.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Saturday 8 October 2016

ரஜனியினை சந்தித்த அதிமுக நிர்வாகிகள்

அம்மாவின் ஆலோசனையின் கீழ்  ரஜனியினை சந்தித்த அதிமுக நிர்வாகிகள்.


தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 14 நாட்களாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்து வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அப்பலோ மருத்துவமனை கட்டிலில் இருக்கின்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தற்போது புதிய விடயமாக தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதனை விரைவில் ஜெயா அறிவிக்கப்போகவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதில் முதல்வர் பதவிக்கு தமிழ் தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்துள்ள ஜெயலலிதா திரையுலக ஜாம்பவானாக இருக்கக்கூடிய ரஜனியினை குறிவைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஏழவே நடிகர் அஜித்குமாரை அடுத்த முதல்வராக அறிவித்ததாக செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் அஜித் அதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் அதிமுக நிர்வாகிகள் அம்மாவின் ஆலோசனையின் கீழ் ரஜனியினை சந்தித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் அடுத்த முதல்வராக  தலைவர்களாக இருக்கக்கூடிய பன்னீர் செல்வம்  ஆகியோர் மீது நம்பிக்கை இழந்த நிலையில், ரஜனியினை முதல்வராக்க மறைமுகமாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

தற்போது ரஜனிக்கு தமிழக மக்கள் மத்தியில் இருக்கின்ற செல்வாக்கினையும்,மதிப்பினையும் சரியாக மதிப்பிட்டுள்ள அதிமுக நிர்வாகிகள், இதற்கான நடவடிக்கையில் ஈடுப்பட்டுவருவதாக தகவல் கசிந்துள்ளது.

1 comment:

  1. இது ஆவறதில்லை. சசிகலா கும்பல் சந்துலே சிந்து பாய்ந்து நாலு காசு பார்க்க வேண்டாமா? இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? நடத்துங்க. எப்போதும் போல ஏழை சனங்க எம்ஜீயாரது இரட்டை இலைக்குத் தானே ஓட்டுப் போட்டு விட்டு இலவசத்தை எதிர்பார்த்து காலத்தை ஓட்டப்போறாங்க.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis