செம்மொழி மாநாடும் கலைஞரின் தமிழ்ப்பணியும்
திவியரஞ்சினியன்

செம்மொழி மாநாட்டு கண்காட்சிக்காய் ஒராண்டு காலமாய் சுடுமண்ணில் திருக்குறள்களைப் பதிந்து கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்காத காரணத்தால் தான் ஆக்கிய திருக்குறள் சுடுமண் ஆக்கங்கள் வீணாகிவிட்டனவே என்ற விரக்தியோடு மரத்திலே தூங்கிலிட்டு மரணித்த மாணவன்பற்றி கலைஞர் அறிந்தே இருக்கமாட்டார்! அவர் எழுதிய கடிதத்தில் ஈழத்தமிழ் மக்களைப்பற்றியும் மரநடுகை பற்றியும் குறிப்பிட்டுள்ளதை கலைஞர் எப்படித் தெரிந்துகொள்வார்?
யாவரும் கேளிர் என்றால் அனைவரும் உறவினரே என்று பொருள்படும். கேளீர் என்றால் கேளுங்களேன் என்று அழுத்திச் சொல்வது! ரகுமான் கேளீர் என்றே செம்மொழி மாநாட்டுப் பாடலில் உச்சரிக்கின்றார். பாவம் அவர் தமிழாசிரியர் இல்லைத்தானே! எனவே அவரை வம்புக்கு இழுக்கக்கூடாது!!!! ஆனால் முத்தமிழ் கலைஞர்? ஐயகோ.......... வயது போனதால் காது கேளாமல் போயிருக்கும்! எனவே அவரை குறைசொல்லவும் கூடாது! அப்ப.......யாரைத்தான் நொந்துகொள்வது?

மாநாட்டு தொடக்க நிகழ்வில் பிறமொழியாளர்களின் ஆங்கில உரைகளுக்கு தமிழ்மொழி பெயர்ப்பு வழங்கப்படவில்லையாம்! அதாவது ஆங்கிலம் படித்து அவர்கள் என்ன உரையாற்றினார்கள் எனத் தெரிந்து கொள்ளுங்கள் என்று ஆங்கிலத் திணிப்பு நடந்துள்ளது மறைமுகமாக!!!! தமிழறிஞர்கள் ஆற்றிய உரைகளில் ஆங்கிலமோகம் கலந்திருந்ததாக ஆங்கிலப் படிப்பறிவு இல்லாத தமிழ்ச்சனங்கள் நொந்துகொண்டனர்!!!! அதுசரி ஆங்கிலமோகம் இந்தச்சனங்களுக்கு இல்லாதது "ஆங்கிலப்படிப்பறிவு' இல்லாததாலேயே என்று தட்டிக்கழித்துவிட்டர் தமிழறிஞர்கள்!!!! என்ன செய்ய, விழாபற்றிய அறிக்கைகள் ஆங்கிலத்திலேயே அனுப்பப்பட்டதாக பல ஊடகங்கள் சாடியுள்ளதை அறிந்தபோது இந்த சின்னச் சின்ன தவறுகளை வலையில் சுட்டுவது முறையாகுமா? இதை ஒருவிசயமாக கருதலாமா? கூடவே கூடாது!!!

இந்த மாநாடு வெறும் மொழிக்கா? அல்லகு மொழியை பேசும் மக்களுக்காகவா? மக்கள் வாழ்ந்தாலே மொழி வாழும்! எனவே இந்தமாநாட்டில் ஈழத்தின் மத்தியநாட்டின் தமிழகத் தமிழர்கள் பிரச்சினைகளை உரையாட, எடுத்துரைக்க எவரும் இல்லையே?
கரூமம்....கரூமம்.......இது அரசியல் மாநாட்டில்லை! மொழி மாநாடு! இங்கு தமிழ்மொழி வளர்ச்சிபற்றியே உரையாடுவோம்! அதனாலேயே கலைஞர் ஐயா தமிழ் கூட்டமைப்பு அரசியல் தலைவர்களுக்கோ அல்லது மத்தியநாட்டு தமிழ் அரசியல் தலைவர்களுக்கோ அழைப்பிதழை வழங்கவில்லை!!! இப்படி நியாயம் சொல்கின்றனர் உலகத்தமிழ்த் தலைவரின் திருத்த முடியாத கழுதைகள்!!!
அப்படியானால் ஏன் பிரதீபாபட்டீலுக்கு அழைப்பிதழ்? ஏன் ஆளுநர் பெர்னாலாவுக்கு அழைப்பிதழ்? ஸ்டாலினுக்கு ஏன் அழைப்பிதழ் வழங்கப்பட்டது? இவர்கள் அரசியல் தலைவர்கள் ஆயிற்றே!!! {முத்தமிழறிஞர் கலைஞர் பங்குபற்றாமல் விழா நடந்தால் அது விழாவுக்கே அழகில்லை!!! கனிமொழி கவிஞர்! அதனால் அரசியல் தலைவர்கள் என்று அவர்களைக் கருதுவது மாபெரும் தவறு!! }
கலைஞர் காலைச் சாப்பாட்டுக்கும் மதியச்சாப்பாட்டுக்கும் இடையில் இருந்த உண்ணாநோன்பைப் பாராட்டி தமிழ்க்காவலர் என்று பட்டம்சூட்ட திராவிடர் கழக வீரமணியர்( தமிழர் தலைவர் என்று இவருக்கு பட்டம் வேறு!!!), சு.பா.வீரபாண்டியர் என்று அல்லக்கை நொள்ளக்கை இருக்கையில் கலைஞரை தவறாகப் பேசக்கூடாது!!!! கூடவே கூடாது!
தமிழக வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்மொழியில் வழக்காட உண்ணாநோன்பு இருந்தபோது அவர்களை காவல்த்துறையை ஏவிவிட்டு கைதுசெய்த கையோடு மாநாட்டுக்கு பங்குபற்ற வந்த கலைஞர் ஐயா, எவ்வளவு நல்லவர் தெரியுமா? இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறைசென்ற அவர், சிறை சென்றாலே தமிழுக்கு மரியாதை என்று கருதி உண்ணாநோன்பு இருந்தவர்களை சிறைக்கு அனுப்பிய தமிழ்க் காவலர் அவர்! அவரைப் போய் குறைஞ்சு மதிப்பிட்டாச்சே!!! சீ...சீ...தப்பு!!!
மொத்தத்தில் கலைஞர் ஐயாவுக்கு இருக்கும் தமிழறிவை நினைக்கும்போது........ஐயகோ புல்லரிக்கிறது! அப்பாடியோ.......! கலைஞர் ஐயா கனவிலே வந்து கேட்டுக்கொண்டதுக்கு இணங்க, ஒருமாதிரி ஒருபதிவை செம்மொழி மாநாட்டுக்கு காணிக்கை ஆக்கும்வகையில் எழுதியாயிற்று!!!! இதை வாசித்தவர்கள் தேர்தல் வரும்போது மறக்காமல் கலைஞருக்கு வாக்கைப்( அதுதான் ஓட்டை) போட்டுடுங்கோ!!!!
திவியரஞ்சினியன்
http://thiviyaranchiniyan.blogspot.com/2010/06/blog-post.html
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.