
அஸ்ஸலாமு அலைக்கும்... May God bless all.
Love is God; God is Love.
as-salaamu 'alaikum; God's Peace be upon you
அஸ்ஸலாமு அலைக்கும் السلام عليكم - உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக என்பது இதன் பொருளாகும். இது அரபி வாக்கியமாகும். இது முகமன் கூறுவதற்கு பயன்படுகிறது.
முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்ளும்பொழுதும் இவற்றை கூறிக்கொள்வர். இதை சலாம் சொல்லுதல் என்றும் சொல்வார்கள். தமிழில் "வணக்கம்" சொல்லும் முறைக்கும் இவற்றிற்கும் வேறுபாடு உண்டு.
அஸ்ஸலாமு அலைக்கும் என்பதற்கான பதிலாக "வ அலைக்கும் (முஸ்)ஸலாம்" என்று கூறுவார்கள். இதற்கு பொருள் "உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!" என்பதாகும்.
சந்திக்கும் பொழுது மட்டுமின்றி பிரியும் பொழுதும் சலாம் சொல்லவேண்டும் என்கிறது இஸ்லாம்.
இந்த முகமன் கூறுதலை எல்லா நேரங்களிலும் பயன்படுத்துவார்கள். அதாவது சாதாரணமாக சந்திக்கும் பொழுது, திருமணங்களுக்கு செல்லும்பொழுது, வீட்டினுள் நுழையும்பொழுது, இறந்தவர் வீட்டுக்கு செல்லும் பொழுது, இப்படியாக...
இருவர் சண்டையிட்டு அவர்களை சமாதானப்படுத்திவைக்க "அவருக்கு சலாம் சொல்லுங்கள்" என்று சொல்லி சலாம் சொல்லவைத்துச் சேர்த்து வைப்பார்கள்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.