.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Tuesday 20 April 2010

இலண்டனில் சர்வதேச தமிழர் விளையாட்டு விருது

இலண்டனில் நடந்த சர்வதேச தமிழர் விளையாட்டு விருது வழங்கும் விழா 2010

அ.மயூரன், இலண்டன்.

சர்வதேச தமிழர் விளையாட்டு விழாவின் 2009 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த 10 ஆம் திகதி. (10.04.2010) லண்டன் ஓவல் சர்வதேச கிரிக்கெட் மைதான மண்டபத்தில் இடம் பெற்றது. நாம் அறிந்தவரையிலே முதன் முதலாக சர்வதேச ரீதியில் தமிழர் விளையாட்டு விருதுவழங்கும் நிகழ்வு இந்த ஆண்டிலேயே இடம்பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையில் தமிழர்களின் விளையாட்டு என்று கூறும் போது அதற்கு நீண்ட ஒரு வரலாற்றுப் பிநண்ணனி உண்டு. சங்க்காலத்திற்கு முன்பிருந்தே தமிழன் விளையாட்டுக்களில் திறமைசாலியாக இருந்தான் என்பதனை “செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று அல்ல்ல் நீத்த நான்கே.” (தொல் - மெய் - 11) என்ற தொல்காப்பியர்’ செய்யுள் சான்று பகர்கின்றது. அதில் அவர் விளையாட்டு என்பதற்கான வரைவிலக்கணத்தைக் கூறாது விட்டாலும் மனமகிழ்ச்சி ஊட்டும் ஒரு செயலே விளையாட்டு எனக் கூறுகின்றார்.

அத்துடன் சங்க்காலத்து நற்றிணையில் கூட

“விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது இளையோர் இல்லிடத்து இற்செறித் திருத்தல் அறனும் அன்றே ஆக்கமும் தேயம்” (நற்றிணை – 68:1-3)

அதாவது உடலை நல்லமுறையில் பேணுதல் அறம் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் உடல்திறனும், தேடிய செல்வமும் அழியும். என்று கூறுகின்றது நற்றிணை. ஆகவே அறிவுக்கும், உடலுக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி அளிப்பது விளையாட்டு. விளையாட்டு என்றால் விரும்பி ஆடுகின்ற ஆட்டம். அது இன்பத்தைக் கொடுகின்றது. என்றும் பொருள் கூறுகின்றார்கள். அத்துடன் இந்த விளையாட்டானது ஒருவனுடன் அடுத்தவனைத் தோழமை கொள்ளவும், ஓரணிக்குள் திரண்டு பயிற்சியைப் பெறவும், எல்லைகள் கடந்து நேசத்தை இணைக்கின்ற பாலமாகவும் இணைக்கின்றது. அந்த வகையில் தான் புலம் பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகள் எங்கும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் கடந்த வருடம் பிரிந்த்தானியாவில் இடம்பெற்ற தமிழர் விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு கடந்த 10 ஆம் திகதி இடம் பெற்றது.

இந்த நிகழ்வினை வெகு சிறப்பாக இந்த வருடம் சர்வதேச ரீதியாக வென்றவர்களுக்கான ஆண்டு விருது விழாவினை பிரிந்த்தானிய தமிழர் விளையாட்டுக்கழகம் நடாத்தியது. இதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்திருந்த இடம் ஒவல் சர்வதேச கிரிக்கற் விளையாட்டு மைதானத்திற்குள் அமைந்துள்ள மண்டபம். இது ஒரு மிக முக்கியமான மைல் கைல்லாகும். இந்த விளையாட்டு விழா பற்றிய பார்வைகளுக்கு முன்னர் பிரிந்த்தானிய தமிழர் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் இலட்சினையை ஒருகணம் நோக்குதல் சிறந்த்து என நினைக்கின்றேன்.

அவர்கள் தமது இலட்சினையில் ஒரு ஆண் விளையாட்டு வீரனும், ஒரு பெண் விளையாட்டு வீராங்கனையும், ஓட்டப்பந்தையத்தடத்தில் நின்று சங்கு ஒலிக்கின்றனர். இது ஒரு முக்கிய செய்தியினைக் கூறுகின்றது. எனக்கு பாரதிதாசன் பாடல் ஒன்று இங்கு ஞாபகத்திற்கு வருகின்றது.

“எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு”

என்பது பாரதிதாசனின் பாடல். நான் நினைக்கின்றேன். அந்தப் பாடலடிகளை மையமாக வைத்து இந்த இலட்சனை உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று. ஏனெனில் சங்கானது கடல் மடியிலிருந்து கிடைக்கின்றது. அத்துடன் கடலானது உலகம் முழுவதையும் இணைக்கும் பாலமாகவும் அமைகின்றது. ஆகவே அப்படி உலகம் முழுவதையும் இணைக்கும் பாலமான கடலிலிருந்து கிடைக்கப் பெற்ற சங்கை எடுத்து ஊதிக் கொண்டிருப்பதால் உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைக்கின்ற பாலமாக இந்தச் சங்கொலியுடன் கூடிய இலட்சனை விளங்குவதாகவே எண்ணத் தோன்றுகின்றது. அத்துடன் பண்டைத்தமிழர்கள் தங்கள் விளையாட்டுக்களினை ஆரம்பித்து வைப்பதற்கு சங்கு, முழவு, பறை போன்றவற்றை பயன்படுத்தினான் என்பதனை அறிய முடிகின்றது. ஆகவே இதனை உணர்த்துவதாகவும் இவ் இலட்சினை அமைந்திருக்கலாம்.

கடந்த 10 ஆம் திகதி மாலை 7 மணியளவில் அக வணக்கத்துடனும் தமிழ்த் தாய் வாழ்த்துடனும் ஆரம்பமான இந்நிகழ்வினை விளையாட்டுத் துறையின் செயலாளர் ஜோய் பூரணச்சந்திரன் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார். இதில் நடன நிகழ்வுகள், பாடல்கள், உரைகள், இரவுப் போசனம் ஆகியன இடம்பெற்றன. இந்த விருது வழங்கும் நிகழ்வில் பல நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். வர்த்தகர்கள், கல்விமான்கள், மாணவர்கள், மக்கள் என்று மண்டபம் நிறைந்திருந்த்து. இந்த நிகழ்வில் பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் வருகை தந்திருந்தனர்.

பிரதம விருந்தினராக பிரித்தானிய இளைஞர்கள் விவகார அமைச்சர் டோன் பற்லர். (Hon. Minster Ms. Dawn Butler MP Minister for young Citizen and Youth engagement) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களான பரி காட்ணர் (Barry Gardiner MP) சிபோன் மக்டொனால்ட் (Siobhain McDonald MP) ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் முன்னாள் லண்டன் மேயர் கென் லிவிங்ஸ்ட்ன், பிரித்தானிய நிழல் வெளிவிவகார அமைச்சர் கேரத் தோமஸ். ஆகியோரும் தங்கள் ஆதரவுகளையும் கருத்துக்களையும் வழங்கியிருந்தனர். இவர்கள் அனைவரும் இந்த விளையாட்டுப் போட்டியும் விருதுவழங்கும் நிகழ்வும் சர்வதேச ரீதியாக மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று கூறினர்.

அத்துடன் இந்த நிகழ்வைத் தொகுத்து வழங்கிய தமிழ்ப்பாடசாலைகளின் விளையாட்டுத்துறைச் செயலாளர் திரு. ஜோய் பூரணச்சந்திரன் அவர்கள் “இந்த விளையாட்டு நிகழ்வும் விருதுவழங்கலும் உலகம் முழுவதும் நடைபெற வேண்டும் என்று கூறியதோடு அனைத்துத் தமிழ் விளையாட்டு அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஒருகுடையின்கீழ் செயற்பட வேண்டும் என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசிய இளைஞர்கள் விவகார அமைச்சர், டோன் பற்லர், சிறப்புரையாற்றும் போது எவ்வளவோ தடைகளைத் தாண்டி தமிழர்கள் இன்று இந்த நிகழ்வினை நடத்துகின்றார்கள். இது அவர்களது துணிச்சலையே காட்டுகின்றது. நிச்சயமாக 2012 ஆம் லண்டனில் நடைபெற இருக்கின்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் அதிக தமிழர்களைக் காணமுடியும் என்றார். அத்துடன் பல விருதுகளை அவர்கள் பெற தான் வாழ்த்துவதாகவும் கூறினார். அதனைத் தொடர்ந்து பேசிய விளையாட்டுத்துறையின் தலைவர் அருணாசலம் திருக்கேதீஸ்வரன் அவர்கள். தமிழர் சமுதாயத்தில் முதன் முதலாக நடைபெறுகின்ற நிகழ்வு இந்த நிகழ்வாகும். என்று பெருமையடைந்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 2009 ஆண்டு விருதுபெற்றவர்களுக்கான விருதுகள் நடைபெற்றன. அந்த வகையில் 2009 ற்கான சிறுவர் கிரிக்கற் போட்டியின் விருதினை நிஷாந் செல்வகுமார் அவர்களும், 2009 ஆம் ஆண்டுக்கான துடுப்பாட்டப் போட்டியின் விருதினை அருண் ஹரிநாத் அவர்களும், சிறுவர் உதைபந்தாட்டத்திற்கான 2009 ஆண்டு விருதினை வினோதன் சத்தியமூர்த்தி அவர்களும், உதைபந்தாட்டத்திற்கான கடந்த ஆண்டு விருதினை சிமிலன் ஆனந்தஜெயராஜா அவர்களும், கரைப்பந்தாட்டத்தின் 2009 ற்கான ஆண்டு விருதினை தயாளன் சின்னத்துரை. அவர்களும், பெற்றுக்கொண்டனர்.

மேலும் சிறுவர்களுக்கான தடகளப்போட்டியின் 2009 இற்கான ஆண்கள் பிரிவின் விருதினை மதுசான் யூட் றொனில். அவர்களும், சிறுவர்கள் தடகளப் போட்டியின் பெண்கள் பிரிவின் 2009 ஆம் ஆண்டுக்கான விருதினை நற்றலி ஜோர்ஜ் அவர்களும், தடகளப்போட்டியின் ஆண்கள் பிரிவில் 2009 ஆம் ஆண்டுக்கான விருதினை நவஜீவன் பர்ராஜசிங்கம் அவர்களும், தடகளப் போட்டியின் பெண்கள் பிரிவில் 2009 ஆண்டுக்கான விருதினை கனிஷயா நடராஜா அவர்களும், சிறுமிகளுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியின் 2009 ஆண்டின் விருதினை நற்றலி ஜோர்ஜ் அவர்களும், பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியின் 2009 ஆம் ஆண்டுக்கான விருதினை ரதிகலாதேவி ஆனந்தவடிவேல் அவர்களும், சர்வதேச தமிழர் விளையாட்டு விழாவின் விளையாட்டுத் துறை வாழ்க்கைச் சாதனையாளர் 2009 இநற்கான விருதினை நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்களும் பெற்றுக்கொண்டனர்.

பொதுவாக புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் சூழ்நிலையில் அவர்களை ஒருமைப்படுத்தக்கூடிய நிகழ்வாகவே இவற்றைப் பார்க்கமுடிந்த்து. அத்துடன் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் பல்வேறு துறைகளிலும்முன்னேற்றம் அடைந்திருக்கும் நிலையில் அவர்கள் விளையாட்டுத் துறையிலும் தங்களது கவனத்தைச் செலுத்த்த் தொடங்கியுள்ளனர் என்பது இந்நிகழ்வின் மூலம் தெட்டத்தெளிவாகத் தெரிந்த்து. இனிவரும் காலங்களில் புலம்பெயர்ந்து வாழும் விளையாட்டு வீர்ர்கள் தாயகத்தில் சென்று விளையாடவும், தாயகத்தில் உள்ள வீர்ர்கள் புலம்பெயர் தேசத்தில் வந்து விளையாடவும் இது போன்ற விளையாட்டுக்களும், விருதுவழங்கும் நிகழ்வுகளும் உதவும் என நினைக்கின்றேன்.

நன்றி
வீரகேசரி வாரமலர்.
(18.04.10)

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis