Showing posts with label வைரமுத்து. Show all posts
Showing posts with label வைரமுத்து. Show all posts
Tuesday, 15 June 2010
பச்சைக் கிளிகள்
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனத்ததின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட
சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம் பூச்சி கூட்டத்துக்குப் பட்டா எதுக்கு - அட
பாசம் மட்டும் போதும் கண்ணே
காசு பணம் என்னதுக்கு?
(பச்சைக் கிளிகள்..)
அந்த விண்ணில் ஆனந்தம்
இந்த மண்ணில் ஆனந்தம்- அடி
பூமிப் பந்த முட்டி வந்த புல்லில் ஆனந்தம்
வெயிலின் வெப்பம் ஆனந்தம்
மழையின் சத்தம் ஆனந்தம் - அட
மழையில் கூடச் சாயம் போகா வானவில் ஆனந்தம்
வாழ்வில் நூறானந்தம்
வாழ்வே பேரானந்தம் பெண்ணே
நரை எழுதும் சுயசரிதம்
அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்!
(பச்சைக் கிளிகள்..)
உன் மூச்சில் நான் வாழ்ந்தால்
என் முதுமை ஆனந்தம் - நீ
இன்னொரு பிறவியில் என்னை பெற்றால் இன்னும் ஆனந்தம்
பனி கொட்டும் மாதத்தில்
உன் வெப்பம் ஆனந்தம் - என்
காது வரைக்கும் கம்பளி போர்த்தும் கருணை ஆனந்தம்
சொந்தம் ஓர் ஆனந்தம்
பந்தம் பேரானந்தம்
கண்ணே உன் விழியால் பிறர்க்கழுதால்
கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்
(பச்சைக் கிளிகள்..)
படம்: இந்தியன்
இசை: ஏ.ஆர் ரஹ்மான்
பாடியவர்: கே.ஜெ ஜேசுதாஸ்
பாடல் : வைரமுத்து
Subscribe to:
Posts (Atom)
Thirukkural திருக்குறள் Holykural
Kural குறள் - 533
பொருட்பால் - பொச்சாவாமை
எப்பால் நூலோர்க்கும் துணிவு.
Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.
Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis