உணர்வை இழக்கலாமா? மே18! சாத்வீகக் களம் வாருங்கள்...
உரிமை இழந்தோம்
உடைமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?!
May 18 : முள்ளிவாய்க்கால் பேரவல நினைவுநாள் Mullivaikal Massacre Remembrance Day
* 3 மாதங்களில் ~60, 000 மேற்பட்ட உயிர்கள் வீழ்ந்தன
* தமிழ்த் தலைமைகள் சுயநல அரசியல் செய்து அடங்கிவிட்டன
* ~12,000 வீரர்கள் எதிரியின் மோசமான சிறையில்
* பெண் போராளிகள் தினமும் பாலியல் கொடுமைகளால் தவிப்பு
* திறந்தவெளிக் கூண்டில் ஒட்டுமொத்த ஈழத்தமிழினமும்

சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் மனிதாபிமான சட்டம் ஆகியவற்றை அப்பட்டமாக மீறி பல்லாயிரக்கணக்கான எமது உறவுகளை பட்டினி போட்டும் குண்டுகள் வீசியும் சிறிலங்கா அரசாங்கம் கொலை செய்தபோது அவர்கள் எழுப்பிய அவலக்குரல் இன்னமும் எமது காதுகளை விட்டு நீங்கவில்லை.
இந்தப்பேரவலத்தை நிறுத்துமாறு கோரி பிரித்தானியாவிலும் உலகெங்கிலும் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் பல்வேறுபட்ட சாத்வீகப் போராட்டங்களின் ஊடாக சர்வதேச சமூகத்தை மன்றாடிக்கேட்டுக் கொண்ட நிகழ்வுகளும் இன்னமும் எமது கண்களை விட்டு அகலவில்லை.
ஐ.நா சபை தலையிடும் சர்வதேச சமூகம் தலையிடும் அவலங்கள் தடுக்கப்படும் என்று நம்பிக் காத்திருந்த எமது உறவுகள் அந்த எதிர்பார்ப்போடு அங்கே மடிந்து போனார்கள்.
அந்தக் கொடுமையான வெய்யிலில் கடற்கரை மண்ணில் உணவின்றி உறையுள் இன்றி ஓயாத குண்டுமழையில் எமது உறவுகள் வாழ்ந்த அந்தப் பொழுதினைஅங்கே அவர்கள் ஈவிரக்கம் இன்றி கொல்லப்பட்ட அந்த நாட்களை நாம் நினைவு கூருவோம்.
Mullivaikal Remembrance Day
Remembering the thousands of lives lost during the Mullivaikal Massacre.
Marking this tragic loss one year on, let us gather once again outside the Parliament where we voiced for weeks our pleas for action to save our loved ones.
Please come in black to pay our respects and plege our unity to attain justice for the victims and bringing charges against war crimes.
Venue: Parliament Square
Date: 18/05/2010
Time: 4pm - 8pm
Nearest Tube Station: Westminster
[Organised by BTF]
நொந்து சுமந்து வெந்து வீழ்த்தினாலும் வீறுகொண்டெழுவோம்
பகுதி - 1
கண்டோம்நாம் தமிழ்குலத்தில் மறவர்தமை
. . . . களத்தினிலே வீழ்ந்தவர்கள் விதைகளானார்
உண்டோம்நாம் உணர்வோடு தன்மானந்தன்னை
. . . . உதிரத்தில் கலந்ததனால் உறுதிகொண்டோம்
அண்டம்நாம் அகிலத்திலினி யாரையுமே
. . . . அஞ்சுதல்லெனு மிழிநிலையிங்கு கொன்றோம்
வேண்டோம்நாம் வெந்தபுண்ணில் வேல்பாய்தற்கு
. . . . வேடிக்கை யாயுமினி வீழமாட்டோம்..!!
- நன்றி: தர்ஷி-
பகுதி - 2
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.