.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thursday 13 August 2009

புகழ்பெற்ற கதிர்காமம் முருகன் கோயில் புத்த பிக்குகளின் பிடியில் !!

இலங்கையில் உள்ள புகழ்பெற்ற கதிர்காமம் முருகன் கோயிலை புத்த பிக்குகள் தங்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இக்கோயிலின் அருகே சிறிய புத்தர் கோயிலையும் கட்டியுள்ளனர். இது இலங்கையில் வசிக்கும் தமிழர்களை மிகவும் வேதனை அடைய வைத்துள்ளது. இலங்கையின் தெற்குப் பகுதியில் உள்ள கதிர்காமத்தில் உள்ள முருகன் கோயில் மிகவும் புகழ் பெற்றது. இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களும் இங்கு வந்து வழிபடுவது வழக்கம். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோயிலின் நிர்வாகப் பொறுப்பை பித்த பிக்குகள் கைகளுக்கு இலங்கை அரசு மாற்றியது. இப்போது பூஜை செய்யும் உரிமையும் தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு புத்த பிட்சுகளே பூஜை செய்கின்றனர். வழக்கமான முறைப்படி பூஜை செய்யாமல் வெறும் ஊதுபத்தியை மட்டுமே புத்த பிக்குகள் பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமல்லாது கதிர்காமம் முருகன் கோயிலுக்கு அருகிலேயே சிறிய புத்தர் கோயிலையும் அமைத்து அங்கு சில புத்த பிக்குகள் நிரந்தரமாகத் தங்க ஆரம்பித்துள்ளனர் என்கிறார் முருகன் கோயில் அருகே உள்ள தெய்வானை அம்மன் கோயிலை நிர்வகித்து வரும் சுவாமி விஞ்ஞானனந்தா.

காசியைச் சேர்ந்த இவர் பல ஆண்டுகளாக இந்தக் கோயிலை நிர்வகித்து வருகிறார். தெய்வானை கோயிலையும் கைப்பற்ற புத்த பிக்குகள் முயற்சித்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு இலங்கை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கதிர்காமம் முருகன் கோயில் புத்த பிக்குகளின் பிடியில் சிக்கியிருப்பது இலங்கைத் தமிழர்களை கவலை அடைய வைத்துள்ளது. இதுதவிர இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் உள்ள கோயில்களும் புத்த ஆலயங்களாக மாற்றப்பட்டு வருகின்றன என்றும் தெரிய வருகிறது. 15 நாள்கள் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு திங்கள்கிழமை சென்னை திரும்பியவர் இந்தத் தகவல்களை உறுதிப்படுத்தினார்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis