
கூர்ப்புவிதி வகுத்தவன்
செழுமைபட்டு வாழ்ந்து
நாகரீகம் பல கண்டவன்
ஆறறிவுக் கர்வத்தால்
பகுத்தறிவை இழந்தவன்
கர்வமது அகத்தே கொண்டு
கொலைக்கலைகள் பல பயின்று
சோதரரையே நடுவீதியில் கொன்று
மிருகமதை வென்ற கொடியோன்
மனதில் மலமே எண்ணி
உலகில் கலகமே பண்ணி
பன்னி போல் தின்று
தானுண்டு கொழுத்து
தரணியை அழித்த
இவன் இங்கில்லையேல்
பூக்கும் இங்கும் அமைதி
பூவுலகில் இதுவே நியதி.
-சூர்யா-
http://www.facebook.com/photo.php?pid=411956&id=1782415579&subject=154437608809
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.