.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Monday 15 March 2010

சிங்களவரும் போற்றும் பிரபாகரன்

பிரபாகரனின் வீட்டுக்குச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு: பாதுகாப்பு வழங்குகிறது இராணுவம்

தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பினை உருவாக்கிய வேலுப்பிள்ளை பிரபாகரன் அமைதிக் காலத்தின் போது அடையமுடியாத ஒன்றை மறைவின் பின்னர் அடைந்திருக்கிறார் என இந்திய ஊடகவியலாளர் எழுதியுள்ளார்.

இந்திய ஊடகமொன்றின் செய்தியாளர் வல்வெட்டித்துறையில் இருந்து அந்த ஊடகத்தில் எழுதியுள்ளாதாவது,

நாட்டினது பெரும்பான்மைச் சிங்கள சமூகத்தின் குறித்ததொரு பகுதியினர் மத்தியில் பிரபாகரனின் புகழ் மேலோங்கிக் காணப்படுகிறது.


யாழ்ப்பாண நகரிலிருந்து 30 கி.மீ தூரத்தில் வல்வெட்டித்துறையில் அமைந்திருக்கும் பிரபாகரன் சிறுபராயத்தில் வாழ்ந்த வீட்டினைப் பாதுகாக்கும் பணியில் சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் சிங்கள உல்லாசப் பயணிகள் பிரபாகரனின் வீட்டை போரின் வெற்றிச் சின்னமாகக் கருதிப் படையெடுப்பதையடுத்தே அங்கு இராணுவத்தினர் நிலைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

பிரபாகரன் மறைவுடன் விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்ததைத் தொடந்து 30 வருடங்களுக்கும் மேலாக யுத்தம் இடம்பெற்றுவந்த நாட்டினது வடக்குக் கிழக்குப் பகுதியில் இருந்துவந்த பதற்றம் பெரிதும் தணிந்திருக்கிறது.

இதன் விளைவாக மக்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றுவரக்கூடிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

நாட்டினது வடக்கினையும் தெற்கினையும் இணைக்கும் யாழ்-கண்டி நெடுஞ்சாலை கடந்த சனவரி முதல் மக்கள் போக்குவரவுக்காகத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து தென்பகுதிச் சிங்களவர்கள் யாழ்ப்பாணத்திற்குப் படையெடுத்து வருகிறார்கள்.

இவ்வாறாக பேருந்துகளிலும் வான்களிலும் யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் சிங்களவர்கள், பிரபாகரன் தனது இளமைக் காலத்தில் வசித்துவந்த வீட்டினைப் பார்ப்பதற்காக வல்வெட்டித்துறைக்கும் செல்கிறார்கள்.

அரசாங்க ஊழியரான பிரபாகரனது தந்தையாரது இந்த வீட்டினை தூரத்திருந்து பார்க்கும்போது உருக்குலைந்த நிலையிலேயே அது காணப்படுகிறது. வீட்டின் வர்ண்ணப் பூச்சுக்கள் மங்கிப்போய்விட்டன, சுற்றுமதில் உடைந்து காணப்படுகிறது. நீண்ட காலமாக இந்த வீட்டில் எவரும் குடியிருக்கவில்லைப் போலும்.

பிரபாகரனது சிறுபராய வீடு உருக்குலைந்த நிலையில் காணப்பட்டாலும் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்யும் தென்பகுதிச் சிங்களச் சுற்றுலாப்பயணிகளுக்கு ஒர் சுற்றுலா மையமாகவே அது திகழ்கிறது.

சிலர் வீட்டுச் சுவரில் தங்களது குறிப்புக்களை எழுதிவிட்டுச் செல்கிறார்கள், வேறுசிலர் வீட்டிலிருந்து சிறு கற்களை உடைத்தெடுத்துச் செல்கிறார்கள். “இந்த வீடு ஓர் குப்பைத்தொட்டியாக மாறிவிட்டது” என உள்ளுர் கடைக்காரர் ஒருவர் தெரிவித்தார். ‘மகாஜன் கபே’ எனச் சிங்களத்தில் வீட்டினது சுவரில் எழுதப்பட்டிருக்கிறது.

வல்வெட்டித்துறை என்ற இந்தக் கரையோரக் கிராமத்தில் இந்துக்களும் கிறீஸ்தவர்களுமே வாழ்ந்து வருகிறார்கள். 1989ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையினர் தளமொன்றை வல்வெட்டித்துறையில் அமைத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வேலுப்பிள்ளையினது வீட்டைப் பார்வையிட வரும் சிங்களவர்கள் வீட்டுச் சுவரில் கண்டதையும் எழுதுகிறார்கள் என்றும் கற்களை உடைத்துச் செல்கிறார்கள் என்றும் அயலிலுள்ள தமிழர்கள் இராணுவத்தினரிடம் முறையிட்டார்கள்.

தற்போது சிங்கள உல்லாசப் பயணிகள் பிரபாகரனது சிறுபராய வீட்டினை அசிங்கப்படுத்தாதவாறு, அதனைச் சுற்றி இராணுவத்தினர் 24 மணிநேரமும் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

“வீட்டுக்கு முன்னால் வாகனங்களை நிறுத்துவதற்கு நாம் அனுமதிப்பதில்லை” என கெமுணு வோச் படைப்பிரிவினைச் சேர்ந்த இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1995ம் ஆண்டு கெமுணு வோச் படைப்பிரிவே விடுதலைப் புலிகளிடமிருந்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்றி:
புதினப்பலகை

1 comment:

  1. பிறபாகரன் மறைந்துவிட்டார் என்றால் அதற்கு என்ன பொருள்?

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis