
தங்கையர் பலர் அவயமிழந்தனர்
மங்கையர் பலர் கற்பிழந்தனர்
தாயவர் பலர் வாழ்விழந்தனர்
தந்தையர் பலர் கதியிழந்தனர்
தூயவர் பலர் நெறியிழந்தனர்
மறத்தமிழர் பலர் உயிரிழந்தனர்
ஈனத்தமிழர் மானமிழந்தனர் - இன்னும்
ஈழத்தமிழர் உணர்விழக்கவில்லை
புலிகள் இங்கு மீண்டும் கூடும்
நரிகள் அதைக் கண்டு ஓடும்
இழிநிலை இல்லாதொழியும்
தமிழிசை உயர ஒலிக்கும்
ஈழம் மீண்டும் மீளும்.
-சூர்யா-
காணும் கண்களே..கூறும் கருத்தென்ன?
http://www.facebook.com/group.php?gid=154437608809
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.