந்துள்ளார்.ஆனால் புலிகள் எமது தமிழ் மக்கள் அதை விளங்கிக்கொள்ள விடவில்லை.பெரூம்பான்மை சிங்கள மக்களுக்கு எமது தமிழ் மக்களின் பிரச்சினைகள் தெளிவாக விளங்கப்படுத்தப்பட வேண்டிய தேவையையும் சிங்கள மக்கள் மூலமாக இலங்கை அரசாங்கத்திற் கொடுக்கப்படும் அழுத்தங்கள் ஊடாகவே தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு ஒன்று கிடைக்க முடியும் என்பதை மிகவும் தெளிவாக கூறியுள்ளார்.அத்துடன் இந்தியா உட்பட எந்த ஒரு நாட்டின் இராணுவத் தலையீடும் எமது மக்களின் உரிமையை பெற்றுத் தரமாட்டாது மாறாக எமது மக்களின் கலை கலாச்சார பொருளாதார அழிவிற்கே வழிவகுக்கும் என்பதனை 1983ஆம் ஆண்டிலேயே மிகவும் தெளிவாக கூறியுள்ளார்.

    ReplyDelete
  6. uma is the greatest leader in the libatation struggle of the Eelam tamils and Singala.Prabaha and Mahinda is the same values.But Uma is 100% different than other leaders of bothe racess.If u are a good thinking people u can think what the stupid Praba did to the tamils and Singala.Praba has show that he is modaya(fool).If u tamil people want to kill some more Tamils ,hoist the tigers flag.as a singalese I know what Uma did for all the people of Sri Lanka.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis