.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Wednesday 6 January 2010

தமிழர்களுக்கு இறுதிச் சந்தர்ப்பம்.

எமக்குக் கிடைக்கப் பெற்ற மின்மடல்

சமூகவிரோதிகள் அரசியல் பலம் பெறுவதை தடுக்க இறுதிச் சந்தர்ப்பம்.

நானும் புலிகளால் பாதிக்கப்பட்டு வேறு வழியின்றி ஈ.பி.டி.பியுடன் பலவருடங்களாக வேலை செய்திருக்கிறேன். நானும் இன்று தமிழர்படும் துன்பத்தைக் கண்டு வேதனைப்படுவன். என் இனத்தின் மேலுள்ள அக்கறையால் தங்களுக்கு இதை அனுப்பி வைக்கிறேன். பதிவேற்றுவீர்களென நம்புகிறேன்.

டக்லஸ், கருணா

இன்று ஈழத்தில் பல அரசியல் சந்தர்ப்பவாதிகள் இருந்தாலும், இந்த இருவர் மட்டும் தமிழன் எத்துயர் அடைந்தாலும் தன்னலமே பெரிது என வாழ்பவர்கள். ராஜபக்ச, சரத்பொன்சேகா தமிழனுக்குச் செய்யும் கொடுமைகளைவிட இவ்விருவரின் கணகாணிப்பின் கீழ் இயங்கும் சமூகவிரோதிகள் செய்யும் அட்டுழீயங்கள் வார்த்தைகளால் விபரிக்க முடியாதவை.

தம்மைத் தவிர வேறு எந்தத் தமிழனும் அரசியலில் தலையெடுக்கக் கூடாது என்பதில் இவர்கள் இருவரும் வெளியில் எதிர்ப்பைக் காட்டி, மறைவில் ஒன்றுபட்டுச் செயல்பட்டு வருகின்றனர். தமிழர் மத்தியில் ஜனநாயகத்தை ஏற்படுத்துகின்றோம் என்று கொக்கரிக்கும் இவர்கள் தங்கள் ஆதரவாளர்களுக்கே ஜனநாயக ரீதியில் கருத்துரிமை வழங்குவதில்லை.

ராஜபக்சாவோ, சரத்பொன்சேகாவோ தமிழினத்திற்கு விடிவைப் பெற்றுத் தரப்போவதில்லை. அவர்கள் உலக அழுத்தம் காரணமாக தமிழினத்திற்கு நன்மை செய்தாலும் நிச்சயம் இந்த இருவரும் செய்யமாட்டார்கள். இவர்கள் யாருடன் கூட்டுச் சேருகிறார்களோ அவர்களை நிராகரியுங்கள்.

இந்த இருவரும் அரசியல் பலம் பெறுவதென்பது ஈழத்தமிழினம் தன்னழிவை உறுதிசெய்வதாக அமையும். கிழக்கில் ரீ.எம்.வி.பி, வவுனியாவில் புளோட், யாழில் ரீ.என்.ஏ பலம் பெறுவதைச் சகிக்க முடியாத இந்த ஜனநாயக விரோதிகளைத் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும். இதுவே இந்தத் தேர்தலில் தமிழர்களுக்கு கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பம்.

என்னினமே சிந்தித்து தீர்க்கமான முடிவை எடுங்கள்.

நன்றி.






No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis