.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Saturday 26 June 2010

இஸ்லாத்தில் சாதி, வர்க்கப் பிரிவினைகள்

சாதிப் பிரிவினைகளுக்குச் சமய மாரக்கங்கள் அல்லது கடவுள் எனக்கூறுவது அபத்தம். சாதியவர்க்கப் பிரிவினைகளுக்கு ஆறாவது அறிவாகிய பகுத்தறிவைக் கொண்ட மனிதரே காரணம். எனினும், எல்லா இறை மார்க்கங்களையும் மனித மூடத்தனத்தையும் ஆய்வு செய்தல் சாதியத்தின் தோன்றலைப் பகுத்தறிய வாய்ப்பாக இருக்கும்.

ஏகத்துவம் என்ற பெயரைக் கொண்டு ஒரே கடவுள் ஒரே மதம் என்று கூறும் இஸ்லாத்தில் எத்தனை பிரிவுகள் என்று தகவல்கள் கீழ்கண்டவாறு தெரிவிக்கின்றன.

முஸ்லீம்களில் சுன்னி(Sunni), ஷியா(Shia) என்று இரு பெரும் பிரிவுகள் உள்ளன. உலகெங்கிலும் ஒரே கடவுள் தான் என்று சொல்லிக்கொள்ளும் இந்த முஸ்லீம்கள் தம் சக மதத்தவரையே கொன்றுகுவித்து வருகிறார்கள். இன்றைக்கும் பாகிஸ்தானில் மசூதிகளில் குண்டு வெடிப்பதற்கு இதுவே காரணம்.

அநேக மதக்கலவரங்கள் பல முஸ்லீம் நாடுகளிலும் இந்த இரு பிரிவினருக்கு இடையில் தான் நடக்கிறது.

* ஷியா முஸ்லீம் சுன்னி முஸ்லீம்களின் மசூதிக்குச் செல்லமாட்டார்.

* இந்த இரு பிரிவினரும் அஹமதியா மசூதிக்குச் செல்லமாட்டார்கள்.

* இந்த மூன்று பிரிவினரும் சுஃபி மசூதிக்குச் செல்லமாட்டார்கள்

* இந்த நான்கு பிரிவினரும் முஜாஹிதீன் மசூதிக்குச் செல்லமாட்டார்கள்.

* இப்படி முஸ்லீகளிலேயே 13 பிரிவுகள் இருக்கின்றன.

* இது மட்டுமா முஸ்லீம்களின் வேறுபல பிரிவினரையும் பார்க்கலாம். (ஆங்கிலத்தில்)

Ansari
Arain
Awan
Bohra
Dawoodi Bohra
Dekkani
Dudekula
Ehle-Hadith
Hanabali
Hanafi
Ismaili
Khoja
Labbai
Lebbai
Lodhi
Malik
Mapila
Maraicar
Memon
Mugal
Mughal
Pathan
Quresh
Qureshi
Rajput
Rowther
Salafi
Shafi
Sheikh
Shia
Siddiqui
Sunni Hanafi
Sunni Malik
Sunni Shafi
Syed

இத்தனை சாதிகளைக் கொண்ட முஸ்லீம்கள் வேறு சாதிகளில் பெண் கொடுக்கவோ எடுக்கவோ மாட்டார்கள். அதிலும் மரைக்காயர் மற்றும் லெப்பைகள் போன்றோர் அரபு முஸ்லீம்கள் என்று கூறிக்கொள்வர். இவர்களைப் பொறுத்தவரை மற்றவர்களுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள். சாதிகளும் அதில் மேல் கீழ் என்று பிரிவுகளும் முஸ்லீம்களிலும் உண்டு. பட்டாணி முஸ்லீம் பெண்மணியை நாசுவன் சாதி ஆணுக்கு திருமணம் செய்து வைக்கமாட்டார்கள்.

இல்லையென்றால் மேட்ரிமோனியல் தளங்கள் அவர்கள் வசதிக்காக இத்தைனைப் பிரிவுகளை உண்டாக்கி வியாபாரம் செய்ய முன்வருமா என்ன? படம் கீழே!



இத்தனைப் பிரிவுகளுக்குள்ளும் நிறைய ஏற்றத்தாழ்வுகள் உண்டு.

அவ்வளவு ஏன், அமெரிக்கா ஈராக்கின் இலட்சக்கணக்கான மக்களை அழித்து அந்நாட்டு எண்ணை வளத்தை அபகரித்துக்கொண்டது தெரிந்த செய்தியே! உண்மையோ முற்றிலும் வேறானது. ஈராக்கின் கோரப்படுகொலைகளுக்கு மூலக்காரணம் அங்கே நிலவிய ஷியா , சுன்னி பிரிவுச்சண்டையே! அதை அமெரிக்கா நரித்தனமாக பயன்படுத்திக் கொண்டது என்பதே உண்மை.

எண்ணெய் வளங்களை ஒருங்கே கொண்ட மொத்த முஸ்லீம்நாடுகளும் ஒற்றுமையாக இருந்திருந்தால் அமெரிக்கா என்றைக்கோ பிச்சைக்கார நாடாகி திருவோடு ஏந்தி இருக்கும். இன்றைக்கும் அமெரிக்கா பிழைத்து வருவது எண்ணெய் விற்பனைக்கு ஷேக்குகள் அமெரிக்க டாலரை உபயோகிப்பதால் தான். ஈராக்கைச் சுற்றியுள்ள மற்ற முஸ்லீம் நாடுகளின் முழுமையான ஆதரவுடனேயே அமெரிக்கா அந்நாட்டை அழித்தது என்றால் மிகையில்லை. அதிபர் சதாம் உசேனின் படுகொலைக்கு அதே மதத்தைச் சேர்ந்தவர்களே காரணம் ஆனார்கள். ஏன், சுன்னி ஷியா பிரிவினை.

ஆனால் இவர்கள் வெளியே சொல்லிக் கொள்வதோ ஒரே இறைவன், ஒரே மதம், ஒன்றான மக்கள் என்றுதான். !

ஒரே கடவுள் ஒரே மதம் என்று கூறிக்கொள்ளும் இவர்களுக்குள் எத்தனைக் கொடிய கொலைகள். அப்பாவி மக்களும் ஊடகங்கள் கூறுவது போல இந்துக்கள் மட்டுமே சாதிப்பிரிவினை கொண்டு சண்டை இட்டுக் கொள்கிறார்கள் என்று நம்பி ஏமாந்து போகிறார்கள். வெறும் ஆயிரம், இரண்டாயிரம் வருடங்கள் கொண்ட மதங்களுக்குள்ளேயே இத்தனை பிரிவுகள் இருக்கின்றன.

பலஆயிரம் வருட பாரம்பரியம் உள்ள இந்துக்களின் வாழ்கையில் 1280 வகையான மத புத்தகங்கள் உள்ளன. பல ஆயிரம் வகையான சொற்பொழிவுகளும், சொற்பொழிவாளர்களும் இருக்கிறார்கள். என்னிலடங்கா கடவுளர்கள் உள்ளனர். பல வகையான மகான்களும், ரிஷிகளும், சித்தர்களும் இருக்கின்றனர். பல்வேறு வகையாக தத்துவங்கள் போதிக்கப்படுகின்றன. இந்து தர்மத்தின் படி வாழும் மக்கள் நூறுக்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகள் பேசும் மக்களாக இருக்கின்றனர். ஆயிரக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன.

இந்துக்களில் மாரியம்மனை கும்பிடுபவர் முருகனை அவமதிப்பதில்லை. பிள்ளையாரைக் கும்பிடுபவன் ஐயப்பனை வெறுப்பதில்லை. விஷ்னு பக்தன் ஆயினும் சிவன் கோவிலுக்குப் போகாமல் இருப்பதில்லை. சிவன் பக்தனாயினும் திருப்பதிக்குப் போய் வழிபடாத இந்துக்கள் இருக்கமுடியாது. ஏன் இந்துக்கள் வேளாங்கன்னி மாதாவையும், நாகூர் தர்காவையும் கூட ஒரே கடவுளின் தோற்றமாகவே பார்க்கின்றனர். பல நூறு கடவுளர்களை வழிபடுபவராயினும் இந்துக்களுக்கு எல்லாம் கடவுளே! அதாவது அடிப்படையில் ஏகத்துவம்! "ஏகன் அநேகன் இறைவனடி போற்றி" என்கிறது சிவபுராணம்.

ஒரே மதம், ஒரே தேவன் என்று சொல்லிக்கொண்டு ஒரு நாட்டையே பிரிவினையால் அழிக்கும் பிற மதத்தவரை விட பல நூறு கடவுளரைக் கொண்டாலும் ஒரே கலாச்சாரம் ஒன்றான வாழ்க்கை என்று அமைதியாக வாழும் இந்துக்களை மட்டும் சாதிப் பாகுபாட்டுக்கு காரணமென்று கூறுவது ஏற்புடையதல்ல.

ஆக முடிவாக, சாதிப் பிரிவினைகளுக்குச் சமய மாரக்கங்கள் அல்லது கடவுள் எனக்கூறுவது அபத்தம். சாதியவர்க்கப் பிரிவினைகளுக்கு ஆறாவது அறிவாகிய பகுத்தறிவைக் கொண்ட மனிதரே காரணம்.

4 comments:

  1. உங்களின் இந்த வலைப் பதிவிற்கு பெரியார் அளிக்கும் பதிலைக் கேட்க இந்தச் சுட்டியை சுட்டவும்.

    http://www.tmmk.in/index.php?option=com_content&view=article&id=466:periyar-audio-speech&catid=73:islamic-videos&Itemid=169

    ReplyDelete
  2. ஒரே இறைவன் என்ற கொள்கை தான் எல்லா மதமும் கூறுகிறது. மனிதனின் அறியாமையில் தான் பிரிவுகள். இந்து மதத்தில் "எவரெருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார்".‍ பகவத் கீதை 7:20
    ''ஏகம் எவதித்யம்"
    ''இரண்டல்லாத அவன் ஒருவனே - ஒருவன் மட்டுமே" சந்தோக்ய உபநிஷம் 6:2.1
    ஆனால் மனிதனின் அறியாமையில்,கற்பனையில் தான் இத்தனை கடவுள்கள்
    கிருஸ்துவ மதத்தில் ஏசையா 46.9 படித்துப்பாருங்கள், இன்னும் பல ஆதாரங்கள் பைபிளில் உள்ளது.
    இன்னும் சொல்லுவதென்றால் இறைவனை கூறுபோடும் அள‌வுக்கு இஸ்லாமியர்கள் இன்னும் கீழே இறங்கவில்லை.
    என்பது தான் உண்மை. மேலும் அறிய
    alquran54.17@gmail.com

    ReplyDelete
  3. ஈராக்கின் கோரப்படுகொலைகளுக்கு மூலக்காரணம் அங்கே நிலவிய ஷியா , சுன்னி பிரிவுச்சண்டையே! அதை அமெரிக்கா நரித்தனமாக பயன்படுத்திக் கொண்டது என்பதே உண்மை.

    :)

    ReplyDelete
  4. இவ்வளவு அறிவுத்திறனுடன் அற்புதமாகவும் பரபரப்பாகவும் எழுதும் திறமை இருந்தும் தாங்கள் இன்னும் தமிழ் பதிவுலகில் பிரபல்யம் அடையாமல் இருக்கிறீர்களே...ஏன்? இவ்வளவு நாள் எங்கே இருந்தீர்கள்?

    பரவாயில்லை. இப்போதாவது தெரிந்தீர்களே. தொடர்ந்து இதேபோல இஸ்லாத்தைப்பற்றியே பல அரிய தகவல்களை திரட்டி சில மாதங்கள் தொடர்ந்து எழுதுங்கள்... அப்புறம் பாருங்கள்... வினவு, இட்லிவடை, வால்பையன், ஆள் இன் ஆள், டோண்டு, தருமி போன்றவர்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு உடனடியாக ஆயிரம் ஹிட்சுகளை பெற்றுவிடலாம்... பின்னூட்டங்களில் எல்லா பதிவிலும் சென்சுரி போட்டும் விடலாம்... உடன் ஐநூறு ஃபாலோயர்சுகளை பெற்று விடலாம்... அதன்பிறகு பாருங்குங்கள் பதிவுலகில் நீங்கள்தான் நாட்டாமை... அதன்பின் உங்கள் பதிவுதான் சட்டம்... இவ்விஷயத்தில் நீங்கள் கொஞ்சம் லேட் என்றாலும் பிரபலமடைய இப்போதுதான் சரியான பாதையை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள்... ஆனால், துரதிஷ்டவசமாக இங்கே போட்டி கடுமையாக உள்ளது. எனவே நிறைய கெட்ட வார்த்தைகளை பதிவில் சரளமாக சேர்த்துக்கொள்ளவும். பொய் சொல்ல யோசிக்கவேக்கூடாது. இதனால் பெயர் கேட்டுவிடுமோ என்ற தயக்கம் அறவே கூடாது. அப்படி தயங்கினால் எக்காலத்திலும் பிரபலமாக முடியவே முடியாது. எப்போதெல்லாம் பிறரின் பின்னூட்ட எண்ணிக்கை குறைகிறதோ அப்போதெல்லாம் பரபரப்பு பதிவுகள் அவசியம். எதோ எனக்கு தெரிந்ததை சொல்லிவிட்டேன். என்னைவிட நீங்கள் புத்திசாலி என்பதில் எனக்கு ஐயமேதுமில்லை. பிழைத்துக்கொல்வீர்கள். உங்கள் எண்ணம்போல உங்களுக்கு எதிர்காலம் அமைய என் வாழ்த்துக்கள்...

    அப்புறம், பின்னூட்டத்தில் அனானி ஆப்ஷனை திறந்து வையுங்கள். மட்டுறுத்தல் கிடையாது என்று சொல்லிவிட்டு மட்டுருத்தலை ரகசியமாக செய்யுங்கள்.

    நீங்களே பல பெயர்களில் வந்து எதிர்கருத்து வைப்போரிடம் சண்டை போடுங்கள். அனானி பெயரில் வந்து உங்கள் எதிரிகளை அல்லது விமர்சிக்கப்படும் கூட்டத்தாரை கண்டபடி திட்டி பின்னூட்டம் இடுங்கள். பிரபலமான பதிவரகளை திட்ட மறக்கக்கூடாது. ஆனால், பல மணிநேரம் கழித்து உங்கள் பிளாக் லோகோ/உங்கள் பெயரில் 'மேற்படி அனானிக்கு', "மரியாதையான வார்த்தைகளுடன் நாகரிகமாக பின்னூட்டம் இடுமாறு" செவுட்டில் அறையிரமாதிரி அறிவுரை சொல்லி பின்னூட்டம் ஒன்றை அவசியம் இடுங்கள். மேலும்,அதே பின்னூட்டத்தில், அந்த பிரபல பதிவரின் மாண்பையும் சகிப்புத்தன்மையை போற்றியும் எழுத மறந்து விடாதீர்கள். இது ரொம்ப முக்கியம்.

    ஒவ்வொரு மணிநேரமும் ஏதாவது ஒரு பரபரப்பு பின்னூட்டம் இடம்பெறுமாறு-தமிழ்மண முகப்பில் இடம்பெருமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

    பதிவின் தலைப்பு எப்போதுமே இதேபோல பரபரப்பாக இருக்கவேண்டும். எழுதும் பதிவில் சிறிதளவு உண்மைகளும் இருக்கலாம்; தப்பில்லை. இருந்தால் கொஞ்சம் நேச்சுரலாக இருக்கும். அதற்காக எல்லை மீறி பதிவில் நிறைய உண்மைகள் இருந்தால் யாரும் படிக்க மாட்டார்கள்.

    இனி என்றும் வெற்றி உங்களுக்கே...

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis