.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Saturday 6 February 2010

காமக் களியாட்ட அமைச்சர்

காமுகன் கருணா "மாமா"வின் எச்சரிக்கை

காமக் களியாட்ட அமைச்சர் கருணாவால் வெளியிடப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் துண்டுப்பிரசுரம்.



அன்பார்ந்த தமிழ் பேசும் மக்களே

இலங்கையின் 6 வது ஜனாதிபதித் தேர்தலிலே எங்கள் மதிப்பிற்குரிய அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். இலங்கை மக்களின் அன்பும் ஆதரவும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது ஜனாதிபதிஜின் வெற்றிக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் ஏற்கனவே உங்களிடம் ஆட்சியின் பங்காளிகளாக நாம் மாற வேண்டுமெனவும், சிங்கள மக்கள் தமது தலைவனாக மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஜனாதிபதியாக்க முடிவு செய்து விட்டார்கள் எனவும் குறிப்பிட்டிருந்தேன். அது இன்று நடக்கவில்லையா...? தேர்தல் முடிவுகள் எனது கருத்தை பலப்படுத்தவில்லையா....? உங்களுக்கு என் கலக்கமும் குழப்பமும்...?

எமக்குரிய கடமை ஜனாதிபதியை பலப்படுத்தி எமது பிரதேச அபிவிருத்தியை, கல்வி அபிவிருத்தியை, பொருளாதார அபிவிருத்தியை, நிம்மதியை ஏற்படுத்த வேண்டும் என்பதாகும். இது எப்படி இருந்தாலும் எமது ஜனாதிபதி அவர்களே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருப்பதால் நாம் எதிர் காலத்தில் துஉர நோக்குப்பார்வையுடன் நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்துவது அவசியமானதாகும். எமது விசுவாசத்தையும், நட்பையும் இந்த ஜனாதிபதி தேர்தலிலே காட்டி இருப்போமானால் எமது தமிழ் மக்களின் மக்களின் நிலையம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பெருமையும் எங்கோ சென்றிருக்குமல்லவா...

பல்லாயிரக்கணக்கான் எமது இளைய சந்ததியினர் போர்க்களத்திலே பலிக்கடாக்களாக இன்னும் அழிவதுதான் உங்களுக்கு வேண்டுமா...? எமக்கு மீண்டும் கைதுகள், காணாமல் போதல், உயிரிழப்புகள், சொத்தளிப்புக்கள், நிம்மதியற்ற வாழ்வு என்பன தேவையா....? யுத்தமே வேண்டாம் காலத்துக்கு காலம் எம்மை தமிழ் வார்த்தைகளால் உசுப்பேற்றி எமது நிம்மதியை அளிக்கும் தமிழ் தேசியகஊட்டமைப்பு வேண்டவே வேண்டாம் இவர்கள் மூலம் தமிழ் மக்களின் வாழ்வு சிறப்படையுமா...? பலகோடி அபிவிருத்தியை செய்ய முடியுமா....? சீருடைக்காரருக்கு வாக்களித்து எமது பேரம் பேசிய சக்தியையும் பேரம் பேசிக்கொண்டிருக்கும் சக்தியையும் எதிர் காலத்தில் இழந்து விடுவதா...?

தொடர்ந்து தவறுகள் செய்து, செய்து மன்னிக்க முடியாத சமுதாயமாக நாம் இருக்காமல் எம்மை திருத்துவோம். அழைத்தவுடன் வரக்கூடிய நாம் சொல்வதை செய்யக்கூடிய, நம்பிக்கையாக எம் கோரிக்கைகளை நிறைவேற்றக்குடியவரை என்றும் எமது ஜனாதிபதியாக வைத்திருப்போம். இனிமேலாவது வெற்றியின் சின்னமான வெற்றிலை சின்னத்தின் பின் அணி திரள்வோம். நமக்கு நன்மை தரும் வகையில் செயத் படுவோம். வாழ்வை வளப்படுத்துவோம்.

என்றும் உங்கள் தலைவர்

கருணா அம்மான்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis