.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Monday 14 June 2010

ஈழத்தமிழருக்கு பிரித்தானிய மகாராணி "சேர்" பட்டம்

ஈழத்தமிழரான பேராசிரியர், மருத்துவர் சபாரத்தினம் அருள்குமரன் அவர்கள் பிரித்தானிய மகாராணியால் "சேர்" பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் சபாரத்திரனம் அருள்குமரனுக்கு இங்கிலாந்தின் உயர் விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் நைட் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய மகாராணியின் பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் அருள் குமரனின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மகளிர் நல மருத்துவம் குறிப்பாக மகப்பேற்று மருத்துவ சிகிச்சை முறைமைகளுக்கு வைத்திய ரீதியாக ஆற்றிய அளப்பரிய பங்களிப்பினை கௌரவிக்கும் வகையில் இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

லண்டன் சென் ஜோர்ஜ் பல்கலைக மகப்பேற்று பிரிவு தலைவராகவும், சென் ஜோர்ஜ் வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவு மேலாளராகவும் அருள்குமரன் கடமையாற்றி வருகின்றார்.

பிரித்தானிய அரசாங்கம் இவ்வாறான ஓர் கௌரவத்தை வழங்கும் என தாம் எதிர்பார்க்கவில்லை எனவும், நைட் பட்டம் வழங்கப்பட்டமை மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் அருள்குமரன் தெரிவித்துள்ளார்.

61 வயதான சபாரத்தினம் அருள்குமரன், யாழ்ப்பாணம் கந்தர்மடத்தை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அருள்குமரன் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் மஹஜன கல்லூரியில் தமது பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்து பின்னர் கொழும்பு மருத்துவ கல்லூரியில் மருத்துவ மாணி பட்டம் பெற்றுக் கொண்டார்.

http://www.elsevier.com/wps/find/editorshome.editors/arulkumaran

http://www.hospitaldr.co.uk/features/interview-prof-sir-sabaratnam-arulkumaran

http://news.sma.org.sg/4108/Feature.pdf

http://www.lankanewspapers.com/news/2007/4/14249_3.html

http://www.obgyn.net/displayarticle.asp?page=%2Fbibliography%2Farulkumaran

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis