.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Wednesday 7 July 2010

”திராவிடம் என்று சொல்லி நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம்” - பாரதிராஜா

பெட்னா(FeTNA) நிகழ்வில் உரையாற்றிய இயக்குநர் இமயம்



என்ன திராவிடம்?

திராவிடம் பேசுகின்றீர்களே, தோழர்களே. என் இனத் தமிழன் செத்து ஒழிந்தானே. அண்டை மாநிலத்தில் ஒருவன் எனக்காகக் கண்ணீர் வடித்தானா?!

திராவிடம் என்கிற சொல் - பெரியார் - வணக்கத்திற்குரிய தலைவர். இல்லையென்று சொல்லவில்லை. ஒரு காலகட்டத்தில் தமிழனை தட்டி எழுப்பினீர்கள். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் தமிழனைத் தான் நீ அழிச்ச; கேரளாவில சொல்லல; ஆந்திராவில சொல்லல; கர்நாடகத்தில சொல்லல.

பகுத்தறிவுவாதி திராவிடம் என்று சொல்லிச் சொல்லிச் சொல்லி; இன்று வரைக்கும் தமிழன் உணர்வு செத்துப் போய்விட்டது. நாமெல்லாம் தொப்புள் கொடி உறவு போலிருக்குன்னு தப்பா நினைச்சுட்டோம். திராவிடம் என்று சொல்லி நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம்.

1 comment:

  1. முதலில் ஈழத்தமிழர்களுக்குள் ஒற்றுமை வேண்டும்... பின்னர் உலகத்தமிழர் ஒற்றுமை சரிதானே..? தவறா?

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis