.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Friday 4 June 2010

முத்தமிழ்க் காவலனே! முதல்வனே!!

உலகத் தமிழர் உன்னத தலைவா!
உன்னை நம்பியே சூழ இருந்தவர்
அழகாய் தமிழில் ஆயிரம் பட்டம்
அடுக்காய் சூட்ட ஆர்வம் கொண்டனர்.
மெழுகாய் தணலில் வெந்தவர் துயரினை
மீண்டும் எடுத்தனை. வெற்று வாயினால்
அழுதாய். ஆயிரம்கடிதம் அரசிற்கு அனுப்பினை.
ஆயினும் பதில் வந்ததோ இன்று?


கலைஞரின் ஈழத்திற்கான செம்மொழிப் பாடல்

முத்தமிழ் காவலா! மு. கருணாநிதி என்னும்
முதலமைச்சே! "மூன்று" தேவி கொண்ட (மூதேவி)
பித்தனே! பிசாசே! பிறை நூறு கண்டும்
பெரும் பதவி மோகம் கொண்ட எம்
சத்துரு நீயே! சாகும் போதும்
சரியாசனத்தில் சரியும் உந்தன்
அத்தனை கனவும் அடைந்தனை கண்டாய்.
ஆசை என்னும் தீர்ந்தது இல்லை.

மஞ்சள் பையுடன் மதுரை ரயில் ஏறி
மக்களை மாற்ற புறப்பட்டாய்.
அஞ்சு முறை ஆட்சியில் அமர்ந்தனை.
அரிய செல்வம் உன்னையடைந்திட
என்ன மாய்மாலம் செய்தனை தலைவா?
எத்தனை முறை ஏமாற்றி
தண்ணீர் கொண்டுமே தயிர் கடைந்தனை.
தமிழன் தலையினில் எண்ணெய் தடவினை.





உந்தன் குடும்பம் உயர்ந்து வளர்ந்தது.
உலகின் பெரிய செல்வந்தனானது.
சொந்தம் பெயரினில் சொத்துகள் சேர்ந்தது.
செய்மதி கூட உன்வசமானது.
வந்த தம்பியர் வசமாய் பட்டனர்.
வைத்திருந்த செல்வம் இழந்தனர்.
நம்பினோர் எல்லாம் நாமம் தரித்தனர்.
நடுத்தெருவினில் நின்று தேம்பினார்.






தலை அருகினில் மனைவி அமர்ந்திட
தராம் என்றவள் கை பிடித்திட
கலை நின்ற கால்கள் தழுவிடும்
கலைஞர் தோழி கண் சிமிட்டிட
வலை விழுந்தனை வழுக்கை தலையனே!
வாரிசு தமக்கு வரிசையாய் பதவி
நிலை வேண்டினை நிம்மதி பெற்றனை.
நீள் துயில் கொண்டிட நேரமும் இல்லை.

என்னவெல்லாம் செய்தாய். எழுத்தால் அழுதாய்.
இடுப்பு நோக ஊர்வலம் கண்டாய்.
அன்றுடன் விலகல் என்றாய். இல்லை என்றாய்
அரை நாள் பொழுதில் அடிசில் தவிர்த்து
உண்ணா திருந்தாய். உந்தன் வாயினால்
உயிரினை போக்கும் ஆயுதம் தவிர்த்தல்
என்னும் செய்தி வந்தது என்றாய்.
ஏமாற்ரிடும் உன் தந்திரம் வென்றாய் .

இங்கு தமிழினம் இறந்து விழுந்திட
இளையோர் தமக்கு பதவி பெற்றிட
அங்கு தங்கியே பிச்சை ஏந்தினை
இடையிடை நினைவு வந்திட
என்குலம் பற்றி எழும்பி குதித்தனை .
இடையே நடிகையர் இடையை தொடையை
பொங்கும் தனங்களை பார்த்து ரசித்தனை .
போதும் தலைவா! உன் போக்கிரித்தனம்'


ஆக்கம்:டாக்டர். சிவா, தமிழீழம்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis