செம்மொழி மாநாடால் கலைஞருக்கு வேண்டப்படாத புகழும், அரசியல் அனுகூலங்களும் கிடைக்கப் போவதென்பது உண்மை. கலைஞரை மட்டும் குறைசொல்லி ஏது பலன்? நாம எல்லோரும் ஒருத்தரை ஒருத்தர் நாம் கொண்ட கொள்கைக்காகப் பிடறியில் குத்துவதில்லையா?! இன்று தமிழினம் என்றுமில்லாதாவாறு பிளவுபட்டுள்ளது. ஓற்றுமையே பலம்; அடம்பன் கொடியும் திரண்டால்தான் மிடுக்கு. கருத்தியல் வேற்றுமைகளைக் களைந்து தமிழுக்காகத் தமிழின் பெயரில் ஒன்றுபடுவோம். ஓன்றுபட்டு தமிழினதும் தமிழர்களினதும் வளர்ச்சிக்கும் சளைக்காது உழைப்போம். சாதி, மத, மார்க்க, வர்க்க, நெறி, அரசியல், சித்தாந்த, கொள்கை, கருத்தியல் வேற்றுமைகளைக் களைந்து தாய்த்தமிழின் பெயரில் ஒன்றுபடுவோம். நாம் வீழ்ந்தாலும் தமிழ் வீழக்கூடாது. நன்றி.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 ஆம் ஆண்டு சூன் 23 முதல் சூன் 27 வரை கோயம்புத்தூரில் கொடிசியா வளாகத்தில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் 2010 இல் நடைபெற இருந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு ஈடாகத் தமிழக முதல்வர் மு. கருணாநிதி இந்த மாநாட்டை ஒருங்கிணைத்து இருக்கிறார். இந்த மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாட்டையும் சேர்த்து நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
**** கலைஞரை மன்னித்து செம்மொழித் தமிழுக்கு ஆதரவு கொடுக்கலாமா? செம்மொழியான தமிழ் மொழியாம்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.