.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Wednesday 9 June 2010

நான் கடவுள்! நீ கடவுள்! நாம எல்லோரும் கடவுள்!!!

யார் கடவுள்?

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்?

அவன் நம்முள் இருக்க எவனையும் நம்பி மாள்வது ஏனோ?!

உள்ளம் பெருங்கோவில் ஊன் உடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
ஐம்புலன்களும் காளா மணிவிளக்கு .

-திருமூலர் திருமந்திரம்-

'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்' என்பதில், உடம்பு ஆலயம். உள்ளம் கர்பக் கிரகம். 'வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்'- உடம்பாகிய ஆலயத்துக்கு வாய் தான் வாசல். உள்ளம் ஆகிய கருவறையில் சீவனாகிய சிவலிங்கம் இருக்கிறதாம். 'கள்ளப் புலனைந்தும் காள மணி விளக்கே'- ஐந்து புலன்களும் இறைவனுக்கு ஏற்றி வைத்த விளக்குகளாம்.

பூசை செய்தற்கு அவர்களது இருதயமே அவ்விலிங்கம் எழுந்தருளியிருக்கும் கருவறையாயும், ஊனால் அமைந்த உடம்பே அக்கருவறை உள்ளடக்கிச் சூழ்ந்துள்ள திருச்சுற்றுக்களாயும், வாயே அவ்விலிங்கத்தின் நேர் நோக்கு வாயிலாயும், உயிரே இலிங்கமாயும், கண் முதலிய ஐம்பொறி உணர்வுகளே ஒளிமிக்க இரத்தின தீபங்களாயும் அமையும்.


'உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான்'


உடம்பு ஆலயம், உள்ளம் கர்பக் கிரகம், உறு பொருள் சீவனாகிய சிவன். மொத்த ஆலயத்தையும் கோயில் என்பதுண்டு. திருமந்திரத்திலேயே

'எண்ணிலா ஞானி உடலெரி தாவிடில்
அண்ணல் தம் கோயில் அழல் இட்ட தாங்கொக்கும்'


என்கிற போது உடம்பு மொத்ததையும் கோயில் என்று கூறுகிறார்.

மேலும் எடுத்துக்காட்டுகள்

நெஞ்சகமே கோவில்
நினைவே சுகந்தம்
அன்பே மஞ்சன நீர்
பூஜை கொள்ள வாராய் பராபரமே!

-தாயுமானவர்-

"நட்ட கல்லை தெய்வம் என்று
நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றி வந்து முனுமுனுவென்று
சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன்
உள்ளிருகாயில்?
சுட்ட சட்டி சட்டுவம்
கறிச்சுவை தான் அறியுமோ?"

- சிவவாக்கியர்-


You are a God / you are in the path of Great God if you :

try and be nice to people, avoid eating fat:), read a good book every now and then, get some walking in, and try and live together in peace and harmony with people of all creeds and nations.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis