.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Sunday 20 June 2010

பொருண்மிய வலுவிழந்த இனம்

பொருண்மிய வலுவிழந்த இனம் என்றும் அடிமைகளாக மட்டுமல்ல பிச்சைக்காரர்களாகவும் காலப்போக்கில் இன அடையாளங்களையும் இழப்பர்.

பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றி மேலெழுந்தவாரியாக பலரும் எழுதுகிறார்களே யன்றித் தீர்வையும், நம்மத்தியில் இலைமறை காயாக உள்ள பொருண்மிய நிபுணர்களைக் கூட்டி மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கும் யாரும் முன் வருவதில்லை. இந்தக் குறை தீர்க்கப்படவேண்டும். கிழக்கில் மூலதனத்தை இழந்த மக்கள் புழைப்புக்காக வாழ்வாதாரமான மண்ணை அரை விலைக்கு விற்பதாக மட்டக்களப்பைச் சேர்நத நண்பர் சில நாட்களுக்கு முன் தெரிவித்தார். மிகுந்த வேதனை தந்தது. இதை மாற்றியே தீர வேண்டும். பொருண்மிய வலுவிழந்த இனம் என்றும் அடிமைகளாக மட்டுமல்ல பிச்சைக்காரர்களாகவும் காலப்போக்கில் இன அடையாளங்களையும் இழப்பர். ஒன்றுபட்டு எமது மக்களின் பொருண்மியத்தைக் கட்டியெழுப்புவோம். குறைகளைப் பின்தள்ளி நிறைகாண உழைப்போம். புலத்தில் மக்கள் உதவி செய்ய விரும்புகிறார்கள். “வணங்காமண்” திட்டம் அறிவிக்கப்பட்ட போது பணமும் பொருளையும் புலத்து மக்கள் வாரி வழங்கினார்கள். “வணங்காமண்” கப்பலும் வந்த உதவிகளும் சிறீலங்கா அரசால் முடக்கப்பட்டது மீதிப் பணங்கள் இங்குள்ள “தமிழ் முதலைகளால்” மடக்கப்பட்டுவிட்டது. மக்கள் குழப்பத்திலுள்ளார்கள். அவர்கள் உதவி செய்யவிரும்புகிறார்கள். யாரை நம்புவது? யார் மூலம்? யார் செய்யும் தொண்டுகள் பற்றி வெளிப்படையாக உள்ளனர்? இப்படி நம்பிக்கையான அமைப்பை பொருண்மிய நிபுணர்களின் உதவியுடனும் கட்டியெழுப்புவீர்களானால் மக்கள் நிச்சயமாக உதவி செய்வார்கள். இதைத் தாங்கள் அல்லது தங்கள் அமைப்பு செய்தல் வேண்டும். தங்கள் பணிகளையும் தேவைகளையும் விரிவான ஆய்வுக் கட்டுரையாக எழுதியனுப்புங்கள். நாம் உங்களுக்குத் தோள் கொடுக்கின்றேம். நன்றி.

Facebook Group முகநூல் குழுமம்
http://www.facebook.com/group.php?gid=115523251489

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis