.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..
Showing posts with label 2010. Show all posts
Showing posts with label 2010. Show all posts

Wednesday, 30 December 2009

வன்முறையற்ற ஆண்டாக 2010 மலரட்டும்

விடுதலைக்காக வீழ்ந்த அனைத்து மக்களுக்கும், போராளிகளுக்கும், தளபதிகளுக்கும் தலைசாய்க்கும் நாம் தொடர்ந்து உரிமைக்காக வன்முறையற்ற வழிகளில் போராடுவோம் என்று உறுதியெடுப்போம். கோபங்கள் நியாயமானவையாக இருந்தாலும், அவை வன்முறை வடிவம் பெற்றதால், நாம் பெற வேண்டியதை விட இழந்ததே அதிகம். இதுவே யதார்த்தம். 2009 தமிழர்களுக்கு விட்டுச் செல்லும் சேதியும் அதுவே. தொடர் வன்முறை நம்மினத்தை மீளாத் துயரத்தில் ஆழ்த்தி, இருப்பதையும் இழக்க வைத்துவிடும். எனவே, வன்முறையை அறவே கைவிட்டு, மாற்று வழிகளில் தொடர்ந்து ஒன்றுபட்டு தமிழினத்தின் விடிவிற்காகவும், தமிழின் வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து உழைப்போம். 2010 தமிழர் நாம் ஒன்றுபடும் ஆண்டாக மலரட்டும். "எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்" என்பதே 2010ல் எங்கள் வேண்டுதல்கள் ஆகட்டும்.

வாழ்க மானுடம். வாழ்க இவ்வையகம்.
Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis