.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..
Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு. Show all posts

Tuesday, 13 July 2010

தமிழ் செம்மொழி தமிழன் செம்மறி

வட இந்தியன் பார்வையில் தமிழ் செம்மொழி தமிழன் செம்மறி. தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம் கொடுத்துத் தமிழனுக்குச் செம்மறி பட்டம் கொடுத்துள்ளது இந்திய அரசு. 500 தமிழ்நாட்டு மீனவர்கள் இறந்தும் கண்துடைப்பேற்கேனும் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?! அறவேயில்லை. ஒரு தமிழன் அல்லாத இந்தியனை இவ்வாறு பிற நாட்டுப் படைகள் கொன்றால் இந்திய மத்திய அரசினதும், அந்த மாநிலத்தினதும் நடவடிக்கைகள் வேறு விதமானவையாகவே இருக்கும்.

செம்மொழி மாநாட்டின் ஆரம்ப விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற அதிபர் பிரதிபா பட்டீல் மற்றும் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, பின்லாந்து நாட்டில் இருந்து பங்கேற்ற அஸ்கோ பார்போலா ஆகியோருக்கு தமிழ் தெரியாததால் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினர்.ஆனால் நன்கு தமிழ் தெரிந்த நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயர் சிறப்பு விருந்தினர்கள் பெயர் பட்டியலில் இல்லை. தமிழுக்குக் கலைஞர் செய்யும் மரியாதை இதுதான்.

தமிழீழத் தமிழரைக் காக்க இயலாத தமிழகத் தமிழர் இன்று, தமிழகத் தமிழரையே காப்பாற்ற இயலாதிருப்பது தமிழினத்திற்கு உலகில் எங்காவது ஒரு சுய ஆதிக்கம் உள்ள நாடாவது தேவை என்பதையே உணர்த்துகிறது.

புலிகள் இருந்தவரை அரச படைகள் கடுமையாக நடந்து கொள்வது ஒரளவாவது நியாயப்படுத்தப்படக் கூடியது. தொடர்ந்தும் தமிழக மீனவர் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுவது இன அழிப்பிற்கான இன வாதத்தின் முனைப்பாகவே கருதப்படவேண்டும்.

இதனை இந்திய அரசு தொடர்ந்தும் கடுமையான நடவடிக்கை எடுக்காமல் தொடர இடம் கொடுப்பது கூட, இந்திய நடுவண் அரசின் ஆரிய திராவிட பாராபட்ச நிலையையே வெளிப்படுத்துகிறது.

இன்றைய பூகோளத்தின் மிகக் கொடிய பாரிய இன அழிப்புத் தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணை இதுவரை தொடங்காதிருப்பதன் செய்தியும் இது தான். தமிழருக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பில் குரல் கொடுக்க உலகில் தமிழனிற்கு என்று ஒரு நாடு தேவை.

ஐக்கிய நாடுகளிற்கான இந்தியாவின் பிரதிநிதி வாய் பேச மாட்டாதவரா ? இல்லை காது கண்கள் போன்றவை செயற்படாதவரா? இல்லை, அவரும், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், இராஜாங்க அமைச்சும், வெளிநாட்டமைச்சும், இந்திய பாதுகாப்பு அமைச்சும் தமிழரை இந்தியாவின் இரண்டாந்தரப் பிரஜைகளாகவே கணிக்கின்றனவா? உங்களின் சீமானைக் கைது செய்த வேகம் எங்கே?

புலிகள் தனிநாட்டிற்காக தற்கொலை போராளிகளாக மாறியமைக்கான காரணங்களை உலகானது இந்த இந்திய இலங்கை அரசுகளின் மாற்றான் தாய் மனப்பான்மையூடாகவே பார்க்க வேண்டும்.

இலவம் பூ வெடிப்பது இனத்தைப் பெருக்க. கரும்புலிகள் வெடித்தது இனத்தைக் காக்க. இதை சர்வ தேசத்திற்கு உறைக்கும் வகையில் இவ்வாறான கருத்துருவாக்ககங்கள் தமிழர் வாழும் அந்ததந்த நாட்டு ஊடகங்களில் வெளியாக வேண்டும்.

புலிகளை பயங்கரவாதிகள் என்று அழித்தவர்களே!

அரசியல் உரிமைகளைத்தான் விட்டாலும் தமிழர் உயிர்களையாவுது காப்பாற்ற வேண்டாமா?

இதைப் படிக்கும் இந்திய புலனாய்வுத் துறையினரே!

இப்போது இங்கே கொட்டப்படுவது இனத் துவேஜசம் அல்ல. தாயக மண்ணிலும் மட்டுமல்ல வள்ளுவன் சிலை பார்த்திருக்க கடலிலும் கொட்டுவது தமிழின் செம்மொழி இரத்தமே!

கலைஞரே!

இதுதான் செம் மொழி அந்தஸ்தைத் பெற்றுக் கொடுத்ததின் கூலியா? உங்கள் ஸ்ராலினோ, கனிமொழியோ சுட்டுக் கொல்லப்பட்டிருந்தாலும் இந்திய தேசிய உணர்வால் இப்படித்தான் அறிக்கை எழுதி விட்டு அடுத்த அலுவலைப் பார்ப்பீர்களா?

தண்டவாளம் வண்டவாளமாகியது எப்போது? சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இன்றைய தமிழக மாநில மத்திய அரசு உறவு போன்ற சுமுக நிலை என்றும் இருந்ததில்லை. இன்றே எதையும் உங்களால் செய்ய முடியவில்லை என்றால் உங்களிடம் “றெயினிங்” எடுக்கும் ஸ்ராலினும் எதிர்காலத்தில் இதைத் தான் செய்வாரா?

இலங்கை சென்று பொன்னாடை போர்த்திய அமைச்சர் பாலு எங்கே?

நம் இரத்தத்தின் இரத்தங்களே!

அடுத்த முதல்வராக ஆவது ஒரு உண்மையான தமிழனைத் தெரிவு செய்து பாருங்கள். நிட்சயம் அவனது தசையாவது ஆடும்.

இப்படிக் கவிதை பாடி காலத்தைக் கடத்தாது. புலம் பெயர் தமிழர்களே!

முத்துக்குமார் முத்தா குளித்தான் நமக்காக? நாங்கள் நன்றியுள்ள மானத் தமிழர்கள் தானா?

பிரபாகரனே! நீ உறுதியான தலைவனல்ல உண்மையான தமிழர் தெய்வமாக உயர்ந்து கொண்டிருக்கிறாய்.

மா வீரர்களே! எங்களை மன்னியுங்கள்! உங்கள் கல்லறைகளைக் கூட காக்க இயலாத பாவிகள் நாங்கள்.

அங்கே இலங்கைக் கொடியில் ஒரு சிங்கம். இந்தியாவின் இலச்சனையில் மூன்று சிங்கங்களா?

Sunday, 20 June 2010

நாம் வீழ்ந்தாலும் தமிழ் வீழக்கூடாது.

செம்மொழி மாநாடால் கலைஞருக்கு வேண்டப்படாத புகழும், அரசியல் அனுகூலங்களும் கிடைக்கப் போவதென்பது உண்மை. கலைஞரை மட்டும் குறைசொல்லி ஏது பலன்? நாம எல்லோரும் ஒருத்தரை ஒருத்தர் நாம் கொண்ட கொள்கைக்காகப் பிடறியில் குத்துவதில்லையா?! இன்று தமிழினம் என்றுமில்லாதாவாறு பிளவுபட்டுள்ளது. ஓற்றுமையே பலம்; அடம்பன் கொடியும் திரண்டால்தான் மிடுக்கு. கருத்தியல் வேற்றுமைகளைக் களைந்து தமிழுக்காகத் தமிழின் பெயரில் ஒன்றுபடுவோம். ஓன்றுபட்டு தமிழினதும் தமிழர்களினதும் வளர்ச்சிக்கும் சளைக்காது உழைப்போம். சாதி, மத, மார்க்க, வர்க்க, நெறி, அரசியல், சித்தாந்த, கொள்கை, கருத்தியல் வேற்றுமைகளைக் களைந்து தாய்த்தமிழின் பெயரில் ஒன்றுபடுவோம். நாம் வீழ்ந்தாலும் தமிழ் வீழக்கூடாது. நன்றி.


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 ஆம் ஆண்டு சூன் 23 முதல் சூன் 27 வரை கோயம்புத்தூரில் கொடிசியா வளாகத்தில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் 2010 இல் நடைபெற இருந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு ஈடாகத் தமிழக முதல்வர் மு. கருணாநிதி இந்த மாநாட்டை ஒருங்கிணைத்து இருக்கிறார். இந்த மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாட்டையும் சேர்த்து நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

****
கலைஞரை மன்னித்து செம்மொழித் தமிழுக்கு ஆதரவு கொடுக்கலாமா? செம்மொழியான தமிழ் மொழியாம்.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்
http://www.facebook.com/group.php?gid=110137469026235
*****

Tuesday, 8 June 2010

கலைஞரை மன்னித்து செம்மொழித் தமிழுக்கு ஆதரவு கொடுக்கலாமா?

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 ஆம் ஆண்டு சூன் 23 முதல் சூன் 27 வரை கோயம்புத்தூரில் கொடிசியா வளாகத்தில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் 2010 இல் நடைபெற இருந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு ஈடாகத் தமிழக முதல்வர் மு. கருணாநிதி இந்த மாநாட்டை ஒருங்கிணைத்து இருக்கிறார். இந்த மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாட்டையும் சேர்த்து நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

****
கலைஞரை மன்னித்து செம்மொழித் தமிழுக்கு ஆதரவு கொடுக்கலாமா? செம்மொழியான தமிழ் மொழியாம்.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்
http://www.facebook.com/group.php?gid=110137469026235
*****

"பக்கத்து நாட்டில் தமிழர்கள் துடிக்க, துடிக்க படுகொலை செய்யப்பட்ட போது, தமிழுணர்வோடு எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்றும் அகதிகள் முகாமில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த செம்மொழி மாநாடு அவசியமான ஒன்றா" என்று மலேசியா பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி விமர்சித்துள்ளார்.

தமிழர்களாக இருந்ததால், பல்லாயிரக்கணக்காணவர்கள் கொல்லப்பட்ட, சிறைபட்ட சூழலில் மொழியைக் கொண்டாடுவது தமிழறிஞர்களின் சுயநலம் ஆகும். முதலில் எதிர்ப்புப் தெரிவித்த பல அறிஞர்கள் பின்னர் சேர்ந்து கொண்டதும் தமது சுயநலத்தை முதற்கொண்டே. "தமிழினத்திற்கு எதிரான அரசியல் முன்னிறுத்தப்படும் சூழலிலும் தமிழறிஞர்கள் தமிழுக்கு நன்மை என்ற வாதத்தை முன்வைப்பது எவ்வளவு அபத்தமானது."

Wednesday, 2 June 2010

கலைஞரை மன்னித்து செம்மொழித் தமிழுக்கு ஆதரவு கொடுக்கலாமா?

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 ஆம் ஆண்டு சூன் 23 முதல் சூன் 27 வரை கோயம்புத்தூரில் கொடிசியா வளாகத்தில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் 2010 இல் நடைபெற இருந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு ஈடாகத் தமிழக முதல்வர் மு. கருணாநிதி இந்த மாநாட்டை ஒருங்கிணைத்து இருக்கிறார். இந்த மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாட்டையும் சேர்த்து நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

****
கலைஞரை மன்னித்து செம்மொழித் தமிழுக்கு ஆதரவு கொடுக்கலாமா? செம்மொழியான தமிழ் மொழியாம்.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்
http://www.facebook.com/group.php?gid=110137469026235
*****

"பக்கத்து நாட்டில் தமிழர்கள் துடிக்க, துடிக்க படுகொலை செய்யப்பட்ட போது, தமிழுணர்வோடு எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்றும் அகதிகள் முகாமில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த செம்மொழி மாநாடு அவசியமான ஒன்றா" என்று மலேசியா பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி விமர்சித்துள்ளார்.

தமிழர்களாக இருந்ததால், பல்லாயிரக்கணக்காணவர்கள் கொல்லப்பட்ட, சிறைபட்ட சூழலில் மொழியைக் கொண்டாடுவது தமிழறிஞர்களின் சுயநலம் ஆகும். முதலில் எதிர்ப்புப் தெரிவித்த பல அறிஞர்கள் பின்னர் சேர்ந்து கொண்டதும் தமது சுயநலத்தை முதற்கொண்டே. "தமிழினத்திற்கு எதிரான அரசியல் முன்னிறுத்தப்படும் சூழலிலும் தமிழறிஞர்கள் தமிழுக்கு நன்மை என்ற வாதத்தை முன்வைப்பது எவ்வளவு அபத்தமானது."

Saturday, 29 May 2010

அய்ஃபா IIFA 2010: தென்னிந்திய திரையுலகம் எதிர்ப்பு

இலங்கை-இந்திய திரைப்பட விழாவுக்கு கடும் எதிர்ப்பு: தென்னிந்திய திரையுலகம்

இலங்கையில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவிற்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் தென்னிந்திய திரைப்படத்துறையினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். வரும் யூன் மாதம் 4, 5, 6 ஆகிய மூன்று நாட்கள் இலங்கையில் உள்ள கொழும்பு நகரில் சர்வதேச திரைப்பட விருதுகள் விழா நடைபெறவுள்ளது.

இலங்கையில் தமிழ் இனத்தைப் படுகொலை செய்த சிங்கள வெறிபிடித்த அரசு, தமிழர்களின் மயானபூமியில் விழா மேடை அமைத்து இந்த திரைப்பட விழாவை நடத்துகிறது.

இதில் வட இந்திய நடிகர் - நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இன்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில் அனைத்து தென்னிந்திய திரைப்படத்துறை அமைப்புக்களையும் அழைத்து கூட்டுக்கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்தில், "இரத்தக்கறை படிந்த இலங்கையில் நடக்கும் இந்த திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வேண்டாம்" என எங்களது வட இந்திய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர் தோழர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்


1. இனி தென்னிந்திய மொழி திரைப்படங்களின் படப்பிடிப்பு மற்றும் கலை விழாக்கள் இலங்கையில் நடத்தப்பட மாட்டாது.
2. இந்த விழாவில் கலந்து கொள்ளும் அனைத்து இந்திய நடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் அனைவருக்கும் தென்னிந்திய திரைப்படத் துறையினர் தொழில் ஒத்துழைப்புத் தரமாட்டார்கள்.
3. இந்த விழாவில் கலந்து கொள்ளும் நடிகர் - நடிகையர் திரைப்படங்களை தென்னிந்தியாவில் திரையிடப்படமாட்டாது.

4. இந்த திரைப்பட விழாவை நடத்தும் குழுவினருக்கு எங்களது வேண்டுகோள் என்னவென்றால், "இந்த விழாவை அன்பு கூர்ந்து ரத்தக்கறை படிந்த இலங்கையில் நடத்த வேண்டாம். வேறு எந்த நாட்டிலாவது நடத்துங்கள். அதை நாங்கள் வரவேற்கிறோம் என்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

5. இதற்காக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில் 15-பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு நாளை மும்பை சென்று IIFA - குழுவினரைச் சந்தித்து இலங்கையில் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவை நடத்த வேண்டாம் என நேரில் சென்று வலியுறுத்தவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைப்புக்கள்

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்கம்.

இந்த அமைப்புக்களின் சார்பில் கலந்து கொண்டோர்

கல்யாணம், இராம.நாராயணன், ராதாரவி, வி.சி.குகநாதன், ஆனந்தா எல்.சுரேஷ், சிவசக்தி எஸ்.டி.பாண்டியன், பன்னீர்செல்வம், கலைப்புலி ஜி.சேகரன், மெட்ரோ ஜெயக்குமார், அன்பாலயா பிரபாகரன், ரவிக்கோட்டரக்கரா, கே.எஸ்.சீனிவாசன், டி.சிவா, கலைப்புலி எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன், காட்ரக்கட்டபிரசாத், வேணுகோபால், ஏடிதநாகேஸ்வரராவ், வி.ஞானவேலு, என்.விஜயமுரளி, ஜி.சிவா, செளந்திரபாண்டியன், மங்கை அரிராஜன், ஆனந்தி நடராஜன், எம்.பாஸ்கர், ஏ.எஸ்.பிரகாசம், டி.ஜானி, ஸ்ரீதர், பெருதுளசி.பழனிவேல், டைமன்ட்பாபு, சிங்காரவேலு, ரியாஸ், பி.என்.சுவாமிநாதன், ஞானம், ஆபுகாபிரியேல், முரளி, மூர்த்தி, கண்ணன், எஸ்.ஆர்.சந்திரன், சண்முகசுந்தரம், துரை, சிபிசந்தர் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


************************************************************************************

The International Indian Film Academy (IIFA) Awards, are presented annually by the International Indian Film Academy to honour both artistic and technical excellence of professionals in Bollywood, the Hindi language film industry. Instituted in 2000, the ceremony is held in different countries around the world every year.

read more @
http://en.wikipedia.org/wiki/International_Indian_Film_Academy_Awards

Sunday, 7 February 2010

"நாடு இல்லாத அகதி நாய்கள்''

"நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம் என்று இடம் கொடுத்தால் விடுதலையா வேணும்''

"நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம்னு இடம் குடுத்தா விடுதலையாம்ல வேணும்", என்று கூறி தமிழ் நாட்டு காவல்துறையினர் செங்கல்பட்டு சிறப்புகாமில் இருக்கும் ஈழத்தமிழர்களை அடித்துள்ளனர் என சம்பவதை நேல் கண்டவர் ஒருவர் தெவித்துள்ளார்.

கருணாநிதி தலைமையில் இயங்கும் தமிழ் நாடு அரசின் கோரத் தாண்டவத்தின் உச்சகட்டமே இது. இந்திரா கங்கிரசுடன் இணைந்து இவர்கள் ஈழத் தமிழினத்தை கருவறுக்கத் துணிந்துவிட்டனர்.

தமிழக காவல்துறை பேசிய விதம் பின்வருமாறு:

என்னடா விடுதலை வேண்டிக் கிடக்குது உங்களுக்கு அனாதப் பயலுகளா? நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம்னு இடம் குடுத்தா விடுதலையாம்ல வேணும்? கிடைக்குற சோரத் தின்னுபுட்டு கிடங்கடா அகதிப் பயலுகளா..

செங்கல்பட்டில் ஒலித்த அதிரடிப்படை அதிகாரி ஒருவன் குரலில்தான் எத்தனை கம்பீரம், எத்தனை சிறப்பு!!! ஓசிச் சோறு திங்கற உங்களுக்கு என்னடா விடுதலை? இதுதான் தமிழகக் காவல்துறை ஈழத்தமிழ் மக்கள் மீது அடிக்கும்போது பேசியவார்த்தைகள்.

வாழ்ந்த வீடும் இழந்து, வாழ்வதற்கு இருந்த நம்பிக்கைகளும் இழந்து உப்புச் சப்பற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை தங்கள் வாழ்க்கையின் நிரந்தர அடையாளமாய்ச் சுமந்து திரியும் ஈழத் தமிழ் அகதிகள் கடைசியில் தமிழகத்திலேயே வைத்து தாக்கப்பட்டிருப்பது வேதனைக்குயது மட்டுமன்றி கடுமையான கண்டணத்திற்குரியது. ஒவ்வொரு தமிழனும் வெட்க்கித் தலைகுனியவேண்டிய ஒன்று.

ஒரு உணர்ச்சிமிக்க இந்தியன் புலம்பல்:

இந்த தேசத்தில், நீங்கள் வங்கிகளைக் கொள்ளையடித்து குற்றம் சுமத்தப்பட்டிருந்தால் உங்களுக்கு நாங்கள் பத்ம பூஷனோ, இல்லை பத்மஸ்ரீயோ கொடுத்துக் கொண்டாடி இருப்போம், நீங்கள் பாவம் வாழ வழியின்றித் தொப்புள் கொடி உறவுகளைத் தேடி வந்தீர்கள், இங்கே பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளையும் நீங்கள் உங்கள் உறவுகள் என்று கருதி விட்டீர்கள், அவர்களுக்கு கூட்டணி தர்மங்களையும், ஆட்சிக் கட்டில்களையும் காப்பாற்றும் மிக உன்னதமான பணி இருக்கிறது.

இந்திய இறையாண்மையை அலுங்காமல் பாதுகாக்கும் அளப்பரிய பணிக்கு இடையூறாக உங்கள் போராட்டம் இருக்குமேயானால் இப்படித்தான் அடிப்பார்கள், அது முள்ளிவாய்க்காலோ இல்லை செங்கல்பட்டோ எதுவாய் வேண்டுமானாலும் இருக்கலாம், வேறுபாடின்றிப் பேரினவாதத்தின் தடிகள் இப்படித்தான் இறங்கும்.

அதிரடிப்படைத் தாக்குதல் நடத்தப்பட வேண்டுமானால் அதற்கு மாவட்ட அளவில் இருக்கும் உயர் அதிகாரிகளின் அனுமதி பெறப்பட வேண்டும், மிகுந்த உணர்வுப் பூர்வமான சிக்கல்கள் நீடிக்கும் ஒரு ஏதிலிகளின் சிறப்பு முகாமில் இது போன்ற தாக்குதல் நடத்தப்பட வேண்டுமாயின் அதற்கு உறுதியாகத் தமிழக அரச தலைவர்களின் வாய்மொழி உத்தரவாவது பெறப்பட்டிருக்க வேண்டும், என்கிற நிலையில் இது அனுமதி பெற்று நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் என்றே கருத இடமிருக்கிறது.

நீங்கள் ஏழைகளுக்கு வழங்கும் அரிசியைக் கடத்திப் பிழைப்பு நடத்தும் ஒருவராக இருந்தால் உங்களை நாங்கள் ஏற்றுமதியாளர் என்று சிறப்புச் செய்து விரைத்த காவல்துறை வணக்கம் வைப்போம், நீங்களோ பாவம் உழைக்கவும், பொருள் ஈட்டவும் வழி இல்லாத ஈழத் தமிழர்களாய்ப் போனீர்கள், உங்களை அடித்துத் துவைப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

நீங்கள் மணல் கொள்ளை நடத்தி மானம் கேட்ட வாழ்வு நடத்தும் மதிகெட்டவராக இருந்தால் உங்களுக்கு சாமரம் வீசி வரவேற்கும் கைகளாக நாங்கள் இருந்திருப்போம், நீங்களோ பாவம், பிழைக்கவே வழி இல்லாத பஞ்சப்பரதேசிகள் ஆனீர்கள், உங்களை எப்படி நாங்கள் விட்டு வைப்போம் உரிமைகள் கேட்க.

இவை எல்லாம் போக நீங்கள் தமிழர்களாய் அல்லவா போனீர்கள், தமிழர்களுக்கு வாக்களிக்க உரிமையுண்டு, தேர்வு செய்ய உமைரியுண்டு, ஏனென்றால் நீங்கள் தேர்வு செய்வதற்கு அவர் பணம் அல்லவா கொடுக்கிறார், சோற்றுப் பொட்டலங்களுக்கு வோட்டுப் போடும் சோரம் போன நமக்கு யாரையும் கேள்விகள் கேட்கும் அதிகாரமெல்லாம் எதற்கு?

யாரையும் குறை சொல்லிப் புலம்பிக் கொண்டு திரிவதில் எந்தப் பயனும் இல்லை உறவுகளே, இனி ஒவ்வொரு ஈழத் தமிழ்க் குடிமகனும் அவனுடைய குழந்தைகளும் கல்வியிலும், பொருளாதாரத்திலும் தன்னிறைவு காணும் நிலை பெறப்பட வேண்டும், காலம் வழங்கிய அநீதியைத் துடைத்து வரலாற்றில் வெற்றி பெற்ற இனமாக மாறும் வெறியோடு உழைப்பதும் திட்டமிட்டு ஒருவருக்கொருவர் உதவும் நோக்கோடு பயணம் செய்வது பயன் தரும்.

புலம் பெயர்ந்த மக்கள் நடத்தும் பகட்டு விழாக்களைக் குறைத்து, ஈழத்தின் பெயரில் வாழ்க்கையும் அரசியலும் நடத்தும் போலி வேடதாரிகளைப் பல இலட்சம் செலவு செய்து அழைப்பதை விடுத்து இனி வருங்காலங்களில் பொருளாதார ரீதியில் வலுவிழந்து காணப்படும் உறவுகளை கைதூக்கி விடுவதிலும், கல்வி மற்றும் சமூக ரீதியில் இளைய தலைமுறையை மேன்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவதிலும் தான் முகாம்களில் வாடும் ஏதிலிகளின் வாழ்க்கை உள்ளடங்கி இருக்கிறது.
Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis