.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Wednesday, 30 June 2010

அஸ்ஸலாமு அலைக்கும் السلام عليكم

மார்க்கங்களிலும் நெறிகளிலும் குறைகளும் உண்டு நிறைகளும் உண்டு. பகுத்தறிவும் ஆன்மீகமும், ஆத்திகனும் நாத்திகனும் வேற்றுமைகளிலிருந்தாலும் அன்பின் அடிப்படையில் மோதலைத் தவிரத்து அன்பாக வாழலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும்... May God bless all.
Love is God; God is Love.
as-salaamu 'alaikum; God's Peace be upon you


அஸ்ஸலாமு அலைக்கும் السلام عليكم - உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக என்பது இதன் பொருளாகும். இது அரபி வாக்கியமாகும். இது முகமன் கூறுவதற்கு பயன்படுகிறது.

முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்ளும்பொழுதும் இவற்றை கூறிக்கொள்வர். இதை சலாம் சொல்லுதல் என்றும் சொல்வார்கள். தமிழில் "வணக்கம்" சொல்லும் முறைக்கும் இவற்றிற்கும் வேறுபாடு உண்டு.

அஸ்ஸலாமு அலைக்கும் என்பதற்கான பதிலாக "வ அலைக்கும் (முஸ்)ஸலாம்" என்று கூறுவார்கள். இதற்கு பொருள் "உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!" என்பதாகும்.

சந்திக்கும் பொழுது மட்டுமின்றி பிரியும் பொழுதும் சலாம் சொல்லவேண்டும் என்கிறது இஸ்லாம்.

இந்த முகமன் கூறுதலை எல்லா நேரங்களிலும் பயன்படுத்துவார்கள். அதாவது சாதாரணமாக சந்திக்கும் பொழுது, திருமணங்களுக்கு செல்லும்பொழுது, வீட்டினுள் நுழையும்பொழுது, இறந்தவர் வீட்டுக்கு செல்லும் பொழுது, இப்படியாக...

இருவர் சண்டையிட்டு அவர்களை சமாதானப்படுத்திவைக்க "அவருக்கு சலாம் சொல்லுங்கள்" என்று சொல்லி சலாம் சொல்லவைத்துச் சேர்த்து வைப்பார்கள்.

Tuesday, 29 June 2010

கே.பி : துரோகத்தின் உச்சக்கட்டம்

கே.பியை இயக்குவது புலனாய்வாளர்கள், புலம்பெயர் மக்களை மண்டியிட வைக்க திட்டம் – அருட்குமார்


கே.பி என அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனை சிறீலங்காவின் படைப் புலனாய்வாளர்களே இயக்கி வருவதாகவும், அவரூடாக புலம்பெயர் மக்களை தம்மிடம் மண்டியிட வைப்பதே சிறீலங்கா அரசின் நோக்கம் என, அண்மையில் கே.பியுடன் சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கொட்டாபய ராஜபக்சவைச் சந்தித்து, பிரித்தானியா திரும்பியுள்ள மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார் அம்பலப்படுத்தியுள்ளார்.

பகுதி 1


பகுதி 2


தனிப்பிட்ட முடிவில் கொழும்பு சென்று பிரித்தானிய திரும்பியுள்ள மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார் தமிழ்நெட் இணையத்திற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே பல விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீள்கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவென கே.பியின் ஏற்பாட்டில் கடந்த 15ஆம் நாள் முதல் 20ஆம் நாளுக்குள் 6 புலம்பெயர் நாடுகளிலிருந்து 9 பேர் கொழும்பு சென்றிருந்தனர். இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா போன்ற இடங்களிற்குச் சென்றதுடன், சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கொட்டாபய ராஜபக்ச, நீண்ட காலம் சிறீலங்கா படைப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக இருக்கும் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவித்தாரன, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரையும் சந்தித்திருந்தனர்.

கொட்டாபயவுடனான சந்திப்பின்போது அவர் உள்ளே வந்தபொழுது கே.பி அவரைக் கட்டித்தழுவ முற்பட்டதாகவும், அவரது இந்த நடவடிக்கை தமக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதாகவும் கூறும் மருத்துவர் அருட்குமார், விடுதலைப் புலிகள் தடுத்து வைக்கப்பட்ட பிரிவு - 4 முகாமைப் பார்வையிட அனுமதி மறுத்த படையினர், பிரிவு இரண்டாவது முகாமிற்கு தம்மை அழைத்துச் சென்றதாகவும், அங்கும் படைப் புலனாய்வாளர்களால் ஒழுங்கு செய்யப்பட்டவர்களே முன்னாள் போராளிகள் போன்று தம்மை சந்திக்க முற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆணவத்துடன் கொட்டாபய ராஜபக்ச தம்முடன் உரையாடியதாகக் கூறும் மருத்துவர் அருட்குமார், வரலாற்றைப் பற்றி யாரும் பேசக்கூடாது எனவும், அரசு செய்யும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு மட்டும் நல்க வேண்டும் என, அடிமை போன்று நடத்த முற்பட்டதாகவும், புலம்பெயர் மக்களின் பணத்தைப் பெற்றுக்கொள்வதிலேயே குறியாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

புலம்பெயர் மக்களை கே.பி ஊடாக உள்வாங்க முனைவது, அல்லது புலம்பெயர் தமிழ் மக்களை பிரிவுகளாக உடைத்து சின்னா பின்னமாக்கி மன்டியிட வைப்பது என்பதில் சிறீலங்கா அரசும், படைப் புலனாய்வாளர்களும் திட்டமிட்டிருப்பதை தமது சந்திப்புக்களில் உணர முடிந்ததாக கூறும் மருத்துவர் அருட்குமார், கே.பியை 2006ஆம் ஆண்டே தான் சந்தித்திருப்பதாக சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கொட்டாபய ராஜபக்ச கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் வளங்களை இந்தியா சுரண்டுவதாக இந்த சந்திப்புக்களில் குற்றம் சுமத்தியுள்ள சிறீலங்கா அரச தரப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மற்றும் தமிழ் அரசியல் தலைவர்களை தரக்குறைவாகப் பேசியதாகவும், தமிழர் புனர்வாழ்வு மையம் (ரி.ஆர்.சி) என்ற பெயரில் அமைப்பை உருவாக்கி, அதனூடாக புலம்பெயர் மக்களின் நிதியைப் பெற்றுக்கொள்ளவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அருட்குமார் கூறினார்.

நன்றி:
தமிழ்வின்

Monday, 28 June 2010

கொரிய மொழியில் தமிழ் வார்த்தைகள்

கொரிய மொழியில் 500 தமிழ் வார்த்தைகள் : கனடா நாட்டு அறிஞர் ஜூங்நாம் கிம்



உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கில்,கனடா நாட்டில் டெரான்டோ நகரை சேர்ந்த ஜூங்நாம் கிம் கொரிய மொழியில், பல வார்த்தைகள் தமிழ் சாயலில் இருப்பதாக, தம் தமிழாய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் இரண்டாம் நாளான (24ந் தேதி) நடைபெற்ற ஆய்வரங்கத்தில், பல்வேறு நாட்டு அறிஞர்கள் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தனர். இதில், கனடா நாட்டில் டெரான்டோ நகரை சேர்ந்த ஜூங்நாம் கிம் எனும் அறிஞர் தமிழாய்வுக் கட்டுரைகளை சமர்பித்தார். இவர், தி கியாங்யாங் செய்தி நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.


கொரிய மொழியில், தமிழ் வார்த்தைகள் கலதிருப்பது பற்றி ஜூங்நாம் கிம் குறிப்பிடுகையில்,

“தென்கொரியா நாட்டைச் சேர்ந்த நான், தற்போது கனடாவில் வசிக்கிறேன். கொரியா மொழியில் தமிழ் வார்த்தை கலந்திருப்பதை ஆய்வு செய்து, 500 வார்த்தைகளை கண்டறிந்துள்ளேன்.

கொரிய மொழியில், பல வார்த்தைகள் தமிழ் சாயலில் இருக்கிறது. தமிழில் வயிறு என குறிப்பிடுகிறார்கள். ஆனால், கொரிய மொழில் வயிற்றுக்கு பை. தமிழிலும் ‘வயிற்று பை’ என மாற்று பெயர் உண்டு.

உரத்தை, கொரிய மொழியிலும் உரம் என்றே அழைக்கிறோம். கண்ணுக்கு நுகண், மூக்குக்கு கோ, பல்லுக்கு இப்பல், புல்லுக்கு புல், கொஞ்சம் என்பதற்கு சொங்கும் என அழைத்து வருகிறோம்.

கொரியாவில் குழந்தைகளை கொஞ்சுவதற்கு பயன்படுத்தும் வார்த்தைகளும் தமிழ் மொழி சாயலில் தான் இருக்கிறது.

தூரி தூரி, சாஞ்சுக்கோ, கொஞ்சு கொஞ்சு, ஜம்ஜம், அபூபா, குக்குக்கூகூ, தேரிடா... என கொரியா மொழியில் குழந்தைகளை கொஞ்சுகிறோம். இது தமிழ் மொழி கொஞ்சலின் சாயலாக இருக்கிறது. எப்படி இப்படி வார்த்தை ஒற்றுமை அமைந்தது ஏன் என இன்னும் தெளிவக தெரியவில்லை.

இவ்வாறு, தமிழின் சாயலில் பல கொரிய மொழி வார்த்தைகள் இருப்பதால், கொரியா தெரிந்தவர் எளிதில் தமிழ் கற்க முடியும் என்ற நிலையிருக்கிறது” எனறு அவர் குறிப்பிட்டார்.

எழுத்து வடிவங்கள் சாட்சி தமிழில் பிறந்ததே கொரிய மொழி : கொரிய விஞ்ஞானி தகவல்


http://www.dinakaran.com/semmozhi/semmozhinewsdetails.aspx?id=217&id1=News
“தமிழ் மொழியில் இருந்து பிறந்தது தான் கொரிய மொழி. அங்குள்ள எழுத்து வடிவங்கள் இதனை புலப்படுத்துகின்றன,“ என தமிழ் இணைய மாநாட்டில் ஆதாரங்களுடன் விளக்கினார் கொரிய நாட்டு விஞ்ஞானி ஒருவர். செம்மொழி மாநாட்டில் தமிழ் மென்பொருள் மற்றும் இணணய பக்கங்கள் உருவாக்கியவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கொரியா நாட்டின் விஞ்ஞானி கண்ணன், கொரியா நாட்டுக்கும், தமிழகத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து விளக்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழில் இருந்து பிறந்தது தான் கொரிய மொழி. அங்குள்ள எழுத்து வடிவங்கள் இதனை தெளிவுபடுத்துகின்றன. கொரிய மொழி வரி வடிவம் பெறாத நேரத்தில், தமிழின் வரிவடிவத்தை கொண்டே கொரிய மொழியின் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரங்கள் உள்ளன. மொழி ஒற்றுமையை போன்று பல்வேறு ஒற்றுமை தமிழ், கொரியாவுக்கிடையே உள்ளது. பாண்டிய நாட்டின் இலச்சினையான மீன் இலச்சினைகள் கொரியாவில் பயன்படுத்தப்படுகின்றன. சொல்லா எனும் மாவட்டம் கொரியாவில் உள்ளது. இது சோழா எனும் பெயரின் திரிந்த சொல்லாகவே கருத தோன்றுகிறது. இதேபோல், உணவு முறைகளிலும் கொரியாவுக்கும் தமிழுக்கும் தொடர்புள்ளது. தோசை, கொழுக்கட்டை உள்ளிட்ட தமிழர்களின் உணவுகள் அங்கு பிரதான உணவுகளாக உள்ளது. அதேபோல், பெருமாள் கோயிலும் அங்குள்ளது. தமிழர்களின் பழக்க வழக்கங்கள் அங்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, தமிழர்களின் வழிவந்தவர்களாகவே கொரியர்கள் கருதப்படுகின்றனர். பலர் இதை ஒப்புக்கொண்டுள்ளனர். இது பற்றிய மேலும் ஆதாரங்களை திரட்ட இது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண் டும். இவ்வாறு கண்ணன் பேசினார். இந்த நிகழ்வின் போது, தமிழ் மற்றும் கொரிய மொழிகளுக்கு உள்ள தொடர்பு மற்றும் மக்களுக்குள்ள தொடர்புகள் குறித்த ஆதாரங்களை படங்களாக கொண்டு விளக்கினார்.

தமிழுடன் கொரிய மொழிக்கு தொடர்பு : தென்கொரியா விஞ்ஞானி பெருமிதம்


http://tamil.dinamalar.com/wctc_detail.asp?id=26231
கோவை : ""தமிழுக்கும், கொரியா நாட்டு மக்கள் பேசும் "ஹங்குல்' மொழிக்கும் தொடர்பு உண்டு,'' என, உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க வந்துள்ள, தென்கொரிய விஞ்ஞானி நாராயணன் கண்ணன் தெரிவித்தார்.

செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கத்தில் பங்கேற்க கோவை வந்துள்ள, தென்கொரியாவைச் சேர்ந்த எண்ணெய் ஆய்வு திட்ட விஞ்ஞானி நாராயணன் கண்ணன் "தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி: எனது சொந்த ஊர் மதுரை, திருப்புவனம். ஏழு ஆண்டுகளுக்கு முன் தென்கொரியா சென்று, அங்கு எண்ணெய் ஆய்வுத் திட்ட விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறேன். கடுமையான பணி நெருக்கடிக்கு மத்தியிலும், தமிழின் மீதான தீராத காதல் கொண்டிருக்கிறேன். தென்கொரியாவில் வசிக்கும் தமிழர்களை ஒருங்கிணைத்து,"தமிழ் மரபு அறக்கட்டளை' என்ற அமைப்பை நடத்தி வருகிறேன். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி வாழும் தமிழர்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறோம். "தமிழில் மின் இலக்க வடிவ முறை (டிஜிட்டல்)' குறித்த ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க, தமிழ் மாநாட்டுக்கு வந்துள்ளேன். உலகத்தமிழர் ஒன்றிணையும் இந்த மாநாட்டில் பங்கேற்பதை மிகப்பெருமையாக கருதுகிறேன். உலகம் போற்றும் தமிழ் இலக்கியங்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகளிலுள்ள அனைத்து தகவல்களையும் இணையதளத்துக்கு மாற்ற வேண்டும், என்பது எனது விருப்பம். தென்கொரிய மக்களின் "ஹங்குல்' மொழிக்கும், தமிழுக்கும் எழுத்து வடிவ தொடர்பு உண்டு.

ஆரம்ப காலத்திலிருந்து சீன மொழி பேசி வந்த கொரிய மக்கள், 16ம் நூற்றாண்டு முதல் "ஹங்குல்' எழுத்துவடிவ மொழியை தாய்மொழியாக ஏற்றனர். அதன்பின், கொரிய மக்களின் பொருளாதார முன்னேற்றம் வேகமெடுத்தது; தற்போது, கொரிய மக்களில் 99 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்று திகழ்கின்றனர். இதன் காரணமாக, உலகப் பொருளாதார வளர்ச்சியில் கொரியா, 19வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இவற்றுக்கு அடிப்படையாக அமைந்ததே, எழுத்து சீர்திருத்தம் தான். "ஹங்குல்' எழுத்து முறை வந்த பிறகே, அந்நாட்டினர் சமூக, பொருளாதார ரீதியாக முன்னேறியுள்ளனர். மொழியை முன்னிறுத்தியே எந்த ஒரு நாடும் முன்னேறும் என்பதற்கு, கொரியா சாட்சி. எனவே, மொழிப்பற்றை ஒவ்வொரு தமிழரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, நாராயணன் கண்ணன் தெரிவித்தார்.

ஈழத்தமிழர் இசை, நடன மரபு

ஈழத்தமிழர்கள் உலகில் வாழ்கின்ற எல்லா சமூகங்களையும் போலவே தமக்கான தனித்துவமான வரலாற்றையும் பண்பாட்டையும் கொண்டிருக்கின்றனர். பல்லாயிரமாண்டு பழமையும் புதிய பண்பாடுகளின் காலநீட்சியையும் பெற்றுள்ள ஈழத்தமிழர்கள் இன்று உலகெங்கும் பரந்து வாழ்கின்றனர். இன்று உலகில் ஈழத்தமிழர்கள் வாழாத நாடே இல்லை என்று சொல்லுமளவிற்கு அவர்களின் உலக வெளி பரந்துள்ளது. ஆனாலும் சில தவிர்க்க முடியாத அடையாளச் சிக்கல்களை உலக வெளியி; ல் சந்திக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை ஈழத்தமிழ்ச் சமூகம் பெற்றுள்ளமையை நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஈழத்தமிழர்கள் இதுவரை காலமும் கட்டிக்காத்து வந்த இசை நடன மரபுகள் எவை? பொதுப்பரப்பில் நம்மவர்கள் எதனை மிகுதியாக தமது பண்பாட்டடையாளமாக கற்கின்றனர்? கர்நாடக இசையும், பரதநாட்டியமும் இன்றுவரை நம்மவர்களின் கைகளில் வீச்சுடனும் ஆழத்துடனும் வெளிப்பட்டுள்ளது. இத்தகைய ஒரு பகைப்புலத்தில் ஈழத்தமிழர்களின் மரபான இசைபற்றியும் நடனம்பற்றியும் நாம் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். இசையிலுள்ள ஒத்திசை, ஒழுங்கு, இராகம் என்பன பண்பாட்டுக்கு பண்பாடு வேறுபடும். ஒவ்வொரு இனத்தினிடையேயும் இது தமக்கான தனித்துவமான பண்புகளைக் கொண்டிருக்கும். ஈழத்தமிழினமும் தனக்கான இசைமரபையும் பல தனித்துவமான பண்புகளையும் கொண்டுள்ளது.


பண்பாட்டு அடிப்படையில் தமிழ்நாட்டோடு ஈழத்தமிழர்கள் நெருக்கமான தொடர்புகளையும் அடிப்படையான சில ஒற்றுமைகளையும் பெற்றிருந்தாலும், தமிழ்நாட்டிலிருந்து வேறுபட்ட தனித்துவமான பல பண்பாட்டு அடையாளங்களை ஈழத்தமிழ்ச் சமூகம் பெற்றுள்ளது. அதில் இசையும், நடனமும் முக்கிய ஒரு கதையாடலாக உள்ளன. இசை ஈழத்தமிழர்கள் மத்தியில் நம்பிக்கைகள் சார்ந்து கிராமிய வழிபாட்டு முறைகளோடு இணைந்ததாகவும், அதே நேரத்தில் இவற்றையெல்லாம் கடந்து வாழ்வியலோடு நெருக்கமான தொடர்புடையதாகவும் உள்ளது. தமிழிசை மரபின் அறாத் தொடர்ச்சியான ஒரு நீட்சியையே நாம் நமது மரபிலும், இசைமரபிலும் காணமுடிகின்றது.

சுவாமி விபுலானந்தர் யாழ்நூலை ஆக்கியதற்கான அடிப்படை ஈழத்தமிழர்களிடையே மரபினடிப்படையில் நீண்டிருந்த இசை மரபின் தாக்கமே என்பதை நாம் இங்கு மனங்கொள்ள வேண்டும். அவருடைய இளமைக்காலத்தில் அவர் காதுகளில் ஒலித்த கண்ணகி குளிர்த்தியும், வசந்தன் பாடல்களும், கூத்திசையும் அவரது இசைபற்றிய ஆராச்சிக்கான அடித்தளமாக அமைந்தன. ஈழத்தமிழர்களின் பராம்பரியமான தாயகப் பிரதேசங்களான வடக்கிலும் கிழக்கிலும் இன்றுவரை இந்த இசைமரபின் பயில் நிலையை நாம் அவதானிக்க முடியும். இலங்கையில் உள்ள சிங்கள சமூகம் வடஇந்திய இசைமரபோடு நெருக்கமான தொடர்பை கொண்டிருந்த போதிலும் அறுபதுகளுக்கு பின்பு ஏற்பட்ட சிங்கள தேசிய எழுச்சி தங்களுக்கான பண்பாட்டு அடையாளங்களை கட்டமைக்க தொடங்கியது. அவர்களது வண்ணமும், கவியும் பல்வேறு கிராமிய இசைமரபுகளும் இன்றைய சாஸ்திரிய சங்கீதத்திற்கு அடிப்படைகளாக அமைந்தன. இதன் வாரிசுகளாக நாம் அமரதேவா, ஹேமதாச போன்றோர்களை இனங்காண முடியும். ஆனால் ஈழத்தமிழர்களின் இசைமரபுகள் இன்னமும் சாஸ்திர மயப்படாமல் மக்கள் இசையாகவே வழக்கில் உள்ளன.

போராசிரியர் வித்தியானந்தன் ஈழத்து பாரம்பரிய இசை மீட்டுருவாக்கத்திற்கு பல ஆரம்ப முயற்சிகளை மேற்கொண்டார். அவரது முயற்சினால் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் அனுசரணையோடு ஈழத்து பாரம்பரிய இசை மரபுகள் பற்றிய இசைத்தட்டு வெளியிடப்பட்டது. அவரது இந்த முயற்சி இசைத்தட்டு வெளியீட்டுடன் நின்றுவிட்டது. அடுத்த கட்டத்திற்கு அது எடுத்துச் செல்லப்படவில்லை. பின்னைய நாட்களில் அதாவது தொண்ணூறுகளின் பிற்பகுதியில் கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை ஈழத்து இசைமரபை மாணவர்களது கல்வி முறைமைக்குள் இணைத்து செயற்பாடாக்கியது. பல்கலைக்கழகம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் தொலைக்காட்சி தயாரிப்புகளிலும் இசைமரபின் தொடர்ச்சியை வெளிப்படுத்தியது. குறிப்பாக கண்ணகி குளிர்த்தி, கிழக்கிசை, லயம், ஆகிய நிகழ்ச்சிகள் ஈழத்தமிழரின் இசைமரபின் தொடர்ச்சியை அதன் மீட்டுருவாக்கத்திற்கான அடிப்படைகளைத் தந்துள்ளன. இதுபோலவே திருமறைக் கலாமன்றம் யாழ்ப்பாண கூத்துப்பாடல்களையும் இசைநாடகப் பாடல்களையும், வசந்தன் பாடல்களையும் நிகழ்த்துகைகளாகவும் அண்மைய நாட்களில் ஒலி ஒளி இறுவட்டுகளாகவும் வெளியிட்டு ஆவணப்படுத்தி உள்ளது.

ஈழத்தமிழர்களின் தனித்துவமான இசைமரபுகள் என நாம் அடையாளம் காணக்கூடியவையாக: கரகம், கும்மி, மழைக்காவியம், ஒப்பாரி, வயல்பாடல்கள், அம்பா பாடல்கள், கவி, ஊஞ்சல் பாடல்கள், குளிர்த்திப்பாடல்கள், உடுக்கடி காவியம், காத்தவராயன் பாடல்கள், கோவலன் கதைப்பாடல்கள், கண்ணகி வழக்குரை, மாரியம்மன் நடை, மந்திர உச்சாடன முறைகள், கூத்திசைப்பாடல்கள், ஆட்டக்காவடி இசை, நடைக்காவடி இசை, வேடிக்கைப்பாடல்கள், இஸ்லாமியரின் கல்யாணப்பாடல்கள், பக்கீர் பாடல்கள், கிறிஸ்தவர்களின் சிலுவைப்பாடுகள் பற்றிய பாடல்கள் என நீண்டு செல்லும். இந்த இசைமரபு தங்களுக்கான தனித்துவமான தாள ராக ஒத்திசைவுகளைக் கொண்டுள்ளன. இந்த இசைமரபில் இணைந்திருக்கின்ற இசைக் கருவிகள் முக்கியமானவை. உடுக்கு: உடுக்கு இரண்டு வகைப்படும். வெங்கல உடுக்கு எனப்படும் பெரிய உடுக்கு மர உடுக்கு, தேங்காய் சிரட்டைகள் இணைந்த உடுக்கு என இரண்டு வகைப்படுத்தலாம். இதனோடு பறைமேளம்: பறைமேளத்திலும் நாம் இரண்டு வகையை நாம் அவதானிக்கலாம். சங்க இலக்கியத்தில் சொல்லப்படுவதுபோல சிறுபறை, பெரும்பறை இந்தப் பாகுபாட்டை நாம் ஈழத்திலும் காணலாம். பறையோடு இணைந்து வருகின்ற சொர்ணாளி ஈழத்திசையில் குழல் வாத்தியமாக உள்ளது. சல்லரி எனப்படும் தாளம், சிலம்பு, தாளமாங்காய், மத்தளம், கொட்டு, சங்கு என இவற்றை வகைப்படுத்திக் நாம் விளங்கிக்கொள்ள முடியும்.

இன்று நம்மத்தியில் இசைவாணர்களும் இசை விற்பனர்களும் உள்ளனர். நாம் கர்நாடக இசையையே நம்மிசையாக கருதி அதனையே நம் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கின்றோம். ஆனால் நம் இசைமரபை மறந்துபோயுள்ளோம். வெறும் தெலுங்கு கீhத்தனைகளை பயிலுகின்ற நாம் நம் எதிர்காலச் சந்ததியினருக்கு நம்மிசை மரபை கற்றுக்கொடுக்க வேண்டும். புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ்ப் பாடசாலைகள் இதில் தீவிர கவனம் கொள்ள வேண்டும். அத்துடன் நமது பல்கலைக்கழகங்கள் இதில் அக்கறையோடு செயல்பட்டு கல்விப் பாடத்திட்டத்தில் ஒரு அங்கமாக இதனையும் இணைக்க வேண்டும். புலம்பெயர்ந்த வெளிநாடுகளில் இயங்குகின்ற ஈழத்தமிழர்கள் இதில் காத்திரமாக பங்களிப்பு செய்யமுடியும்.

Sunday, 27 June 2010

அகம் அறிந்திடின்

அகம் அறிந்திடின்
முகம் தேவையில்லை
உன் முகம் பார்த்தால்..
யாகம் தேவையில்லை
பாகம் பிரிவில்லை
தாகம் தணியும்
சுகம் வரும்
சுபம் தரும்
-சூர்யா-




http://www.facebook.com/photo.php?pid=1377610&id=1313264151&subject=154437608809




முழு நிலவு
மூழ்கிய கனவு
எழும் நினைவு
எழுதாப் புனைவு
அடங்கிய அலை
அலையும் நிலை
அவள் சிலை
வாழுமோ கலை?!
-சூர்யா-




http://www.facebook.com/photo.php?pid=401054&id=1782415579&subject=154437608809



Saturday, 26 June 2010

ஈழம் தலைவணங்குது பிரேம், பிரேமினி

இவன் ஈழத்தமிழன்








இஸ்லாத்தில் சாதி, வர்க்கப் பிரிவினைகள்

சாதிப் பிரிவினைகளுக்குச் சமய மாரக்கங்கள் அல்லது கடவுள் எனக்கூறுவது அபத்தம். சாதியவர்க்கப் பிரிவினைகளுக்கு ஆறாவது அறிவாகிய பகுத்தறிவைக் கொண்ட மனிதரே காரணம். எனினும், எல்லா இறை மார்க்கங்களையும் மனித மூடத்தனத்தையும் ஆய்வு செய்தல் சாதியத்தின் தோன்றலைப் பகுத்தறிய வாய்ப்பாக இருக்கும்.

ஏகத்துவம் என்ற பெயரைக் கொண்டு ஒரே கடவுள் ஒரே மதம் என்று கூறும் இஸ்லாத்தில் எத்தனை பிரிவுகள் என்று தகவல்கள் கீழ்கண்டவாறு தெரிவிக்கின்றன.

முஸ்லீம்களில் சுன்னி(Sunni), ஷியா(Shia) என்று இரு பெரும் பிரிவுகள் உள்ளன. உலகெங்கிலும் ஒரே கடவுள் தான் என்று சொல்லிக்கொள்ளும் இந்த முஸ்லீம்கள் தம் சக மதத்தவரையே கொன்றுகுவித்து வருகிறார்கள். இன்றைக்கும் பாகிஸ்தானில் மசூதிகளில் குண்டு வெடிப்பதற்கு இதுவே காரணம்.

அநேக மதக்கலவரங்கள் பல முஸ்லீம் நாடுகளிலும் இந்த இரு பிரிவினருக்கு இடையில் தான் நடக்கிறது.

* ஷியா முஸ்லீம் சுன்னி முஸ்லீம்களின் மசூதிக்குச் செல்லமாட்டார்.

* இந்த இரு பிரிவினரும் அஹமதியா மசூதிக்குச் செல்லமாட்டார்கள்.

* இந்த மூன்று பிரிவினரும் சுஃபி மசூதிக்குச் செல்லமாட்டார்கள்

* இந்த நான்கு பிரிவினரும் முஜாஹிதீன் மசூதிக்குச் செல்லமாட்டார்கள்.

* இப்படி முஸ்லீகளிலேயே 13 பிரிவுகள் இருக்கின்றன.

* இது மட்டுமா முஸ்லீம்களின் வேறுபல பிரிவினரையும் பார்க்கலாம். (ஆங்கிலத்தில்)

Ansari
Arain
Awan
Bohra
Dawoodi Bohra
Dekkani
Dudekula
Ehle-Hadith
Hanabali
Hanafi
Ismaili
Khoja
Labbai
Lebbai
Lodhi
Malik
Mapila
Maraicar
Memon
Mugal
Mughal
Pathan
Quresh
Qureshi
Rajput
Rowther
Salafi
Shafi
Sheikh
Shia
Siddiqui
Sunni Hanafi
Sunni Malik
Sunni Shafi
Syed

இத்தனை சாதிகளைக் கொண்ட முஸ்லீம்கள் வேறு சாதிகளில் பெண் கொடுக்கவோ எடுக்கவோ மாட்டார்கள். அதிலும் மரைக்காயர் மற்றும் லெப்பைகள் போன்றோர் அரபு முஸ்லீம்கள் என்று கூறிக்கொள்வர். இவர்களைப் பொறுத்தவரை மற்றவர்களுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள். சாதிகளும் அதில் மேல் கீழ் என்று பிரிவுகளும் முஸ்லீம்களிலும் உண்டு. பட்டாணி முஸ்லீம் பெண்மணியை நாசுவன் சாதி ஆணுக்கு திருமணம் செய்து வைக்கமாட்டார்கள்.

இல்லையென்றால் மேட்ரிமோனியல் தளங்கள் அவர்கள் வசதிக்காக இத்தைனைப் பிரிவுகளை உண்டாக்கி வியாபாரம் செய்ய முன்வருமா என்ன? படம் கீழே!



இத்தனைப் பிரிவுகளுக்குள்ளும் நிறைய ஏற்றத்தாழ்வுகள் உண்டு.

அவ்வளவு ஏன், அமெரிக்கா ஈராக்கின் இலட்சக்கணக்கான மக்களை அழித்து அந்நாட்டு எண்ணை வளத்தை அபகரித்துக்கொண்டது தெரிந்த செய்தியே! உண்மையோ முற்றிலும் வேறானது. ஈராக்கின் கோரப்படுகொலைகளுக்கு மூலக்காரணம் அங்கே நிலவிய ஷியா , சுன்னி பிரிவுச்சண்டையே! அதை அமெரிக்கா நரித்தனமாக பயன்படுத்திக் கொண்டது என்பதே உண்மை.

எண்ணெய் வளங்களை ஒருங்கே கொண்ட மொத்த முஸ்லீம்நாடுகளும் ஒற்றுமையாக இருந்திருந்தால் அமெரிக்கா என்றைக்கோ பிச்சைக்கார நாடாகி திருவோடு ஏந்தி இருக்கும். இன்றைக்கும் அமெரிக்கா பிழைத்து வருவது எண்ணெய் விற்பனைக்கு ஷேக்குகள் அமெரிக்க டாலரை உபயோகிப்பதால் தான். ஈராக்கைச் சுற்றியுள்ள மற்ற முஸ்லீம் நாடுகளின் முழுமையான ஆதரவுடனேயே அமெரிக்கா அந்நாட்டை அழித்தது என்றால் மிகையில்லை. அதிபர் சதாம் உசேனின் படுகொலைக்கு அதே மதத்தைச் சேர்ந்தவர்களே காரணம் ஆனார்கள். ஏன், சுன்னி ஷியா பிரிவினை.

ஆனால் இவர்கள் வெளியே சொல்லிக் கொள்வதோ ஒரே இறைவன், ஒரே மதம், ஒன்றான மக்கள் என்றுதான். !

ஒரே கடவுள் ஒரே மதம் என்று கூறிக்கொள்ளும் இவர்களுக்குள் எத்தனைக் கொடிய கொலைகள். அப்பாவி மக்களும் ஊடகங்கள் கூறுவது போல இந்துக்கள் மட்டுமே சாதிப்பிரிவினை கொண்டு சண்டை இட்டுக் கொள்கிறார்கள் என்று நம்பி ஏமாந்து போகிறார்கள். வெறும் ஆயிரம், இரண்டாயிரம் வருடங்கள் கொண்ட மதங்களுக்குள்ளேயே இத்தனை பிரிவுகள் இருக்கின்றன.

பலஆயிரம் வருட பாரம்பரியம் உள்ள இந்துக்களின் வாழ்கையில் 1280 வகையான மத புத்தகங்கள் உள்ளன. பல ஆயிரம் வகையான சொற்பொழிவுகளும், சொற்பொழிவாளர்களும் இருக்கிறார்கள். என்னிலடங்கா கடவுளர்கள் உள்ளனர். பல வகையான மகான்களும், ரிஷிகளும், சித்தர்களும் இருக்கின்றனர். பல்வேறு வகையாக தத்துவங்கள் போதிக்கப்படுகின்றன. இந்து தர்மத்தின் படி வாழும் மக்கள் நூறுக்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகள் பேசும் மக்களாக இருக்கின்றனர். ஆயிரக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன.

இந்துக்களில் மாரியம்மனை கும்பிடுபவர் முருகனை அவமதிப்பதில்லை. பிள்ளையாரைக் கும்பிடுபவன் ஐயப்பனை வெறுப்பதில்லை. விஷ்னு பக்தன் ஆயினும் சிவன் கோவிலுக்குப் போகாமல் இருப்பதில்லை. சிவன் பக்தனாயினும் திருப்பதிக்குப் போய் வழிபடாத இந்துக்கள் இருக்கமுடியாது. ஏன் இந்துக்கள் வேளாங்கன்னி மாதாவையும், நாகூர் தர்காவையும் கூட ஒரே கடவுளின் தோற்றமாகவே பார்க்கின்றனர். பல நூறு கடவுளர்களை வழிபடுபவராயினும் இந்துக்களுக்கு எல்லாம் கடவுளே! அதாவது அடிப்படையில் ஏகத்துவம்! "ஏகன் அநேகன் இறைவனடி போற்றி" என்கிறது சிவபுராணம்.

ஒரே மதம், ஒரே தேவன் என்று சொல்லிக்கொண்டு ஒரு நாட்டையே பிரிவினையால் அழிக்கும் பிற மதத்தவரை விட பல நூறு கடவுளரைக் கொண்டாலும் ஒரே கலாச்சாரம் ஒன்றான வாழ்க்கை என்று அமைதியாக வாழும் இந்துக்களை மட்டும் சாதிப் பாகுபாட்டுக்கு காரணமென்று கூறுவது ஏற்புடையதல்ல.

ஆக முடிவாக, சாதிப் பிரிவினைகளுக்குச் சமய மாரக்கங்கள் அல்லது கடவுள் எனக்கூறுவது அபத்தம். சாதியவர்க்கப் பிரிவினைகளுக்கு ஆறாவது அறிவாகிய பகுத்தறிவைக் கொண்ட மனிதரே காரணம்.

Friday, 25 June 2010

இஸ்லாம் ஒரு வன்புணர்ச்சி மார்க்கம்

அரபியா நாடுகளிலே பெண்கள் அதிகமாக குடும்ப உறுப்பினர்களால் வன்புணர்ச்சிக்கு(incest) உட்படுத்தப்படுகின்றனர். இது ஏன்?!

Incest is Halal in Islam


by Ayesha Ahmed(ex- Muslim girl)
http://www.islam-watch.org/AyeshaAhmed/Incest-Halal-in-Islam.htm

An Egyptian professor of Philosophy Dr. Hasan Hanafi stirred up a hornet's nest among Muslims by comparing the Quran with a supermarket where you can find whatever you are looking for. Muslims declared him apostate and called for his beheading. Actually Dr Hanafi is a true Muslim who understands Quran correctly. Quran is a truly universal book. It is for every one, including killers, robbers, polygamists, rapists, pedophiles, incest artists, you name it. Even those who desire to sleep with their own underage daughters find an aya for it. That is the reason why Muslims love the Quran, read it day and night and never want to change it..


PREACHER (addressing his four permanent and six temporary muta wives): “Today we will study aya 2.223 of holy Quran.”

“Your women are a tilth for you (to cultivate) so go to your tilth as ye will”

[Note: Allah uses the word “nisa” meaning “women“ and not wives (zawaj) as some apologists translate to hide the true intention of Allah to appease their western masters. Thus Allah says, your women are your properties and you can have sex with them in any way you want.]

WIFE No. 1: Whom does Allah mean by “your women”.

PREACHER: By your women Allah means your wives, your daughters and your right hand possessions.” Thus sex with wives, daughters and slave girls is halal according to this aya.”

WIFE No. 1: “Sex with daughters is halal? Isn't that incest . I don’t think most Muslims approve of that”.

PREACHER: “Most Muslims are influenced by kafir laws and hardly practice Islam of quran and sunna. They shun many Quranic tenets which were practiced by our prophet and his sahaba (companions).”

Wife No.2: “They do?”

PREACHER. “Sure they do.. For example they shun sex with underage girls which is sanctioned by Allah in 65.4 and was practiced by our prophet. Our prophet had sex with 9 year old Ayesha and god knows how many under age slave girls captured from kuffar. They shun polygamy (4.3) and changing wives (4.80) which has been mainstay of Muslim household's. Prophet, had nine wives when he died. Hasan, our prophet’s beloved grandson used to marry in the morning, had sex all day and divorced in the evening. They shun sex with slave girls (4.3, 4.24, 23.633.50, and 70.30) and forget that lure of sex with captured slave women was the inspiration for Mujahids to capture half the world in record time. Our prophet had sex with hundreds of enslaved women after raiding kuffar villages. He was sanctioned 20% of all booty by Allah including captured kuffar women.

Wife No. 3: “But did our prophet practice incest too"?

PREACHER: “Sure he did”

WIFE No. 4: “You mean to say our prophet slept with his daughters"?

PREACHER “No he could not. The reason is when the aya 2.223 came down all of prophet’s daughters had been married and gone and were in the ownership of their husbands. But he did practice incest by having sex with his only daughter-in-law, Zainab, who was like a daughter. He desired it, his son Zaid cooperated, and Allah blessed it in aya 33.37”.

MUTA WIFE No. 6: “That means incest is halal and is blessed by Allah?”

PREACHER: “Yes, indeed it is. Now that we all know and agree that incest is halal and a sunna, please go and send our eldest daughter to my bedroom. Allah will not only bless and give sawab to me and her, you all will get blessings.. Jazakallah khair”.

And daughters they did send to their husband's bedroom regularly to gain brownie points for paradise.

read more @
http://www.islam-watch.org/AyeshaAhmed/Incest-Halal-in-Islam.htm

தலைவரின் திருத்த முடியாத கழுதைகள்!!!

உலகத்தமிழ்த் தலைவரின் திருத்த முடியாத கழுதைகள்!!!

செம்மொழி மாநாடும் கலைஞரின் தமிழ்ப்பணியும்



திவியரஞ்சினியன்

கல்விச் சுமையால் வலையில் அதிக கவனம் செலுத்தமுடியவில்லை. இதுவே ஆடிக்கு ஒன்று அமாவாசைக்கு ஒன்றென்று பதிவு எழுதிய வண்ணம் இருக்கக் காரணம்! இது இப்படியிருக்க; "செம்மொழி மாநாடு நடக்கும் போது ஒருபதிவேனும் பதியாட்டி தமிழன் என்று பெருமை சொல்லமுடியுமா? " என்று கடுந்தொனியில் கலைஞர் கனவில் வந்து கேட்டுத் தொலைத்துவிட்டார். அதுதான் ஒருபதிவு! எனக்கும் கலைஞருக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. கலைஞரை எனக்கு நல்லாத் தெரியும்.{அவர் குணத்தை நல்லாத் தெரியும் என்கிறேன்.........வேறுமாதிரி எதுவும் யோசிக்க வேண்டாம்:-) }ஆனால் அவருக்கு என்னை மட்டுமல்ல உண்மையான தமிழ்ப்பற்று என்றால் என்ன என்றுகூடத் தெரியாது!

செம்மொழி மாநாட்டு கண்காட்சிக்காய் ஒராண்டு காலமாய் சுடுமண்ணில் திருக்குறள்களைப் பதிந்து கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்காத காரணத்தால் தான் ஆக்கிய திருக்குறள் சுடுமண் ஆக்கங்கள் வீணாகிவிட்டனவே என்ற விரக்தியோடு மரத்திலே தூங்கிலிட்டு மரணித்த மாணவன்பற்றி கலைஞர் அறிந்தே இருக்கமாட்டார்! அவர் எழுதிய கடிதத்தில் ஈழத்தமிழ் மக்களைப்பற்றியும் மரநடுகை பற்றியும் குறிப்பிட்டுள்ளதை கலைஞர் எப்படித் தெரிந்துகொள்வார்?

யாவரும் கேளிர் என்றால் அனைவரும் உறவினரே என்று பொருள்படும். கேளீர் என்றால் கேளுங்களேன் என்று அழுத்திச் சொல்வது! ரகுமான் கேளீர் என்றே செம்மொழி மாநாட்டுப் பாடலில் உச்சரிக்கின்றார். பாவம் அவர் தமிழாசிரியர் இல்லைத்தானே! எனவே அவரை வம்புக்கு இழுக்கக்கூடாது!!!! ஆனால் முத்தமிழ் கலைஞர்? ஐயகோ.......... வயது போனதால் காது கேளாமல் போயிருக்கும்! எனவே அவரை குறைசொல்லவும் கூடாது! அப்ப.......யாரைத்தான் நொந்துகொள்வது?

" போரைப் புறந்தள்ளி" என்று செம்மொழிப் பாடலில் கலைஞர் சுட்டுகிறார். அவரெழுதிய பாடலாயிற்றே!!! இந்தி எதிர்ப்பு "போரா"ட்டத்தில் வருகின்ற "போர்" எந்தப் போர்? இராச இராச மன்னன் தொடுத்த போர் கேவலமானதா என்ன? புறனானூறு முழுக்க போரின் புகழ்பாடப்பட்டுள்ளதே? அப்படியானால் "போரைப் புறந்தள்ளி" யாருக்கு வைத்த உள்குத்து? கலைஞர் தும்மினால் இருமினால் விக்கினால் தமிழ்த்தாயே கலங்கிவிடும்.......... அவர் எழுதிய கவிதையில் குறைபிடிக்கலாமா? கூடவே கூடாது!!! இப்படித்தான் இருந்துள்ளார்கள் படித்து பட்டம்பெற்ற பேராசிரியர்கள் யாவரும்! எனவே பொதுசனங்களாகிய எங்களுக்கு என்னத்துக்கு வம்பு? "கூடவே கூடாது" என்பதை நாமும் ஆமோதிப்போம்!

மாநாட்டு தொடக்க நிகழ்வில் பிறமொழியாளர்களின் ஆங்கில உரைகளுக்கு தமிழ்மொழி பெயர்ப்பு வழங்கப்படவில்லையாம்! அதாவது ஆங்கிலம் படித்து அவர்கள் என்ன உரையாற்றினார்கள் எனத் தெரிந்து கொள்ளுங்கள் என்று ஆங்கிலத் திணிப்பு நடந்துள்ளது மறைமுகமாக!!!! தமிழறிஞர்கள் ஆற்றிய உரைகளில் ஆங்கிலமோகம் கலந்திருந்ததாக ஆங்கிலப் படிப்பறிவு இல்லாத தமிழ்ச்சனங்கள் நொந்துகொண்டனர்!!!! அதுசரி ஆங்கிலமோகம் இந்தச்சனங்களுக்கு இல்லாதது "ஆங்கிலப்படிப்பறிவு' இல்லாததாலேயே என்று தட்டிக்கழித்துவிட்டர் தமிழறிஞர்கள்!!!! என்ன செய்ய, விழாபற்றிய அறிக்கைகள் ஆங்கிலத்திலேயே அனுப்பப்பட்டதாக பல ஊடகங்கள் சாடியுள்ளதை அறிந்தபோது இந்த சின்னச் சின்ன தவறுகளை வலையில் சுட்டுவது முறையாகுமா? இதை ஒருவிசயமாக கருதலாமா? கூடவே கூடாது!!!

சரி, இதுபோகட்டும்! முக்கியமான விசயம் என்னென்றா........ஈழத்தில் வடகிழக்குப் பகுதியில் ஈழத்தமிழர்கள் வசிக்கின்றார்கள். மத்தியநாட்டில் தமிழகத் தமிழர்கள் வாழ்கின்றார்கள்.இவர்கள் பிரித்தானியர் காலத்தில் இலங்கைக்கு தொழிலாளிகளாக அழைத்துவரப்பட்டவர்கள். மாநாட்டில் பங்குபற்ற யாழ்ப்பாணத்து பல்கலைக்கழகத்துப் பேராசிரியர்களுக்கும் தமிழறிஞர்களுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.மத்தியநாட்டில் வாழும் வாழ்வாதரத்தில் பின் தங்கிய கூலித்தொழிலாளிகளாக வாழும் தமிழகத் தமிழரை பிரதிநிதித்துவப்படுத்தும் வண்ணம் எவரும் அழைக்கப்பட்டிருக்கவில்லை! இலங்கை தமிழ் முஸ்லீம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படும் வகையிலும் எவரும் அழைக்கப்பட்டிருக்கவில்லை! இலங்கையில் மத்தியநாட்டுத் தமிழர்கள் வாழ்வியல்,அரசியல்ரீதியில் தனித்துவமான பிரச்சினைகளை முகங்கொடுக்கும் தனித்துவமான தமிழ்ச்சமூகம் என்பதை கருணாநிதி அறிந்திருக்கவில்லையா? இலங்கை தமிழ்முஸ்லீம் சமூகம் தமிழரல்லாதவர்களாக இலங்கை அரசியலால் பிரித்தாளப்படும் நிலையை முத்தமிழறிஞர் கேள்விப்படவில்லையா? ஈழத்தமிழ் முஸ்லீம் சமூகத்தில் தமிழறிஞர்கள் பலருண்டு! எனவே அவர்களைப் பிரதிநிதிப்படுத்தும்வகையில் அழைப்புவிடப்பட்டிருந்தால் "பிரித்தாளப்படும்" தந்திரத்துக்கு ஆப்புவைக்க ஏதுவான காரணிகளை உருவாக்கியிருக்குமே!!!! அதை நலுவவிட்டார் உலகத்தமிழ்த் தலைவர்!!!!

இந்த மாநாடு வெறும் மொழிக்கா? அல்லகு மொழியை பேசும் மக்களுக்காகவா? மக்கள் வாழ்ந்தாலே மொழி வாழும்! எனவே இந்தமாநாட்டில் ஈழத்தின் மத்தியநாட்டின் தமிழகத் தமிழர்கள் பிரச்சினைகளை உரையாட, எடுத்துரைக்க எவரும் இல்லையே?

கரூமம்....கரூமம்.......இது அரசியல் மாநாட்டில்லை! மொழி மாநாடு! இங்கு தமிழ்மொழி வளர்ச்சிபற்றியே உரையாடுவோம்! அதனாலேயே கலைஞர் ஐயா தமிழ் கூட்டமைப்பு அரசியல் தலைவர்களுக்கோ அல்லது மத்தியநாட்டு தமிழ் அரசியல் தலைவர்களுக்கோ அழைப்பிதழை வழங்கவில்லை!!! இப்படி நியாயம் சொல்கின்றனர் உலகத்தமிழ்த் தலைவரின் திருத்த முடியாத கழுதைகள்!!!

அப்படியானால் ஏன் பிரதீபாபட்டீலுக்கு அழைப்பிதழ்? ஏன் ஆளுநர் பெர்னாலாவுக்கு அழைப்பிதழ்? ஸ்டாலினுக்கு ஏன் அழைப்பிதழ் வழங்கப்பட்டது? இவர்கள் அரசியல் தலைவர்கள் ஆயிற்றே!!! {முத்தமிழறிஞர் கலைஞர் பங்குபற்றாமல் விழா நடந்தால் அது விழாவுக்கே அழகில்லை!!! கனிமொழி கவிஞர்! அதனால் அரசியல் தலைவர்கள் என்று அவர்களைக் கருதுவது மாபெரும் தவறு!! }

கலைஞர் காலைச் சாப்பாட்டுக்கும் மதியச்சாப்பாட்டுக்கும் இடையில் இருந்த உண்ணாநோன்பைப் பாராட்டி தமிழ்க்காவலர் என்று பட்டம்சூட்ட திராவிடர் கழக வீரமணியர்( தமிழர் தலைவர் என்று இவருக்கு பட்டம் வேறு!!!), சு.பா.வீரபாண்டியர் என்று அல்லக்கை நொள்ளக்கை இருக்கையில் கலைஞரை தவறாகப் பேசக்கூடாது!!!! கூடவே கூடாது!
தமிழக வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்மொழியில் வழக்காட உண்ணாநோன்பு இருந்தபோது அவர்களை காவல்த்துறையை ஏவிவிட்டு கைதுசெய்த கையோடு மாநாட்டுக்கு பங்குபற்ற வந்த கலைஞர் ஐயா, எவ்வளவு நல்லவர் தெரியுமா? இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறைசென்ற அவர், சிறை சென்றாலே தமிழுக்கு மரியாதை என்று கருதி உண்ணாநோன்பு இருந்தவர்களை சிறைக்கு அனுப்பிய தமிழ்க் காவலர் அவர்! அவரைப் போய் குறைஞ்சு மதிப்பிட்டாச்சே!!! சீ...சீ...தப்பு!!!

மொத்தத்தில் கலைஞர் ஐயாவுக்கு இருக்கும் தமிழறிவை நினைக்கும்போது........ஐயகோ புல்லரிக்கிறது! அப்பாடியோ.......! கலைஞர் ஐயா கனவிலே வந்து கேட்டுக்கொண்டதுக்கு இணங்க, ஒருமாதிரி ஒருபதிவை செம்மொழி மாநாட்டுக்கு காணிக்கை ஆக்கும்வகையில் எழுதியாயிற்று!!!! இதை வாசித்தவர்கள் தேர்தல் வரும்போது மறக்காமல் கலைஞருக்கு வாக்கைப்( அதுதான் ஓட்டை) போட்டுடுங்கோ!!!!

திவியரஞ்சினியன்
http://thiviyaranchiniyan.blogspot.com/2010/06/blog-post.html

Wednesday, 23 June 2010

செம்மொழியும் அறிவியலும்

தமிழ் மொழியை கலை இலக்கிய மொழியாக மட்டும் இன்றி அறிவியல் தொழில் நுட்ப மொழியாகவும் மாற்றினால் தான் எந்தக் காலத்திற்கும் ஏற்புடையதாக தமிழ் அமையும். இதற்கென பல்கலைக்கழகங்கள் செய்த முயற்சிகளில் நெகிழ்வுத் தன்மை இல்லை.
இதனால் கடினமான சொற் களால் அமைந்த அறிவியல் சொற்கள் உயர் கல்வி அறிவியலில் மாணவர்களைக் கவரவில்லை.

கல்லூரிகளில் அறிவியலை தமிழில் படிப்பதை விட, ஆங்கிலத்தில் படிப்பது எளிதாக உள்ளது என மாணவர்கள் கூறும் அளவுக்கு பாடப்புத்தகங்கள் இருந்தன. இரண்டாவதாக அறிவியல் பாடங்களை தமிழிலும் படிக்கலாம், தேர்வுகள் எழுதலாம் என்ற நிலை வந்தாலும் அதற்கேற்ற "அறிவியல் தமிழ்' சூழல் கல்லூரிகளில் இல்லை. பள்ளிகளைப் பொறுத்தவரை, மாணவர்கள் ஆங்கிலத்தை பாட மொழியாகக் கொண்டு அறிவியலைக் கற்கும் போது, அறிவியலை விட ஆங்கிலத்தைப் புரிந்து கொள்வதற்கே அதிக நேரம் ஆகிறது.

ஆங்கில வழி அறிவியல் கல்வி, தாய் மொழி அறிவியல் கல்வியைப் போல சிந்தனையைத் தூண்டுவதில்லை. மனப்பாட இயந்திரங்களாகவே மாணவர்கள் உள்ளனர்.
இதனால் தான் பிளஸ்2வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்களை பெறும் நிலை உள்ளது. இந்த நிலையை இப்போது தான் பெற்றோர்கள் உணர்கின்றனர். பெற்றோர் களின் சி.பி.எஸ்.இ., மோகத் திற்கு இந்த உணர்தலே காரணம்.

இன்றைய பேராசிரியர்களுக்கு, அவர்கள் பாடத்தை ஆங்கிலத்தில் விளக்கிக் கூறும் அளவுக்கு, தமிழில் விளக்கிக் கூற முடியாது. கிராமப்புற மாணவர்கள் இன்ஜினியரிங் கல்லூரிகளில் முதல் ஆண்டில் மிரண்டு நிற்பதற்கு இதுதான் காரணமாகும்.

தமிழ் மொழி பேராசிரியர் களுக்கு தடையாக இருப்பதால் கல்லூரிச் சுவர்களைத் தாண்டி மக்களிடம் அறிவியலைக் கொண்டு செல்வதும் இயலாத செயலாக உள்ளது.
அறிவியல் தமிழை வளர்க்க, மக்கள் அதிகம் கேட்கும் எப்.எம்., ரேடியோக்களும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அரசு சார்பில் நடத்தும் ரேடியோ, அறிவியல் தமிழை வளர்க்க நடத்தும் "அறிவியல் சுரங்கம்' போன்ற நிகழ்ச்சிகளுக்கு வரும் பேராசிரியர்கள் தமிழில் விளக்கிக் கூற முடியாமல், தொகுப்பாளர்களின் கேள்விகளுக்கு விடை தெரிந்தும் திணறுகின்றனர்.

ஜப்பானில் ஒரு ஆங்கில வார்த்தை கூட தெரியாமல், ஒருவர் விஞ்ஞானி ஆக வர முடியும். இந்தியாவில் அந்நிலை வந்தால் தான் அறிவியலில் உண்மையான வளர்ச்சி ஏற்படும்.
கலை, இலக்கியமாக மட்டுமின்றி அறிவியல், தொழில்நுட்பம், அன்றாடம் பயன்பாட்டுக்கு ஏற்ற மொழியாக, எந்த மொழி வளர்கிறதோ அந்த மொழி தான் காலத்தைக் கடந்து நிற்கும். செம்மொழி தமிழ் அந்த உயரிய நிலையை அடைய வேண்டும்.

நன்றி:
http://www.facebook.com/notes/tamil-tamil/cemmoliyum-ariviyalum-/403680274709
காணொளி: செம்மொழியான தமிழ் மொழியாம்

Tuesday, 22 June 2010

இராவணன் வெட்டு

இராவணன் வணங்கிய தலம்



ஈழத்தமிழரின் தொன்மை வரலாற்று எச்சங்கள்

பழம் பெருமை மிக்க திருக்கோணேசுவரம்

திருக்கோணேசுவரம்

லேனா தமிழ்வாணன்

காலத்திற்குக் காலம் கடற்கோள்களினால் பண்டைய ஈழம் அழிந்த போது, ஈழத்தின் பல பகுதிகள் கடலுள் மூழ்கின. நிலப்பகுதிகள் நீருள் அமிழ்ந்தும், சில பகுதிகள் நில மட்டத்தினின்றும் உயர்ந்தும் காணப்பட்டன. மூன்று முறை கடல்கோள்கள் ஏற்பட்டதாகவும் மூன்றாவது கடல்கோளின்பின் எஞ்சியுள்ளதே தற்போதைய ஈழம் என்பதையும் வரலாறுகள் விளக்கியுள்ளன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே சிவபூமியாக விளங்கியது ஈழம். ஈழத்தின் பழம்பெருமை வாய்ந்த சிவத்தலங்களுள் திருக்கோணேஸ்வரம் சிறப்புப்பெற்றது. ஈழத்தின் வரலாற்றோடு தொடர்பு கொண்டது. கிழக்கே திருக்கோணேஸ்வரம், வடமேற்கே திருக்கேதீஸ்வரம், வடக்கே நகுலேஸ்வரம், மேற்கே முனீஸ்வரம், தென்கிழக்கே தொண்டீஸ்வரம் எனப் பஞ்ச ஈஸ்வரங்களைக் கொண்ட சிவபூமியாக ஈழம் விளங்கியது.

ஈழத்துப் புராதன பஞ்ச ஈஸ்வரர் கோவில்கள் - மேலும் அறிய இங்கே அழுத்தவும்


பஞ்ச ஈஸ்வரங்களுள் ஒன்றான திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள திருகோணமலை மாவட்டம், பல்வேறு சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டது. திருகோணமலை இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசமாகக் காணப்படுவதோடு, மிகப்பெரிய இயற்கைத் துறைமுகத்தையும் கொண்டதாக விளங்குகின்றது. இக்காரணத்தினால் இப்பிரதேசம் உலகுப் புகழ்பெற்ற பிரதேசமாகவும் காணப்படுகின்றது. ஏறக்குறைய ஆயிரத்து எண்பது சதுரமைல் பரப்பினைக் கொண்டதாக இப்பிரதேசம் அமைந்துள்ளது இப்பிரதேசம் வடக்கே முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களையும், மேற்கே அநுராதபுரம், பொலநறுவை மாவட்டங்களையும், தெற்கே மட்டக்களப்பு மாவட்டத்தினையும், கிழக்கே வங்காள விரிகுடாவினையும் கொண்டதாகக் காணப்படுகின்றது. மூன்றுபுறமும் ஆர்ப்பரிக்கும் கடலின் நடுவே உயர்ந்து நிற்கும் குன்றில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற திருத்தலமான திருக்கோணேசுவரம். ʮ‡க்குன்று அமைந்துள்ள பிரதேசத்தைப் பிரடெரிக்கோட்டை என்று அழைப்பர். ஈழத்திருநாட்டிலே காணப்படுகின்ற பாடல்பெற்ற தலங்களுள் ஒன்றாக விளங்குவது திருக்கோணேஸ்வரம். திருக்கோணேஸ்வரத்தின் ஆரம்பத் தோற்றம், அமைவிடம், காலம் இவைபற்றிய வரலாறு, ஐதீகக்கதைகள், இலக்கியச் சான்றுகள், புதைபொருள் ஆய்வுகள், மேலைநாட்டார் குறிப்புகள், கல்வெட்டுகள் ஆகியவற்றின் மூலம் அறியக் கூடியதாயுள்ளது. கி.மு. 1300 ஆண்டுகளுக்கு முன் கோணேசர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இந்தத் தவலைப் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட கோணேசர் கோயில் கற்தூண்களில் உள்ள கல்வெட்டுகளிலே காணலாம். குவேறொஸ் பாதிரியாரால் எழுதப்பட்ட ‘The Temporal and Spiritual conquest of Celyon’ என்ற நூலிலும் இச்செய்தி காணப்படுகின்றது.

கி.பி.1624 இல் போர்த்துக்கேயர் திருகோணமலையைக் கைப்பற்றி, கோணேசர் ஆலயத்தை நிர்மூலமாக்கியபோது போர்த்துக்கேய படையின் தளபதியாக விளங்கிய கொன்ஸ்ரன்ரைன் டீசா இங்கு கைப்பற்றிய சுவடிகளைப் போர்த்துக்கலிலுள்ள லிஸ்பனுக்கு அனுப்பி வைத்துள்ளான். இவை லிஸ்பனிலுள்ள அஜூடா நூல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அச்சுவடிகளில் மனுராசன் என்னும் மன்னன் இலங்கையை ஆண்டான் என்றும், இவன் கி.மு 1300 ஆம் ஆண்டு கோணேச கோயிலைக் கட்டினான் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் ‘கைலாசபுராணம்’ என்னும் நூலில் மனுநீதிகொண்ட சோழ மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க, அவரது மகனான குளக்கோட்டு மகாராஜா இக்கோயிலைக் கட்டினாரெனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக ‘முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப் பின்னே பறங்கி பிரிக்கவே’ என்ற கல்வெட்டு வரிகள் சான்றாகக் கூறப்பட்டுள்ளன. ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த கோயிலைக் குளக்கோட்டு மன்னன் புனருத்தாரணம் செய்ததோடு, பல திருப்பணிகளையும் செய்துள்ளான் என்பதையே பலரும் ஏற்றுக் கொள்கின்றனர். இம்மன்னன் கோணைநாதருக்குத் தெப்பத் திருவிழா நடத்த ஒரு தெப்பக்குளத்தை ஏற்படுத்தி, அதற்குத் தெற்குப் பக்கமாக ஒரு வெள்ளை வில்வ விருட்சத்தின் கீழ் மண்டபமொன்றைக் கட்டியுள்ளான், தெப்பத் திருவிழாவிற்கு, கோணேசப்பெருமான் ஆலயத்திலிருந்து எழுந்தருளி, இங்கு தங்கிச் செல்வார். பின்னாளில் இம்மண்டபம் கோயிலாக்கப்பட்டு லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வெள்ளை வில்வத்துக் கோணேசர் கோயில்’ என அழைக்கப்பட்டது. குளக்கோட்டு மன்னனுடைய திருப்பணிகளை விளக்கிக் கூறும் நூல் ‘கோணேசர் கல்வெட்டு’ இந்நூலில் குளக்கோட்டு மன்னன் திருக்கோணேஸ்வரம் கோயிலுக்குச் செய்த திருப்பணிகள் பற்றி விளக்கிக் கூறப்பட்டுள்ளன. இச்செய்திகள் யாவும் குளக்கோட்டனுக்கும் ஆலயத்திற்குமுள்ள தொடர்பை வலியுறுத்துகின்றன.

இலங்கையை ஆண்டதாகக் கருதப்படும் இராவணன், திருக்கோணேசர் கோயிலோடு கொண்ட தொடர்புகள் ஏராளம். இம்மன்னனுக்கும் கோணேசர் கோயிலுக்குமிடையிலான தொடர்புகளை தேவாரம், புராணம், இதிகாசம், வரலாறு ஆகியவற்றின் மூலம் அறியலாம். திருக்கோணேஸ்வரத்திலுள்ள மலையின் கிழக்குப் பக்கத்திலுள்ள இராவணன் வெட்டு என்னும் மலைப்பிளவு ஆலயத்திற்கும் இராவணனுக்குமுள்ள தொடர்பை விளக்குகின்றது.








மகரிஷிகளில் ஒருவராகக் கருதப்படுவர் அகத்தியர். வரலாற்றாய்வாளர்களின் கணிப்புப்படி இவர் வாழ்ந்த காலம் கி.மு. 1000 ஆண்டெனக் கொள்ளப்படுகின்றது. இவர் கோணேஸ்வரப் பெருமானை வழிபட்டார் என இதிகாச, புராண வரலாற்றுக் குறிப்புகளில் காணப்படுவதால் இவ்வாலயம் அகத்தியர் காலத்திலேயே இருந்ததெனக் கருதலாம்.

கி.பி. 1263 ஆம் ஆண்டில் இலங்கையைக் கைப்பற்றிய வீரபாண்டிய மன்னர், வெற்றிச்சின்னமாக இரண்டு மீன் இலச்சினைகளை இந்த ஆலயத்தில் பொறித்துச் சென்றுள்ளார். இன்றும் இவ்விரு சின்னங்களும் கோணேசர் கோட்டை நுழைவாயிலில் காணப்படுகின்றன. பாண்டியமன்னன் ஆட்சிக்காலத்தில், மனுநீதிகண்ட சோழனின் மகனாகிய குளக்கோட்டு மன்னன் கோணேசர் ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்தானென ‘யாழ்ப்பாண வைபவமாலை’ என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது. பாண்டிய மன்னர் அநுராதபுரத்திலிருந்தே ஆட்சி செய்துள்ளமை, குளக்கோட்டு மன்னனின் புனருத்தாரண வேலைக்குச் சாதகமாயிருந்திருக்க வேண்டும்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமயக்குரவராகிய திருஞானசம்பந்தர் தமது பதிகங்களில், கோணேசப்பெருமானையும் கோணமாமலையின் இயற்கை அழகையும் குறிப்பிட்டுள்ளதோடு கோவிலும், பாவநாசத் தீர்த்தமும் இருந்த செய்திகளையும் கூறியுள்ளார். இக்கோயிலைப்பற்றி ஒரு பதிகமே பாடியுள்ளார். இவற்றுள் ஏழாவது பாடல் கிடைக்கப் பெறவில்லை. இவர் இலங்கைக்கு வராது தென்னகத்திலுள்ள இராமேஸ்வரத்தில் இருந்தவாறு கோணேஸ்வரத்தின் சிறப்பைப் பாடியுள்ளார். தென் இந்தியாவிலே சிறப்புப் பெற்ற கோயில்களின் வரிசையில் இக்கோயிலும் பாடப்பட்டுள்ளமை இக்கோயில் ஈழத்தில் மட்டுமன்றி இந்தியாவிலும் புகழ் பெற்றிருந்தமையை எடுத்துக்காட்டுகின்றது. இவரது எட்டாவது பாடலில் இராவணனைப் பற்றிய குறிப்புண்டு. கோணேஸ்வரத்திற்கும் இராவணனுக்கும் தொடர்புண்டென்ற மரபு பலராலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றைவிட ஏனைய தென்னகத் தலங்களுக்குப் பாடப்பட்ட பொதுப்பண்புகளை கோணேசர் பதிகத்திலும் கையாண்டுள்ளதோடு, கோணைநாதர் அமர்ந்துள்ள மலையின் இயற்கை அழகையும் சேர்த்துப் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவர் அருளிய பாடலொன்றில் கோணேஸ்வரத்தின் இயற்கை அழகு சில வரிகளில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

‘‘கரைகெழு சந்தும் காரகிற் பிளவும்
அளப்பருங் கனமணி வரன்றி
குரைகட லோதம் நித்திலங் கொழிக்கும்
கோணமா மலையமர்ந் தாரே’’
கி.பி. 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் கோணேஸ்வரத்திற்குத் திருப்புகழ் பாடியுள்ளார். ‘விலைக்கு மேனியில் அணிக்கோவை மேகலை’ எனத் தொடங்கும் பாடலில்,

‘‘நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கோணமலை தலத்தாருகோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடுபூதியில் வருவோனே!’’
எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அப்பரும் சுந்தரரும் அருளிய சேத்திரக்கோவைத் தாண்டகம், ஊர்த்தொகை, திருநாட்டுத்தொகை போன்ற பதிகங்களில் திருக்கோணேஸ்வரம் வைப்புத் தலமாகப் பாடப்பட்டுள்ளது. திருநாவுக்கரசு நாயனார் பாடிய திருநெய்த்தானப் பதிகத்தில்,

‘‘தக்கார் அடியார்க்கு நீயே’’ என்று ஆரம்பிக்கும் பதிகத்தில்,
‘‘…தெக்கார மாகோணத்தானே....’’ என்றும்,
சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணத்தில்,

‘‘அந்நகரில் அமர்ந்து அங்கண் இனிது மேவி
யாழி புடைசூழ்ந்தொலிக்கும் மீழந்தன்னில்
மன்னு திருகோணமலைமகிழ்ந்து....’’

என்ற வரிகளும் காணப்படுகின்றன.

சுந்தரர் அருளிய ஊர்த்தொகையில்,

‘‘நிறைக்காட்டானே நெஞ்சத்தானே....’’

என்று தொடங்கும் பாடலில்,

‘‘…திருமாந்துறையாய் மா கோணத்தானே....’’

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.மு. 543இல் நாடு கடத்தப்பட்டு இலங்கை வந்த விஜயன் என்பவனோடும் திருக்கோணேஸ்வரம் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு வந்த விஜயன் தனது ஆட்சிக்குப் பாதுகாப்பாக கிழக்குத்திசையில் உள்ள தம்பலகாமம் கோணேசகோயிலைப் புதுப்பித்துக் காட்டினானென மயில்வாகனப் புலவர் எழுதிய ‘யாழ்ப்பாண வைபவமாலை’ கூறியுள்ளது.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் மகாசேனன் என்ற மன்னன் இக்கோயிலை அழித்து அந்த இடத்தில் விகாரையைக் கட்டினான். மகாவம்சத்தில் திருகோணமலையிலிருந்த பிராமணக் கடவுளுக்கான கோயில் ஒன்றை மகாசேனன் இடித்தான் என்று கூறப்பட்டுள்ளது. இதனை மகாவம்சத்தின் உரைநூலான வங்சத்தப்பகசினியும் குறிப்பிட்டுள்ளது. மகாசேனன் கட்டிய விகாரையை அழித்து மீண்டும் கோணேசர் ஆலயத்தை இங்கு கட்டியுள்ளனர்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சைவ மறுமலர்ச்சி ஏற்பட்டு பழைய கோயில்கள் கருங்கற் கோயில்களாகக் கட்டப்பட்டபோது, கோணேசர் கோயிலும் கருங்கற்கோவிலாக மாறியிருக்கலாம் எனவும் எண்ண இடமுண்டு. கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் சோழராட்சி நடைபெற்றபோது கோணேசகோயில் பெரிதாகக் கட்டப்பட்டது. இதற்குச் சான்றாகக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழரின் பின் பொலநறுவையை ஆண்ட கஜவாகுமன்னன் கோணைநாயகருக்குப் பல மானியங்களை வழங்கினான் எனக் கோணேசர் கல்வெட்டிலே குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.பி. 12ஆம் நூற்றாண்டின் பின் யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழ் மன்னர்களும் வன்னிச் சிற்றரசர்களும் இக்கோயிலுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

போர்த்துக்கேயர் கி.பி. 1624ஆம் ஆண்டு கோணேசர் ஆலயத்தை அழிக்கு முன் இவ்வாலயத்தைப் பற்றிய தரவுகளை எடுத்துள்ளனர். போர்த்துக்கேய தேசாதிபதியாகிய கொன்ஸ்ரன்ரைன் டீசா நொரங்ஹா என்பவனே இவ்வாலயத்தை அழித்தவன். இக்காலத்தில் எடுக்கப்பட்ட வரைபடங்கள், குறிப்புகள், கட்டிடப்படங்கள் ஆகியன கோணேசர் ஆலயத்தைப்பற்றி அறியப் பெரிதும் உதவுகின்றன. இவனுடைய குறிப்புகளில் அழிக்கப்பட்ட ஆலயத்தின் பரப்புத் தரப்பட்டுள்ளது. கோபுரம் அமைந்திருந்த நிலத்தின் நீளம் 600 பாகம். அகலம் 80 பாகம். இந்நிலப்பரப்பு ஒடுங்கிச் சென்று 30 பாகமாகக் காணப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குறிப்பின்படி அக்காலத்தில் தற்போது ஆலயம் இருக்கும் கோட்டைப்பகுதி முழுவதுமே ஆலயப்பிரதேசமாகக் காணப்பட்டுள்ளது என்பதைப் போர்த்துக்கேயரின் பதிவேடுகளிலிருந்து அறியக்கூடியதாயுள்ளது.

வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி தென்னிந்தியா, கேரளம் ஆகிய இடங்களில் நிலவிய பண்பாடே இலங்கையிலும் காணப்பட்டுள்ளது. இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு, கேரளம் ஆகிய இடங்களில் பரவியிருந்த பண்பாடு பெருங்கற்பண்பாடெனப்பட்டது. தென்னிந்தியக் கோயில்கள் இப்பாண்பாட்டுப் பின்னணியிலேயே தோன்றின. தற்கால ஆய்வுகள் மூலம் மேற்கூறிய பெருங்கற்பண்பாட்டு நிலையே ஈழத்திலும் காணப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையிலும் திருகோணமலை, அநுராதபுரம், புத்தளம் ஆகிய இடங்களிலும் கிடைத்த தொல்பொருள் ஆய்வுகள் மேற்கூறிய முடிவை உறுதி செய்துள்ளன. இப்பண்பாட்டுப் பின்னணியில் தோன்றிய ஆலயங்களுள் கோணேஸ்வரமும் முக்கியமான ஈஸ்வரன் ஆலயமாகக் கருதப்படுகின்றது.

இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கையில் எழுத்தாதாரங்கள் இடம்பெறத் தொடங்கின. அதற்கு முன்பிருந்தே சிவவழிபாடு ஈழமெங்கும் காணப்பட்டுள்ளது.

அந்நியராகிய போர்த்துக்கேயரால் கி.பி. 1624 ஆம் ஆண்டு கோணேசர் ஆலயம் இடிக்கப்படுமுன், அங்கு மூன்று பெரும் ஆலயங்கள் காணப்பட்டுள்ளன. அவை மாதுமை அம்பாளின் பிரம்மாண்டமான கோயில், ஸ்ரீ நாராயணர் கோயில், மலையுச்சியில் மாதுமை அம்பாள் சமேத கோணேசர் கோயில் என்பவை, மலையிலே காணப்பட்ட சமதரைகளில் அமைந்திருந்தன. மலையடிவாரத்திலிருந்து செல்லும்போது மலையின் வடக்கேயும் தெற்கேயும் தோன்றும் உயர்ந்த பாறைகள் படிப்படியாக உயர்ந்து செல்கின்றது. இப்பாறைகளுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பு பரந்த சமதரையாகக் காணப்பட்டது. இச்சமதரையின் தென்திசையிலேயே மாதுமை அம்பாளின் பிரம்மாண்டமான கோயில் கட்டப்பட்டிருந்தது. கர்ப்பக்கிருகத்தில் அம்பாளுடைய சிலாவிக்கிரகமும், ஏனைய பரிவார மூர்த்திகளின் ஆலயங்களும் அமைந்திருந்தன.

இவ்வாலயத்திற்கு வடகிழக்கே பாபநாசதீர்த்தக்கேணி அமைந்திருந்தது. இந்தத் தீர்த்தம் நீள்சதுரவடிவில் அமைந்ததாய் கருங்கற்களாலான படித்துறைகளைக் கொண்டதாகக் கட்டப்பட்டிருந்தது. கடல்மட்டத்துக்குக்கீழ் ஆழமுடையதாகக் காணப்பட்டமையினால் வற்றாத நீரூற்றாகக் காணப்பட்டது. கோயிலுக்குச் செல்லும் மக்கள் தீர்த்தமாட இதனைப் பயன்படுத்தியதால் விசேடகாலங்களில் சுவாமி தீர்த்தமாட வேறொரு பாபநாசக்கிணறும் அமைக்கப்பட்டிருந்தது. இக்கேணிக்கு வடக்குப் பக்கமாகத் தீர்த்த மண்டபம் காணப்படுகின்றது. சுவாமி தீர்த்தமாடிய பின் இம்மண்டபத்தில் எழுந்தருளுவதால் இதனை ஆஸ்தான மண்டபம் என்றழைப்பர். போர்த்துக்கேயர் ஆலயத்தை அழித்தபொழுது தீர்த்தக்கேணி எவ்வாறோ தப்பிவிட்டது. மாதுமையம்பாள் சமேத கோணேசப் பெருமான் தீர்த்கோற்சவ காலத்தில் தீர்த்தமாட இங்கு எழுந்தருளுவது தற் காலத்திலும் நடைபெறுகின்றது.

மாதுமை அம்பாளின் ஆலயம் பரந்து விரிந்த சமதரையிலே காணப்பட்டமையினால் இதனைச் சுற்றித் தேரோடும் வீதியும் காணப்பட்டது. மடங்களும், மாடங்களும் அமைக்கப்பட்டு உள்நாட்டு, வெளிநாட்டுப் பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் பாபநாசத்தைச் சுற்றி ஐந்து கிணறுகளும் கட்டப்பட்டிருந்தன. கோணேசப் பெருமானுடைய இரதோற்சவம் இங்கிருந்தே ஆரம்பமாகும். மலையுச்சியிலிருந்து எழுந்தருளிவந்த கோணேசப்பெருமான், மாதுமை அம்பாள் ஆலயத்தைச் சுற்றிவந்து, இரதத்தில் எழுந்தருளி மலையடிவாரத்தைத் தாண்டி தற்காலத்தில் பட்டணமாக மாறியுள்ள பிரதேசங்களை வலம்வந்து, வடதிசைக் கரையோரமாகவுள்ள வீதிவழியாகக் கோணேஸ்வரத்தை அடைவர். மாதுமையம்பாள் எழுந்தருளிய கோயில் மிக உயர்ந்த கோபுரத்தைக் கொண்டதாகக் காணப்பட்டதோடு கிழக்கு நோக்கிய வாயிலைக் கொண்டிருந்தது. தற்காலத்தில் கச்சேரியும், அரசாங்கப் பணிமனைகளும் உள்ள இடமே போர்த்துக்கேயர் அழிக்குமுன் காணப்பட்ட மாதுமையம்பாள் ஆலயம் அமைந்திருந்த இடமாகும்.

மாதுமையம்பாள் ஆலயத்துக்கும் பாவநாச தீர்த்தம் இருந்த இடத்திற்கும் மத்தியில் காணப்படும் பாதையால் ஏறிச் செல்லும் பொழுது மற்றுமொரு சமதரை காணப்பட்டது. இச்சமதரையில் குளக்கோட்டு மன்னனால் எழுப்பப்பட்ட ஸ்ரீ நாராயணர்கோயில் இருந்துள்ளது. இவ்வாலயம் கிழக்கு நோக்கியதாய் உயர்ந்த கோபுரத்தைக் கொண்டதாகக் காணப்பட்டுள்ளது. இக்கோயில் அமைந்திருந்த சமதரை மாதுமையம்பாள் ஆலயம் அமைந்திருந்த சமதரையை விடச் சிறியது. இச்சமதரையின் கிழக்கு செங்குத்தான மலைப்பாறைகளைக் கொண்டதாகவும், வடக்கேயும் தெற்கேயும் சரிவான மலைச்சாரல்களை உடையதாகவும், மேற்கே முரட்டுப் பாறைகளைக் கொண்டதாகவும் காணப்பட்டது. கர்பக்கிருகத்தில் ஸ்ரீமகாலெட்சுமி சமேத நாராயணமூர்த்தியின் சிலா விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.

காவல்துறையினரின் குடியிருப்பு கிளிவ் கொட்டெஜ் என்பவற்றோடு இரண்டாவது உலகமகா யுத்தகாலத்தில் பொருத்தப்பட்ட விமான எதிர்ப்புப் பீரங்கி அமைந்துள்ள நிலப்பகுதியே நாராயணர் ஆலயம் இருந்த இடமாகும். இவ்வாலயம் இருந்த இடத்திற்குத் தெற்குப் பக்கமாக பிரித்தானிய ஆட்சியாளர் நிலத்தை அகழ்ந்து நீர்த்தொட்டியொன்றைக் கட்டினார்கள். தற்போதும் இத்தொட்டியுள்ளது. அப்போது ஐந்து அடி உயரமான ஸ்ரீ நாராயணமூர்த்தி, மகாலெட்சுமி ஆகிய விக்கிரகங்கள் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இத்திருவுருவங்கள் சீர்செய்யப்பட்டு கோணேசர் கோயிலில் வைக்கப்பட்டது. இவ்வாலயம் அமைந்திருந்த சமதரையின் மேற்கே காணப்படும் முரட்டுப்பாறைத்தொடரின் அந்தத்தில். 1979ஆம் ஆண்டு இலங்கை அரசு இலங்கைத் தரைப்படை வீரர்களின் வழிபாட்டுக்கென ஒரு விகாரையை அமைத்து, புத்தர் சிலையை நிறுவி, கோகர்ணவிகாரை இங்குதான் இருந்ததெனப் பிரச்சாரம் செய்தது. ஆனால் இலங்கை அரசின் புதைபொருளாராய்ச்சித் துறையின் தலைவராயிருந்த திரு. பரணவிதான அவர்கள் தமது ஆராய்ச்சியின்போது வேறோரிடத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க ஏட்டில் கோகர்ணவிகாரை வேறோர் இடத்தில் இருந்தமை பற்றிய உண்மைக் குறிப்புகளை வெளியிட்ட போது அதனை இலங்கை அரசு மறைத்துவிட்டது.

கி.பி. 3ஆம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த மகாசேனன், கோணேசர் மலையிலிருந்த ஆலயத்தை அழித்து, அவ்விடத்தில் விகாரையொன்றை நிறுவினான். இதனை மகாவம்சம் ‘திருகோணமலையிலிருந்த பிராமணக் கடவுளுக்கான கோயிலொன்றை மகாசேனன் இடித்தான்’ எனக் குறிப்பிட்டுள்ளது. மகாசேனனால் அழிக்கப்பட்ட ஆலயத்தைச் சைவசமயிகள் மீண்டும் இவ்விடத்தில் நிறுவினர் என்பதை வரலாற்றுக்குறிப்புகளிற் காணலாம். வரலாறு, இலக்கியம், தொல்பொருள் ஆய்வுகள், மேலைநாட்டார் குறிப்புகள் யாவும் கிமுற்பட்ட காலத்திலேயே கோணேஸ்வரம் சுவாமிமலையில் இந்துக்கோயில் இருந்ததென்பதை நிரூபிக்கும்பொழுது மகாயான தீவிரவாதியான மகாசேனன் இந்து ஆலயத்தை அழித்துக் கட்டிய விகாரையின் எச்சங்கள் சிலவற்றைக் கொண்டு இவ்விடத்தில் இந்துக்கோயில் இருக்கவில்லை என்று நினைப்பது தவறான சிந்தனையாகும்.

மூன்றாவது ஆலயமான மாதுமை அம்பாள் சமேத கோணேசப்பெருமான் எழுந்தருளிய கோயிலே பிரதானமான கோயிலாகக் கருதப்பட்டுள்ளது. ஸ்ரீ நாராயணமூர்த்தி ஆலயமிருந்த இடத்திலிருந்து வடக்குப் பக்கமாக ஒரு பாதை சென்றது. இப்பாதையின் கிழக்குப் பக்கம் உயர்ந்த சரிவும், மேற்குப் பக்கம் தாழ்ந்த சரிவும் காணப்பட்டது. ஆரம்பகாலத்தில் உச்சியிலிருந்த கோயிலுக்குச் செல்லக் கரடுமுரடான கற்பாதையே காணப்பட்டுள்ளது. மலையின் இயற்கை அமைவிற்கேற்ப பாதைகள் உயர்ந்தும், தாழ்ந்தும் காணப்பட்டன. இதனால் இடைக்கிடை கருங்கற்படிகள் அமைக்கப்பட்டிருந்தன. இப்பாதை இராவணன்வெட்டை அடையும்போது குறுகிய ஆழமான பள்ளத்தைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. குளக்கோட்டு மன்னன் இப்பள்ளத்தை நிரப்பும் திருப்பணியைச் செய்துள்ளான். இராவணன் வெட்டைக் கடந்து சென்றால் மலையுச்சியில் ஒரு சமதரை காணப்படும். இச்சமதரையிலேயே மாதுமையம்பாள் சமேத கோணேசர் ஆலயம் காணப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தின் கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த விலைமதிப்பற்ற இரத்தினமணிகளின் பிரகாசம் தூரக் கடலிற் செல்லும் கடற்பயணிகளுக்கும், மாலுமிகளுக்கும் கலங்கரை விளக்கமாகப் பயன்பட்டுள்ளது. கோணேசமலையில் கட்டப்பட்டிருந்த மூன்று கோயில்களின் கோபுரங்களும் உயர்ந்து காணப்பட்டமையால் தூரக்கடலிற் பயணம் செய்வோரும் கோபுரங்களைத் தெளிவாகக் காணக்கூடியதாய் இருந்துள்ளது. தெட்சணகைலாசம் எனப் போற்றப்பட்ட திருக்கோணேஸ்வரத்தில் மாதுமை அம்பாள் சமேத கோணேசப் பெருமானும் கருவறையில் சிவலிங்கத் திருமேனியும் (பாணலிங்கம்) பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.

போர்த்துக்கேயரால் இடித்தழிக்கப்படுவற்கு முன்னிருந்த மூன்று ஆலயங்களின் தொன்மைத்தோற்றம், சிறப்பு என்பன இவ்வாறு காணப்பட்டுள்ளன. பின்னர் காலத்திற்குக்காலம் ஏற்பட்ட அரசியற்காரணங்களால் ஆலயத்தின் நிலப்பகுதியில் அரசகட்டிடங்களும், காவற்படைகளும் நிலைகொண்டுவிட்டன. தற்போது இராவணன் வெட்டிற்கு அண்மையில் உச்சியின் சமதரையிலேயே கோணேசர் ஆலயம் அமைந்துள்ளது.

இத்தலத்தின் தலபுராணமெனக் கருதப்படுவது தெட்சண கயிலாய புராணம், இதன் மூலம் இத்தலத்தின் தோற்றம், ஆதிவரலாறு, சிறப்பு போன்ற பல்வேறு விடயங்களை அறியக்கூடியதாயுள்ளது. இவ்வாலயத்தின் தொன்மையை அறிய உதவுவது கோணேசர் கல்வெட்டு என்ற நூல். இது கோணேசர் சாசனம் எனவும் அழைக்கப்படும். கோணேசர் கோட்டம், கோபுரம், மதில், மணிமண்டபம், பாபநாசத் தீர்த்தம் ஆகியன அமைந்த வரலாற்றுச் செய்திகள் இந்நூலிலும் கூறப்பட்டுள்ளது. கோணேசர் கல்வெட்டு என்ற நூலினைக் கோணேசர் ஆலயச் சட்டப் புத்தகமெனப் போற்றுவர்.

கோணேசர் ஆலயத்தின் நித்திய, நைமித்திய கருமங்கள் குறைவின்றி நடைபெறக் குளக்கோட்டுமன்னன் பல திட்டங்களை வகுத்துள்ளான். இவை எழுத்தப்பட்ட குறிப்புகள் யாவும் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டது.

இவ்வாறான சரித்திரப் பெருமையும் நாயன்மாரால் விதந்தோதப்பட்டதுமான இத்திருத்தலத்தை இலங்கையைக் கைப்பற்றிய அந்நியர்கள் ஒருவர்பின்னொருவராகச் சிதைத்தழித்தனர். இலங்கையை போர்த்துகேயர் கி.பி. 1905ஆம் ஆண்டு கைப்பற்றினர். திருகோணமலையின் இயற்கை அமைப்பும், கடல்வழிப் பாதைகளுக்கான மையமாகக் காணப்பட்டமையும் இப்பிரதேசத்தில் கவனம் கொள்ளச் செய்தது. மதவெறியும், கொள்கையிடும் நோக்கமும் இவர்களிடம் காணப்பட்டாலும் திருகோணமலையின் கேந்திர முக்கியத்துவம் இவர்களை ஈர்த்தது என்று கூறுவதே பொருத்தமுடையது.

கி.பி. 1624 – 1627 வரை போர்த்துக்கேய தளபதியாயிருந்த கொன்ஸ்ரன்ரைன் டீசா என்பவன் கோணேசர் மலையிலிருந்த கோயில்களை இடித்துத் தரை மட்டமாக்கினான். இவ்வாறு இடிக்கப்பட்ட கற்களைக் கொண்டே கோட்டையைக் கட்டினான். இவன் இக்கோயில்களை இடிக்குமுன் யாவற்றையும் படமாக வரைவித்துள்ளான். இப்படங்களிலொன்று போர்த்துக்கலிலுள்ள அஜூடா நூலகத்தில் கண்டெடுக்கப்பட்டது. கோயில் கற்களைக் கொண்டு கோட்டையைக் கட்டும்பொழுது பழைய கல்வெட்டொன்றும் கோட்டை வாசலில் வைத்துக் கட்டப்பட்டு விட்டது. அதனைப் படமெடுத்துப் போர்த்துக்கலுக்கு அனுப்பியுள்ளான். ஏனெனில் அக்கல்வெட்டில் கோணேசர் ஆலயம் பறங்கிகளால் இடித்தழிக்கப்படும் என்ற தீர்க்கதரிசனம் காணப்படுகின்றது. இவனால் அனுப்பப்பட்ட குறிப்புகளின் மூலம் கோணேசர் ஆலயத்தின் ஆரம்பகாலத் தோற்றம், நில அமைவு, பரப்பளவு போன்ற விடயங்களை அறியக்கூடியதாயுள்ளது.

பிரடெரிக் கோட்டை என்றழைக்கப்படும் கோட்டை வாயிலில் வைத்துக் கட்டப்பட்ட கல்லிலே காணப்படும் சாசனம் இவ்வாறு காணப்படுகின்றது.

(மு) ன னெ கு ள
கா ட ட ன மூ ட டு
(தி) ரு ப ப ணி யை
ன னெ ப ற ங் கி
(க ) க வெ ம ன னா
ன பொ ண னா
(ச ) ன யி ய ற (று )
(செ ) த வை த
(ண ) ணா
க ள

இக்கல்லெழுத்தின் வாசகம் முதன் முதலில் வின்சுலொ அகராதியில் வெளிவந்தது.

இதனை,

‘‘முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப்
பின்னை பறங்கி பிடிப்பனே – மன்னா கேள்
பூனைக்கண் செங்கண் புகைக் கண்ணன் ஆண்டபின்
மானே வடுகாய் வரும்.’’

எனக் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை கிராமிய வழக்கிலும் இவ்வாறே கூறப்பட்டு வருகின்றது.

திருகோணமலையிலிருந்து போர்த்துக்கேயர் கொண்டு சென்ற சுவடிகளில் மேற்குறித்த வாசகங்களைக் கண்டதாகக் குவெரோஸ் பாதிரியர் தனது சரித்திர நூலில் குறிப்பிட்டுள்ளரென போர்த்துக்கல் நாட்டில் கேக் என்ற நகரிலிருந்த அரச சாசனவியலாளர் ஈ.பி. றெய்மார்ஸ் என்பவர் குறிப்பிட்டுள்ளார். குவெரோஸ் பாதிரியார் குறிப்பிடும் கடைசி இருவரிகளும் சற்று மாற்றமுடையனவாகக் காணப்படுகின்றன. இவ்வரிகள் பின்கண்டவாறு காணப்பட்டன.

‘‘முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியை
பின்னே பறங்கி பிரிக்கவே மன்னவபின்
பொண்ணாத தனையியற்ற வழித்தே வைத்து
எண்ணாரே பின்னர சர்கள்.’’

இக்கற்சாசனத்தினை முதலியார் இராசநாயகம், கொட்றிங்ரன் போன்றோரும், வேறும் பலரும் சில திருத்தங்களுடன் வெளியிட்டுள்ளனர். எது எவ்வாறாயினும் இக்கற்சாசனத்தில் குளக்கோட்டன் என்ற மன்னனால் திருப்பணி செய்யப்பட்ட ஆலயம் பின்னர் பறங்கியரால் அழிக்கப்படும் என்ற குறிப்பு காணப்பட்டுள்ளது. கோணேசர் கல்வெட்டுக் கூறிச்சொல்லும் செய்திகளைக் கண்ணகி வழக்குரை யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்களிலும் காணக்கூடியதாயுள்ளது.

கண்ணகி வழக்குரையில்,

‘‘….மறையோர்கள் கோணைநாதர்
திருப்பூசை வெகுகாலஞ் செய்யுமந்நாள்
மாந்தளிர்போல் மேனியுடைப் பறங்கி வந்து
மஹகோணைப் பதியழிக்க வருமந்நாளில்... ’’
என்றும்,

யாழ்ப்பாண வைபவ மாலையில்,

‘‘..... இவ்விராச்சியம் (ஈழம்) முதன் முதல் பறங்கிக்காரர் கையில் அகப்படும். அவர்கள் ஆலயங்களையெல்லாம் இடித்தழிப்பர்....’’ என்று கூறப்பட்டுள்ளது. பின்னர் நடக்கப் போவதை முன்னே கூறிவைத்த இவர்களது தீர்க்கதரிசனம் வியப்புக்குரியது.

போர்த்துக்கேயரால் திருக்கோணேஸ்வரம் சீரழிக்கப்பட்டாலும், பக்தர்கள் மனந்தளராது குன்றின் அடிவாரத்தில், குகைவாயில்போல் காணப்படும் இடத்தைக் குறித்துத் தங்கள் வணக்கத்தைச் செலுத்தி வந்தார்கள். ஆண்டுக்கொருமுறை கடலுக்குள் நீண்டிருக்கும் பாறையில் ஒன்றுகூடி வணங்கிச் சென்றுள்ளனர்.

கி.பி. 1639இல் ஒல்லாந்தர் என்ற டச்சுக்காரர்கள் திருகோணமலையைக் கைப்பற்றினார்கள். இவர்கள் கோணேசர் ஆலயத்திலும், அதன் சுற்றாடலிலும் பெரிதும் அக்கறை காட்டினார்கள். போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டு எஞ்சியிருந்த தூண்களை இடித்துத் தங்களுடைய கோட்டையைக் கட்டினார்கள். இங்குள்ள இடங்களுக்கு டச்சுப் பெயர்களையும் சூட்டினார்கள். இவர்கள் காலத்திலும் ஆலயத்திற்குச் செல்வதற்கும், வணங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் பக்தர்கள் ஒளித்திருந்து தங்கள் வணக்கத்தைச் செலுத்தி வந்துள்ளார்கள்.

கி.பி. 1795 ஆம் ஆண்டு பிரித்தானியர், திருகோணமலைக் கோட்டையைக் கைப்பற்றினார்கள். இவர்கள் ஆட்சியில் சைவமக்கள் ஆறுதல் பெற்றவர்களாகக் காணப்பட்டார்கள். எல்லோருக்கும் வணக்க உரிமை இருக்க வேண்டும் என்ற பரந்த கொள்கையுடையவர்களாக ஆங்கிலேயர் காணப்பட்டனர். அழிபாடுகளைக் கொண்ட கோயிலுக்கு மக்கள் சென்று தரிசிப்பதை, ஆங்கிலேயர் தடுக்காது மக்கள் மன உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்துள்ளார்கள். கி.பி. 1803 ஆம் ஆண்டு கோயில் இருந்ததாகக் கருதப்படும் சுவாமி மலையில் இந்துக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இரண்டாவது மகாயுத்தத்தின்போது திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள பிரடெரிக் கோட்டை, பாதுகாப்பு வளையமாகக் காணப்பட்டதால் வாரத்தில் இரண்டு நாட்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆங்கிலேயர் கோணேஸ்வரம் அமைந்துள்ள பகுதியின் இயற்கை வளங்களையும் பாதுகாத்தனர். கோட்டை வனத்துள் வாழும் மான்கள் பசியாலும், தாகத்தாலும் வாடாது உணவளித்தனர். தண்ணீர்த்தொட்டிகளை அமைத்து அவற்றைக் காப்பாற்றினர்.

கி.பி. 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆந் திகதி யப்பானியர் குண்டுவீசித் திருகோணமலையைத் தாக்கினர். சீனன்குடாவில் காணப்பட்ட எண்ணெய்த் தாங்கிகள் தீப்பிடித்து எரிந்தன. ஆனால் திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள கோட்டைப்பகுதியில் வீசப்பட்ட குண்டுகள் எதுவும் கோயிலைப் பாதிக்காது கடலுக்குள் விழுந்தன. ஆங்கிலேயர் ஆட்சியில் கோணேஸ்வரம் இழந்த பெருமையை மீளப் பெற வித்திடப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில் 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆந் திகதி இலங்கை சுதந்திரம் பெற்றது. போர்த்துக்கேயர் ஆலயத்தை அழித்தபோது ஆலயத்திலிருந்த விக்கிரகங்களை நாலாபக்கமும் எடுத்துச் சென்று புதைந்திருந்தார்கள். சிதாகாசவெளியைத் தமது உள்ளத்திருத்திப் பிரார்த்தனை செய்த மக்களின் பிரார்த்தனை வீண்போகவில்லை. 1950 ஆம் ஆண்டு வரலாற்று நியதிப்படி இறையருளால் பிள்ளையார், சிவன், பார்வதி, திருவெங்கவடிவ அம்பாள், அஷ்சரதேவர், சந்திரசேகரர் முதலிய திருவுருவங்களோடு, அன்னவாகனம் ஆகியனவும் பூமியிலிருந்து கிணறு வெட்டும்பொழுது வெளிப்பட்டன. சைவப்பெருமக்கள் ஒன்றுகூடி, முன்னர் கோயில் இருந்த இடத்தில் கோயிலைக் கட்டி இத்திருவுருவங்களைப் பிரதிஷ்டை செய்தனர். இதன் பின்னர் 1963 ஆம் ஆண்டு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. 1963ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாந் திகதி ஆவர்த்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது. தெரிவு செய்யப்பட்ட ஆலய பரிபாலன சபைத் தலைவராகக் காலஞ்சென்ற டாக்டர் சு. சித்திரவேல் அவர்கள் தலைமை தாங்கினார். 1971 ஆம் ஆண்டு இவர் சிவபதம் அடைந்த பின்னர் இப்பொறுப்பை ஏற்றவர் திரு. மு. கோணாமலை செல்வராசா அவர்கள்.

குளக்கோட்டு மன்னன் காலத்திலிருந்து தெப்பத்திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது. 1973 ஆம் ஆண்டு முதல் மீண்டும் இத்திருவிழா நடைபெறுகின்றது. மக்கள் ஆதரவினால் ஆலயப் புனருத்தாரணப் பணிகள் நிறைவேறி, 1981 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆந் தேதி ஜீர்ணோத்தாரண கும்பாபிஷேகம் நடைபெற்றது. மீண்டும் ஆலயத்தில் பல புனருத்தாரணப் பணிகள் செய்யப்பட்டன. ஆலய பரிபாலனசபையுடன், இந்து கலாச்சாரப் அமைச்சு, வடகிழக்கு மாகாண சபை ஆகியன இணைந்து இப்பணியில் ஈடுபட்டு 1993 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆந் திகதி மிகச் சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவற்றின் மூலம் திருவுருவங்கள் அதீத சக்தியைப் பெறுவதோடு நாட்டிற்கும், மக்களுக்கும் அருளை வழங்கும் என்பது ஆன்றோர் கருத்தாகக் காணப்படுகின்றது.

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு. போப் அவர்கள் கூறியுள்ள கருத்து உற்று நோக்கத்தக்கது. ‘‘சில வேளைகளில் கோயில்களில் உள்ள சிலைகள் வெறும் சின்னங்களாகக் கருதப்படுகின்றன. இது ஒரு பூரணமான கருத்தல்ல. ஒவ்வொரு சிலையும் ஒரு பிரத்தியேகமான அபிஷேகத்தினால் தெய்வீகத்தன்மை பெறுகின்றது’’ என்பதற்கிணங்கப் பல தடவைகள் கும்பாபிஷேகம் கண்ட இத்திருக்கோயிலின் அருளுக்கு இணையேது?

2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆந் திகதி, திருக்கோணேஸ்வர வரலாற்றில் புதிய திருப்பம்மிக்க நாளாகக் காணப்படுகின்றது. கி.பி. 1624 ஆம் ஆண்டு போர்த்துக்கேயரால் ஆலயத்தின் தேர்கள் அழிக்கப்பட்டபின் இன்றுவரை பழம்பெருமைமிக்க தேரையும், தேர்த் திருவிழாவையும் மக்கள் கண்டுகளிக்க முடியவில்லை. ஏறக்குறைய 379 ஆண்டுகளின் பின் மீண்டும் அழகுமிக்க புதிய தேரிலே மாதுமையம்பாள் சமேத கோணேசப்பெருமான் எழுந்தருளி மக்களை ஆட்கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

தற்காலத்தில் இங்கு செல்வதற்கான செப்பனிடப்பட்ட தார்வீதி காணப்படுகின்றது. மலையுச்சியிலுள்ள சமதரைக்கு ஏறுவதற்கு வசதியாகப் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள பிரடெரிக்கோட்டை, அதியுயர் பாதுகாப்புவளையமாகக் காணப்படுவதால் ஆலயத்திற்கு அண்மையிலும் பாதுகாப்புப்படைகள் காவல் செய்கின்றனர். கடந்த காலங்களில் நாட்டில் காணப்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாக இப்பகுதிக்குள் செல்வதற்கு விசேட அனுமதிபெற்றே செல்ல வேண்டியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதி இங்கு நித்திய நைமித்திய வழிபாடுகள் சிறப்புற நடைபெறவும், மக்கள் கோணேசப் பெருமானைத் தடையின்றிச் சென்று தரிசிக்கவும் வகை செய்துள்ளது.

திருக்கோணேஸ்வரம் பாடல்பெற்ற தலமாகக் காணப்பட்டு, ஈழம், இந்தியா, மேலை நாட்டார் எனப் பலதிறப்பட்டோராலும் புகழப்பட்டுள்ளது. கீழைத்தேசத்திலுள்ள கிறிஸ்தவரல்லாத மக்களின் உரோமாபுரி என்று குவைரோஸ் அவர்களால் பாராட்டப்பெற்றது. பிரம்மாண்டத்தின் இடைநாடியென சாந்தோக்கிய உபநிடதம் உரைக்கின்றது. அனுக்கிரகத்தலம் எனத் திருவாதவூரடிகளும், பல்வளமும் நிறைபதியெனக் கந்தபுராணமும் போற்றியுள்ளன. எல்லாரும் எல்லாச் செல்வமும் பெற்று வாழ்ந்த இணையிலாப் பதியென இராமாயணம் இயம்பும். இவ்வாறான புகழ்பெற்ற திருத்தலம் திருக்கோணேஸ்வரம்.

இதன் தொன்மையை அறிய எண்ணி, 1956 ஆம் ஆண்டு திருக்கோணேஸ்வரக் கடலினடியில் ஆராய்ச்சி செய்த ஆர்தர் சி. கிளார்க், மைக் வில்சன், ரொட்னி ஜோங்கல்ஸ் என்பவர்களின் ஆராய்ச்சிக்குறிப்புகளையும், புகைப்படப்பிரதிகளையும் ஆய்வு செய்தோர், மிகப்பழமை வாய்ந்த ஆலயம் கடலின் அடியில் ஆழ்ந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். பிரம்மாண்டமான மணிகளும், விளக்குகளும், தூண்களும், கோயிற் தளங்களும் கடலினடியில் இருப்பதாக ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது.

தமிழர்களின் வரலாற்றையும், திருக்கோணேஸ்வரத்தின் தொன்மையையும் மறைக்கவும், மாற்றவும் முயலும் சக்திகளால், கடலினடியில் செய்யப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகளைக் கொண்ட ஆவணங்கள் மறைக்கப்பட்டு, ஆராய்ச்சிகள் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இந்த ஆவணங்கள் மீட்கப்பட்டு ஆய்வுகள் தொடரப்பட்டால், நாம் கணித்துள்ள காலத்தை விட தொன்மை மிக்கதொரு காலத்தில் தமிழர்களும், அவர்கள் தழுவிய சைவமும் ஈழமண்ணில் இருந்துள்ளது என்ற உண்மை புலப்படும்.

தினமும் விழாக்கோலம் பூண்டு, சுதந்திரமாக மக்கள் சென்று வணங்கிய திருக்கோணேஸ்வரத்தின் இன்றைய நிலை என்ன? பாதுகாப்புப் பிரதேசமாகவுள்ள பிரடெரிக் கோட்டையுள் எழுந்தருளியிருக்கும் கோணேசப் பெருமானின் இன்றைய நிலை கல்மனங் கொண்டோரையும் கலங்கச் செய்யும். மலையடிவாரத்திலிருந்து மேலே ஏறிச்செல்லும்பொழுது, வீசுகின்ற காற்றிலே மலர் மணமும், மூலிகைகளின் வாசமும் சேர்ந்து புத்துணர்வைக் கொடுக்கும். இலந்தை, பாலை, நாவல் எனப் பல்வகைப் பழங்கள் எங்கும் விழுந்து பரவிக் காணப்படும். இம்மரங்கள் தறிக்கப்பட்டுப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மானும், மயிலும், மந்தியும் அங்குமிங்கும் சுதந்திரமாகத் திரியும். இவையெல்லாம் எங்கே ஓடிச்சென்றனவோ தெரியவில்லை. மலை உச்சியிலே சில மந்திகள் காணப்படுகின்றன.

இறைவனைத் தரிசிக்க அதிகாரிகளின் பரிந்துரையின் பேரிலேயே கோட்டைக்குள்ளே செல்ல முடியும். மலையடிவாரத்தின் கடற்கரைப்பகுதி அன்று வெண்மணற்பரப்பாகக் காணப்பட்டது. இன்று அப்பகுதி முள்ளடர்ந்த பற்றைபோல மாறியிருக்கின்றது. மலையடிவாரத்திலுள்ள பாதுகாப்புப் படையினரிடம் கடவுச்சீட்டு, அடையாள அட்டை இவற்றைக் கொடுத்து அவர்கள் தரும் பற்றுச் சீட்டுடனேயே கோட்டைக்குள் சென்று, கோணேசப் பெருமானைத் தரிசிக்கலாம். திருக்கோணேஸ்வரத்தில் வெளிநாடுகளிலிருந்து செல்வோரைத் தவிர உள்ளூர் மக்களைக் காண்பது அரிதாகவே காணப்படுகின்றது. தினமும் விழாக்கோலம் பூண்டிருந்த புண்ணியபூமியின் அண்மைக்கால நிலைமை இவ்வாறுதான் காணப்படுகின்றது. இந்நிலை மாறி தொன்மையும், வரலாற்றுப் பெருமையும் மிக்க கோணேசர் ஆலயத்தின் பெருமை மீண்டும் நிலைநிறுத்தப்படுவதோடு இவ்வாலயத்தின் சிறப்புக்களை அனைவரும் அறிந்து போற்றிப் பரவுதல் அவசியமாகும்.


தமிழ்நாட்டில் இருந்து தமிழ்மொழிக்காக குரல் கொடுக்கும் மிகமுக்கியமான நண்பர்களில் இவரும் ஒருவர். இவருடைய சகோதரர் ரவி தமிழ்வாணன் ஈழத்துக்குச் சென்று, அங்கே எம் மக்களின் படைப்புக்களை நூல்களாக வெளிக்கொண்டுவருவதில் முன்நிற்பவர். இப்போது கூட ரவி தமிழ்வாணன் பல ஈழத்துப்படைப்புக்களை வெளிக்கொண்டு வருவதாக அறியக் கிடக்கின்றது.

வெறிபிடித்த அர்ச்சகப் பார்ப்பனர்கள்

மதவெறி பிடித்த அர்ச்சகப் பார்ப்பனர்கள்

நடிகர் சிவக்குமார் அனுபவத்தில்...

சென்னை அண்ணாசாலையில் விக்டோரியா டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட் என்கிற கலைப்பொருள் விற்பனை நிலையம் இருக்கிறது. இந்தியா முழுவதும் இருந்து தயாராகும் அற்புதமான கலைப்பொருட்களை விற்பனை செய்வதற்காக அரசு நடத்துகிற நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள பூம்புகார் கலைக்கூடம் போன்ற அரிய இந்திய கலை அம்சங்களைத் தெரிந்துகொள்ள வெளிநாட்டவர்கள் அங்கு விரும்பி வருவார்கள். தமது கலைஞர்களின் படைப்புகளையும் அங்கே விற்பனை செய்வார்கள்.

அழகான ஓவியங்களை வரைந்து பிரேம் போட்டு கொண்டுபோய் அங்கு வைத்து விட்டு வந்தால் யாராவது வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்படி விற்பனையானால் அந்த நிறுவனத்துக்கு 15 சதவிகிதம் கமிஷன் எடுத்துக்கொள்வார்கள். மீதித் தொகை முழுவதும் உரிய கலைஞர்களுக்கு கிடைத்துவிடும். நமது கோவில் ஓவியங்கள் வெளிநாட்டினரின் கவனத்தை அதிகம் ஈர்க்கும் எனக்கு இயல்பாகவே அதில் ஆர்வம் மிகுதியாக இருந்ததால், என் படைப்புகளை அங்கு விற்பனைக்கு வைப்பேன் .அப்படி வைப்பதற்காக உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை வரைய தஞ்சாவூருக்கே புறப்பட்டேன். ரெயிலில் இருந்து இறங்கி ரொம்ப தூரம் ஊருக்குள்ளே நடந்தேன். ரெயிலடிக்குப் பக்கத்தில் இருக்கும் லாட்ஜுகளில் கட்டணம் அதிகமாக இருக்கும் என்பதால் கொஞ்சம் உள்ளே போனதும் மங்களாம்பிகா லாட்ஜ் என மங்கிய பெயர் பலகை ஒன்று இருந்தது. அந்த விடுதி உள்ளே சென்று மானேஜரிடம் அறை வாடகையை விசாரித்தேன் ஒரு நாளைக்கு எட்டு ரூபாய் என்றார் அவர், நான், அதைவிட குறைவான தொகைக்கு அறை எதுவும் இல்லையா? என்று கேட்டேன். என்னை மேலும் கீழுமாக நோட்டமிட்ட அவர், நாலு ரூபாய்க்கு ஒரு ரூம்
இருக்கு. ஆனா, அது கொஞ்சம் மோசமா இருக்கும் என்று சொன்னார்.

அதைவிட குறைவான வாடகைக்கு அறை இருக்கிறதா? என்று நான் மீண்டும் கேட்க அவருக்கு சுள்ளென்று கோபம் வந்துவிட்டது ஏதோ விளையாடுகிறேன் என்று நினைத்து ஒரு மாதிரியாக பார்த்தார்.

அதை விட குறைச்சல்னா பாத்ரூம் தான் இருக்கு பரவாயில்லையா-? என்று அவர் கேட்டதும் அதை ரெண்டு ரூபாய்க்கு தருவீங்களா? எனக்கு பாத்ரூம் போதும். குளிக்க, டாய்லட் போக ஒரு இடம். ராத்திரி ஏதாவது திண்ணையில் கூட படுத்துக்குவேன் என்று சொன்ன பிறகே என் உண்மையான நிலைமை அவருக்குப் புரிந்தது. நாலு ரூபாய் அறையை எடுத்துக்கோ உன்னால என்ன முடியுதோ அதைக் கொடுப்பா என்று சொல்லி விட்டார். அப்போதைக்கு அவர் ஆபத்பாந்தவனாகவே என் கண்களுக்னுகுத் தெரிந்தார். ஓவியம் வரைய காலை ஏழு மணிக்கெல்லாம் கோவிலில் இருந்தால்தான் கோபுரத்தின் லைட்டிங் நன்றாக இருக்கும். மாலை வரை ஒரே அமர்வில் வரைந்து முடிக்கவேண்டும். காலையில் ஆறரை மணிக்கு இரண்டு இட்லி, ஒரு வடையை அவசரமாக சாப்பிட்டுவிட்டு வரைய கிளம்பினால் மாலை ஆறு மணிக்குத்தான் கோவிலைவிட்டு வருவேன். மதிய உணவிற்கு நேரமும் இல்லை.... கையில் காசும் இல்லை!

இரண்டாவது நாள் மாலை ஆறு மணிக்கு ஓட்டலுக்கு சென்று உருளைக்கிழங்கு போண்டா கேட்டேன். ஆனால், மசால்தோசையை கொண்டுவந்து வைத்தார் சர்வர். நான் சாப்பிடவில்லை. வேறு யாருக்கோ சொன்னது இங்கே வந்திருக்கு. நான் போண்டாதான் கேட்டேன் என்று சொன்னேன். அவரோ, பரவாயில்லை சாப்பிடுங்க என்றார்.

எனக்கு தோசை வேண்டாம் போண்டாவே போதும் என்றேன் மீண்டும். ஏன் ஒரு மசால் தோசை சாப்பிடவா வயித்துல இடமில்லை-? சும்மா சாப்பிடுங்க என்றார் சர்வர்,
பிடிவாதமாக ! எனக்கு கோபம் வந்து-விட்டது. அஞ்சு மசால் தோசைகூட சாப்பிடுவேன். என்கிட்ட இப்ப இருக்கிற காசுக்கு என்ன சாப்பிடணும்னு எனக்குத் தெரியும். போண்டா தர-முடியுமா .... இல்லைன்னா நான் கிளம்பட்டுமா? என்று ஆத்திரத்தோடே எழுந்தேன். அவரோ, சின்ன முதலாளி என்று அவசரமாக பதறி என்னை தடுத்தார். நான் திகைப்பாக பார்த்தேன். என்னை அடையாளம் தெரியலையா சின்ன முதலாளி? பொள்ளாச்சியில உங்க மாமா ஓட்டல்ல வேலை பார்த்திட்டிருந்தேன். நீங்க கல்லாவுல வந்து உட்காருவீங்க. அப்புறம் படிக்க பட்டணத்துக்கு போயிட்டதா சொன்னாங்க.

நான் இப்ப தஞ்சாவூர்ல இந்த ஓட்டல்லதான் வேலை பார்க்கறேன். பிரியத்துலதான் உங்கள சாப்பிடசொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்க என்று நெகிழ்ச்சியோடு சொல்லி, என்னை பிடிவாதமாக உட்கார வைத்தார். எனக்கு சிலிர்த்துப் போய்விட்டது. தர்மம் தலைகாக்கும் என்பார்களே, அது மெத்தவும் சரிதான்! என்று தோன்றியது. நான் மறுக்க முடியாமல், அவர் வைத்த மசால்தோசையை சாப்பிட்டு முடித்தேன்.

திருச்சி மலைக்கோட்டை

நான் எப்பவும் ஒரு ரெயில் என்ஜின் மாதிரி தனித்து இயங்குவேன். என்னோடு எத்தனை ரெயில் பெட்டிகள் வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம். பெட்டிகள் இல்லையென்றாலும் என்ஜின் தனியாக பயணம் செய்வதுபோல் நானும் என் பயணங்களில் யாருக்காகவும் காத்திருக்கமாட்டேன்.

திருச்சி மலைக்கோட்டையை ஓவியமாக வரைய சில நண்பர்கள் வருவதாக இருந்தார்கள். கடைசி நேரத்தில் அவர்கள் வரமுடியாமல் போனது. என் பயணத்தைத் தள்ளிவைக்க சொன்னார்கள். ஆனால் அதற்கு நியாயமான காரணம் எதுவும் இல்லாததால், நான் மறுத்துவிட்டேன். தனியாகவே திருச்சிக்கு கிளம்பினேன்.

அங்கே அலைந்து திரிந்து கிருஷ்ண பவன் லாட்ஜ் என்கிற தங்கும் விடுதியைக் கண்டுபிடித்தேன். அங்கு தான் திருச்சியிலேயே இரண்டரை ரூபாய்க்கு அறை வாடகைக்குக் கிடைத்தது.

பல இடங்களில் உட்கார்ந்து மலைக்கோட்டையை வரைந்து பார்த்தேன். எங்கும் சரியான கோணம் (ஆங்கிள்) கிடைக்கவில்லை. மெயின் கார்டு கேட் அருகில் இருந்த கல்வி அதிகாரி (டி.இ.ஓ) அலுவலகத்தில் இருந்து சரியான ஆங்கிள் கிடைக்கும் என்று எனக்கு மனதில் தோன்றியது. அங்கே போனேன். மே மாத உச்சிவெயில் கொளுத்தி எடுத்தது. அந்த அதிகாரியிடம் அனுமதி வாங்கிக்கொண்டு மொட்டை மாடிக்கு போனால். தீக்குழியில் மிதித்தது போல தரை கொதித்தது. ஒதுங்குவதற்கு மருந்துக்கும் கூட நிழலே இல்லை. காலை பத்துமணிக்கு போனவன் தொடர்ந்து மூன்று மணி நேரமாக தகிக்கும் வெயிலில் நின்றபடியே மலைக்கோட்டையை ஓவியமாக வரைந்துகொண்டு திரும்பிய போது அந்த அதிகாரிக்கு நன்றி சொல்லப் போனேன். தம்பி... நீ யாருப்பா? என்று கேட்டார். காலையில உங்ககிட்ட அனுமதிகேட்டுவிட்டு ஓவியம் வரைய மாடிக்குப் போனேனே, அந்தப் பையன்தான் சார் என்றேன், அவர் பதறிவிட்டார்.

வெள்ளை வெளேர்னு பிரிட்ஜில வெச்சிருந்த ஆப்பிள் பழம் மாதிரி மாடிக்கு போன பையனா நீ? இப்படி முகமெல்லாம் வாடி வதங்கி வந்திருக்கியேப்பா... ஏன் இவ்ளோ கஷ்டப்பட்டு வெயில்ல நிக்கணும்? எங்கிட்ட கெட்டிருந்தா மலைக்கோட்டை போட்டோ வையே தந்திருப்பேனே? என்று ஆதங்கப்பட்டார். சாமியை நேர்ல பார்க்கிறது நல்லதா? போட்டோவுல பார்க்கிறது நல்லதா?ன்னு நான் சிரித்துக் கொண்டே கேட்டேன். அவர் நீ நல்லா பேச வேற கத்திருக்கே. யார் பெத்த புள்ளையோ.. உடம்பைப் பார்த்துக்கப்பா என்று அன்பாக அறிவுரையும் வழங்கினார். எனக்கு அதிக வியப்பாக இருந்தது.

ஸ்ரீரங்கத்தில் அவமதிப்பு

அடுத்தோ எனக்கு அவமதிப்பு காத்திருந்தது. ஸ்ரீரங்கம் கோபுரத்தையும் ஓவியமாக வரைய நினைத்து, புஷ்கரணி தெப்பக்குளம் பக்கம் போனேன். கோபுரத்தில் சூரிய வெளிச்சம் நேரடியாக படுகிற கோணம் அங்கிருந்துதான் கிடைத்தது. ஆனால் கோவில் வளாகத்தில் பிரகாரத்திற்கு அருகிலேயே நின்று வரைய வேண்டியது இருந்தது. அப்போது கோவில் அர்ச்கர் ஒருவர் வந்தார். என்னிடம் குலம் கோத்திரங்களை விசாரித்தார். என் பேச்சு, உடை, முக பாவனைகளை வைத்து நான் பிராமணப் பையனில்லை என்று தெளிவாகத் தெரிந்ததும் அவரின் முகம் போன போக்கே சரியில்லை. முறையா அனுமதி எதுவும் வாங்காம கோவிலுக்குள்ள படமெல்லாம் வரையக்கூடாது என்று கடிந்தபடி சொன்னார்.

நான் ஓவியக் கல்லூரி மாணவன். படம் வரைவதைத்தவிர வேறொன்றும் செய்யப்போவதில்லை என்று பவ்வியமாக சொன்னேன், கெஞ்சிப் பார்த்தேன். அவர் சம்மதிக்கவில்லை.

இத்தனை சொன்ன பிறகும் நீங்கள் கோபப்படுவது நியாயமில்லை என்று பணிவாக பேசிப் பார்த்தேன். அவர் காதிலேயே வாங்கவில்லை; மாறாக அவரது கோபம் கூடியது. ஓ... நீ நியாய தர்மம் வேற பேசுறீயா? இரு வர்றேன் என்று ஆவேசமாக உள்ளே போனவர் வேறு சில அர்ச்சகர்களுடன் வந்தார்.

என்னை அடித்து விரட்டாத குறைதான்! அத்தனை அவமதிப்பு அவர்களிடம் முடிந்தவரை போராடிப் பார்த்துவிட்டு ஏமாற்றத்தோடு அங்கிருந்து கிளம்பினேன். கோவிலைவிட்டு வெளியேறி தெருவில் அமர்ந்து கோபுரத்தை படமாக வரைந்து முடிந்தேன்.

பெரியார்மீது மதிப்பு

தந்தை பெரியார் மீது எனக்கு அப்போதுதான் பெரிய மரியாதை வந்தது. அவர் ஏன் இவர் மாதிரியான பிராமணர்களை வெறுத்தார் என்பதன் அர்த்தமும் எனக்கு அனுபவப்பூர்வமாக விளங்கியது. அந்தக் கோவிலையும், ஆண்டவனையும் அவர்கள் அனுமதியின்றி யாரும் நினைக்கக்கூடாது என்று கருதிய அந்த அர்ச்சகரின் போக்கு என்னைக் கடுமையாகப் பாதித்தது. படிப்பறிவு இல்லாத சாதாரண கிராமத்து பாமர மக்கள் கூட எனக்கு படங்கள் வரைய இடம் தந்து, உணவளித்து, உபசரித்து அனுப்பிய எத்தனையோ சம்பவங்கள் உண்டு. ஆனால், மெத்தப் படித்து தமிழ் மண்ணின் முக்கிய கோவிலில் அர்ச்சகராக இருந்த அவர் தீண்டாமை நோக்கத்தோடு என்னிடம் அப்படி நடந்து கொண்டது புதிய புதிரான அனுபவமாகவே எனக்கு இருந்தது. அதை நினைத்தால் இப்போதும் நெஞ்சம் கனக்கத்தான் செய்கிறது.

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்ம்மினே.



திருமூலர் இயற்றிய "திருமந்திரம்' அள்ளி அள்ளிப் பருகினாலும் ஆசை தீராத அமுதக் கடல்! திருமந்திரத்தின் சுவையை ஒருமுறை அறிந்துவிட்டால், ருசி கண்ட பூனைபோல மனம் திருமந்திரத்தையே சுற்றிச் சுற்றி வரும்.

"சூட்சுமம் திறந்த திருமந்திரம்' முதல் பாகத் தில் கரு எவ்வாறு உருவாகிறது (கர்ப்பக்கிரியை), மூச்சுப் பயிற்சி (பிராணாயாமம்) ஆகியவை குறித்து திருமந்திரம் கூறும் சில கருத்துகளை ஆராய்ந்து பார்த்தோம். அவற்றில் மறைந்து கிடக்கும் சூட்சும ரகசியங்களையும் அறிந்து கொண்டோம்.

சூட்சுமம் திறந்த திருமந்திரம் இரண்டாம் பாகத்தில், "மதம், கடவுள், பக்தி, ஞானம், குரு, முக்தி' போன்ற ஆன்மிகம் சார்ந்த துறைகளைக் குறித்து திருமூலர் கூறும் சில புரட்சிகரமான கருத்துகளை விரிவாகக் காண இருக்கிறோம்.

திருமந்திரத்தின் ஒவ்வொரு பாடலிலும் பல சூட்சுமங்கள் பொதிந்து கிடக்கின்றன. அனைத் துப் பாடல்களையும் ஆராய்ந்து எழுத ஒரு பிறவி போதாது! எனவேதான் சிறுசிறு தலைப்புகளை எடுத்துக் கொண்டு அதற்கேற்ப அங்கொன்றும் இங்கொன்றுமாக சில திருமந்திரப் பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்து எழுதுகிறேன்.

திருமந்திரம் ஒரு பக்தி இலக்கியம் மட்டுமன்று. இது வாழ்க்கையை விளக்கும் ஒரு வாழ்வியல் இலக்கியம். பொருள் நயம், உவமை நயம், சந்த நயம் என பல்வேறு இலக்கிய நயங்கள் நிறைந்த ஒரு மாபெரும் இலக்கியம். தமிழ் இலக்கியத்திற்குக் கிடைத்த பொக்கிஷம்!

"தேவர் குறளும் திருநான் மறை முடிவும்

மூவர் தமிழும் முனிமொழியும்- கோவை

திருவாசகமும் திருமூலர் சொல்லும்

ஒரு வாசகம் என்று உணர்'

என்பது நமது தமிழ்ப் பாட்டி ஔவையாரின் கூற்றாகும். திருக்குறள், நான்கு வேதங்கள், அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகியோரது படைப்புகள், குறுமுனியாகிய அகத்தி யரின் நூல், திருஞானக் கோவை, திருவாசகம் ஆகிய அனைத் துமே திருமூலர் கூறும் ஒரு வாசகத்திற்கு இணையாகும் என்பதே இந்தப் பாடலின் பொருளாகும். திருமந்திரத்தின் சிறப் புக்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா?

இத்துணை சிறப்பு வாய்ந்த திருமந்திரம் பரவலாக அறியப்படாமல் இருக்கிறதே என்ற ஆதங்கம் தமிழ் அறிந்த ஆன்றோர்கள் மத்தியில் பல காலமாக உள்ளது. தேவாரமும் திருவாசகமும் புகழ் பெற்ற அளவிற்குத் திருமந்திரம் பாமர மக்களிடையே அறியப்படாமல் இருக்க காரணம் என்ன?

திருமூலர் நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுபவர். "சிவனே' தனது தலைவன் என வரித்துக் கொண்டவர். சிவநெறியில் மூழ்கி முத்தெடுத்தவர். சிவானுபவத்தை முழுமையாக அனுபவித்தவர். இவை அனைத்தும் அக்காலத்து ஆன்மிகவாதிகளுக்கு ஏற்புடையவையாக இருந்ததால்தான் திருமூலரும் நாயன்மார்களில் ஒருவராக வணங்கப்பட்டார்.

ஆனால் திருமூலர் அடிப்படையில் ஒரு புரட்சிக்காரராகவே இருந்திருக்கிறார். வழிவழியாக- பல நூற்றாண்டுகளாக சனா தனவாதிகளால் தூக்கிப் பிடிக்கப்பட்ட பல கருத்துகளைத் தவறென சுட்டிக்காட்டிய முதல் புரட்சியாளர் திருமூலரே.

திருமூலர் வாழ்ந்த காலம் ஏறக்குறைய கி.பி. 6-ஆம் நூற்றாண்டு என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் சைவம், வைணவம், பௌத்தம், சமணம் என பல மதங்கள் தமிழ் நாட்டில் வேரூன்றி இருந்தன. ஒவ்வொரு மதத்திற்குள்ளும் பல உட்பிரிவு கள் வேறு.

எந்த மதம் உயர்ந்தது? உன் கடவுள் பெரியவரா, என் கடவுள் பெரியவரா? என்ற சர்ச்சைகளும் அதன் விளைவாக சண்டைகளும் போர்களும் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில்தான் திருமூலர் "இறைவன் ஒருவனே' என்ற கருத்தை எடுத்து வைத்தார். அந்தக் கால மதத் தீவிரவாதிகளால் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே அவர்கள் திருமந்திரத்தை இருட்டடிப்பு செய்யத் துவங்கினர்.

மிக மிகத் தொன்மையான காலத்தில் (சங்க காலத் தில்) தமிழகத்தில் செய்யும் தொழிலின் அடிப்படையில் இன வேறுபாடுகள் இருந்திருக்கின்றன. ஆனால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடுகள் இருந்ததில்லை.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்'

என திருமூலருக்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் பாடி வைத்திருந்தாலும், திருவள்ளுவர் காலத்திலேயே தமிழகத்தில் சாதிப் பாகுபாடுகள் தோன்றி விட்டன.

திருமூலர் காலத்தில் உயர் சாதி, கீழ்சாதி, ஒதுக்கப் பட்டவன் என சாதி எனும் பேய் தமிழகத்தில் தன் கால்களை வலுவாக ஊன்றி விட்டது. இந்தக் கால கட்டத்தில்தான் திருமந்திரம் "ஒன்றே குலம்' போன்ற புரட்சிக் கருத்துகளை முழங்கியது.

திருமந்திரம் பல நூற்றாண்டுகளாக ஒதுக்கப்பட்ட- மறைக்கப்பட்ட ஒரு நூலாக இருந்ததற்கு இவையே அடிப்படையான காரணங்களாக இருந்திருக்கின்றன.

"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை' என்பது தற்போது திருமந்திரத்தைப் பொறுத்தவரையில் உண்மையாகி வருகிறது. கடந்த சில நூற்றாண்டுகளாகவே சித்தர் இலக்கியம் பாமரர்களுக்கும் பிடித்ததோர் இலக்கியமாக மாறி வருகிறது.

சித்தர்களுக்கெல்லாம் மகா சித்தர் திருமூலரே! அவரது திருமந்திரத்தின சில பாடல்களையாவது ஆய்ந்து எழுத எனக்கு வாய்ப்பு கிடைத்தது எனது முற்பிறவிப் பலனே! இனி தொடருக்குள் செல்வோம்.

வாழ்க நலத்துடன்!

டாக்டர் ஜாண் பி. நாயகம்,
M.B.B.S., M.D., Ph.D., D.Sc., F.C.D.
புனித ஆன்டனி மருத்துவமனை,
222, டாக்டர் நடேசன் சாலை,
திருவல்லிக்கேணி, சென்னை-600 005.

Sunday, 20 June 2010

பொருண்மிய வலுவிழந்த இனம்

பொருண்மிய வலுவிழந்த இனம் என்றும் அடிமைகளாக மட்டுமல்ல பிச்சைக்காரர்களாகவும் காலப்போக்கில் இன அடையாளங்களையும் இழப்பர்.

பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றி மேலெழுந்தவாரியாக பலரும் எழுதுகிறார்களே யன்றித் தீர்வையும், நம்மத்தியில் இலைமறை காயாக உள்ள பொருண்மிய நிபுணர்களைக் கூட்டி மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கும் யாரும் முன் வருவதில்லை. இந்தக் குறை தீர்க்கப்படவேண்டும். கிழக்கில் மூலதனத்தை இழந்த மக்கள் புழைப்புக்காக வாழ்வாதாரமான மண்ணை அரை விலைக்கு விற்பதாக மட்டக்களப்பைச் சேர்நத நண்பர் சில நாட்களுக்கு முன் தெரிவித்தார். மிகுந்த வேதனை தந்தது. இதை மாற்றியே தீர வேண்டும். பொருண்மிய வலுவிழந்த இனம் என்றும் அடிமைகளாக மட்டுமல்ல பிச்சைக்காரர்களாகவும் காலப்போக்கில் இன அடையாளங்களையும் இழப்பர். ஒன்றுபட்டு எமது மக்களின் பொருண்மியத்தைக் கட்டியெழுப்புவோம். குறைகளைப் பின்தள்ளி நிறைகாண உழைப்போம். புலத்தில் மக்கள் உதவி செய்ய விரும்புகிறார்கள். “வணங்காமண்” திட்டம் அறிவிக்கப்பட்ட போது பணமும் பொருளையும் புலத்து மக்கள் வாரி வழங்கினார்கள். “வணங்காமண்” கப்பலும் வந்த உதவிகளும் சிறீலங்கா அரசால் முடக்கப்பட்டது மீதிப் பணங்கள் இங்குள்ள “தமிழ் முதலைகளால்” மடக்கப்பட்டுவிட்டது. மக்கள் குழப்பத்திலுள்ளார்கள். அவர்கள் உதவி செய்யவிரும்புகிறார்கள். யாரை நம்புவது? யார் மூலம்? யார் செய்யும் தொண்டுகள் பற்றி வெளிப்படையாக உள்ளனர்? இப்படி நம்பிக்கையான அமைப்பை பொருண்மிய நிபுணர்களின் உதவியுடனும் கட்டியெழுப்புவீர்களானால் மக்கள் நிச்சயமாக உதவி செய்வார்கள். இதைத் தாங்கள் அல்லது தங்கள் அமைப்பு செய்தல் வேண்டும். தங்கள் பணிகளையும் தேவைகளையும் விரிவான ஆய்வுக் கட்டுரையாக எழுதியனுப்புங்கள். நாம் உங்களுக்குத் தோள் கொடுக்கின்றேம். நன்றி.

Facebook Group முகநூல் குழுமம்
http://www.facebook.com/group.php?gid=115523251489

நாம் வீழ்ந்தாலும் தமிழ் வீழக்கூடாது.

செம்மொழி மாநாடால் கலைஞருக்கு வேண்டப்படாத புகழும், அரசியல் அனுகூலங்களும் கிடைக்கப் போவதென்பது உண்மை. கலைஞரை மட்டும் குறைசொல்லி ஏது பலன்? நாம எல்லோரும் ஒருத்தரை ஒருத்தர் நாம் கொண்ட கொள்கைக்காகப் பிடறியில் குத்துவதில்லையா?! இன்று தமிழினம் என்றுமில்லாதாவாறு பிளவுபட்டுள்ளது. ஓற்றுமையே பலம்; அடம்பன் கொடியும் திரண்டால்தான் மிடுக்கு. கருத்தியல் வேற்றுமைகளைக் களைந்து தமிழுக்காகத் தமிழின் பெயரில் ஒன்றுபடுவோம். ஓன்றுபட்டு தமிழினதும் தமிழர்களினதும் வளர்ச்சிக்கும் சளைக்காது உழைப்போம். சாதி, மத, மார்க்க, வர்க்க, நெறி, அரசியல், சித்தாந்த, கொள்கை, கருத்தியல் வேற்றுமைகளைக் களைந்து தாய்த்தமிழின் பெயரில் ஒன்றுபடுவோம். நாம் வீழ்ந்தாலும் தமிழ் வீழக்கூடாது. நன்றி.


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 ஆம் ஆண்டு சூன் 23 முதல் சூன் 27 வரை கோயம்புத்தூரில் கொடிசியா வளாகத்தில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் 2010 இல் நடைபெற இருந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு ஈடாகத் தமிழக முதல்வர் மு. கருணாநிதி இந்த மாநாட்டை ஒருங்கிணைத்து இருக்கிறார். இந்த மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாட்டையும் சேர்த்து நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

****
கலைஞரை மன்னித்து செம்மொழித் தமிழுக்கு ஆதரவு கொடுக்கலாமா? செம்மொழியான தமிழ் மொழியாம்.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்
http://www.facebook.com/group.php?gid=110137469026235
*****

பிராமணன் தூய்மையானவனா?!

ஆரியன் யார்? பிராமணன்/அந்தணன் யார்?

கடவுளை அறநெறியில் நின்று இறைவனை அடைந்த முற்றுப்பெற்ற சித்தனே அந்தணன்/பிராமணன் ஆவான். மந்திரங்ளைக் கற்று பூஜை செய்பவர்கள் வெறும் பூசாரியன்றித் தம்மைத் தாமே முற்றுப்பெற்ற பிராமணன் அல்லது அந்தணன் என்று அழைப்பது மகாகுற்றமாகும்.

சாதாரண மானிடர்கள் தங்களை ஆரியர் அல்லது பிராமணர் என்று வகைப்படுத்துவது தவறானது. அதற்கு அவர்கள் அறியாமையே காரணம். அறவழி நின்று முற்றுப்பெற்ற சித்தர்களே(ஞானிகள்) பிராமணர்கள் ஆவார்கள். இவ்வாறு முற்றுப்பெற்ற ஞானிகள்/சித்தர்களே ஆரியர்கள் என்றும் அழைக்கப்படுவர். சாதாரண மனிதர்களை ஆரியர்கள் என்று வகைப்படுத்தல் தவறானது.

யார் பிராமணன் அல்லது அந்தணன் ஆகலாம்?

பெறுதற்கரிய பிறப்பாகிய மானிடப்பிறப்பைப் பெற்ற அனைவருக்கும் தகுதியுண்டு. "கு” ஆகிய இருளை நீக்கி “ரு” ஆகிய வெளிச்சத்தைக் காட்டக்கூடிய முற்றுப்பெற்ற "குரு”வாகிய ஞானிகள்/சித்தர்கள் காட்டும் வழியைக் கடைப்பிடிப்போர் யாவரும் பிராமணன்/அந்தணன் ஆகலாம்; சித்தன்/ஞானி ஆகலாம்; இறைவனை அடையலாம். பிறப்பால் மனிதர் யாரும் பிராமணன்/அந்தணன் ஆக முடியாது. மும்மலமாகிய பாசதேகத்தை நீத்து ஒளிஉடம்பு பெற்றதால் சித்தர்களே(masters) இறைதூதர்களாக, மானிடர்களாக இப்புவியில் தோன்றி மானிடத்தை அறநெறியில் யுகந்தோறும் வழி நடத்தினர்; இன்றும் நடத்துகின்றனர்.

மானிடனாகப் பிறந்து பிராமணன்/அந்தணன்/சித்தன்/ஞானி ஆனோர் எவரும் உண்டோ?!

ஆம். கோடான கோடிப்பேருண்டு. பல யுகங்களிலும் மானிடராகப் பிறந்து ஞானியாகியுள்ளனர்.

உ+ம்:

ஆசான் அகத்தீசர்
ஆசான் நந்தீசர்
ஆசான் திருவள்ளுவர்
ஆசான் ஒளவையார்
ஆசான் மஸ்தான்
ஆசான் பீர்முகமது
ஆசான் இயேசுபிரான்
ஆசான் கௌதமர்
ஆசான் பூணைக்கண்ணார்
ஆசான் மாணிக்கவாசகர்
ஆசான் வள்ளலார்
.... போன்ற எண்ணிலா கோடிப்பேர்.

உண்மையான பிராமணர்களாகியச் சித்தர்கள் தூய்மையானவர்களே.

72 வயதில் 26 வயதுப் பெண்ணை மணந்த பகுத்தறிவாளன்.

இந்தப் பகுத்தறிவாளி திருவள்ளுவரைவிட மேன்மையானவராம். நன்னெறிகளைப் போதித்தவராம். பெரிய புரட்சியாளனாம். யார் இவர்? இவர் செய்த புரட்சிதான் என்ன? 72 வயதில் 26 வயதுப் பெண்ணை மணந்து பகுத்தறிவுப் புரட்சி செய்த இவர் பார்ப்பனீயனா? பகுத்தறிவாளனா?

தனியக் கருத்துக்கள் மட்டும் கூறுவதன் மூலம் ஒருவன் பகுத்தறிவாளன் ஆக முடியாது. அதன்படி வாழ்ந்தும் இருக்க வேண்டும். அறிஞர் அண்ணா தனது “தாத்தா கட்ட இருந்த தாலி” எனும் கட்டுரையில் பெரியரை மறைமுகமாக பார்ப்பன் என்கிறார். சாதியத்தையும், பிற்போக்கான மார்க்கங்களையும், பெண்ணடிமைத்தனத்தையும் எவனொருவன் கடைப்பிடிக்கிறானோ அவன் பார்ப்பனியத்தைக் கடைப்பிடிக்கிறான்; அவன் பார்ப்பான்.

பெரியார் எனப் பரவலாக அறியப்படும் ஈ. வெ. ராமசாமி (E. V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 - டிசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர்.

இவர் வசதியான, உயர்சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இம்மனநிலை வளரக்கராணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையே, அந்த மூடநம்பிக்கைக்கு காரணமாக இருப்பது கடவுள் நம்பிக்கை, கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதை கருத்தில் கொண்டு ஈ.வெ.ரா, தீவிர நாத்திகராக இருந்தார். இந்திய ஆரியர்களால், தென்னிந்தியாவின் பழம்பெருமைவாயந்த திராவிடர்களை பார்ப்பனரால்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர்களின் வாழ்வுச் சுரண்டப்படுவதையும் பெரியார் எதிர்த்தார்.

72 வயதில் 26 வயதுப் பெண்ணை 2வது தடவையாக மணந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர்(பெரியார்) என்ன புரட்சியாளரா?! பெரியார் பார்ப்பனீயனா? பகுத்தறிவாளனா?

பெரியார் = போலித் தத்துவக் குப்பை

“தாத்தா கட்ட இருந்த தாலி!” - அறிஞர் அண்ணா

ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய(பெரியார்) இரண்டாவது திருமணம் 09-07-1949 ஆம் ஆண்டு நடந்தது. அப்போது ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு வயது 72. மணியம்மைக்கு வயது 26. மணியம்மையை விட 46 வயது அதிகம் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு. இந்த இரண்டாவது திருமணம் நடக்கும்முன் ஈ.வே. ராமசாமி நாயக்கர், திருமணங்கள் எப்படியிருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் தெரியுமா?

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

”மணமக்கள் விஷயத்தில் போதிய வயது முதலிய பொருத்தமில்லாததும், பெண்களின் சம்மதமோ அல்லது ஆணின் சம்மதமோ இல்லாமல் பெற்றோர் தீர்மானம் செய்துவிட்டார்களாதலால் கட்டுப்பட்டுத்தான் தீரவேண்டும் என்கின்ற நிர்பந்த முறையில் நடப்பது சுயமரியாதையற்ற மணங்கள் என்றே சொல்லலாம்”
(குடியரசு 03-06-1928)


“தாத்தா கட்ட இருந்த தாலி!” என்ற தலைப்புக் கொடுத்து அறிஞர் அண்ணா 1940-ல் விடுதலையில் இவ்வாறு எழுதுகிறார்:

“தொந்தி சரிய மயிரே வெளிர நிறை தந்தமனைய உடலே” படைத்த 72 வயதான ஒரு பார்ப்பனக் கிழவர், ”துள்ளுமத வேட்கைக் கணையாலே” தாக்கப்பட்டு கலியாணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார்.

வயது 72 ஏற்கெனவே மணமாகிப் பெண்டைப் பிணமாகக் கண்டவர். பிள்ளைக்குட்டியும் பேரன் பேத்தியும் பெற்றவர். இந்தப் பார்ப்பனக் கிழவர். ஆயினுமென்ன? இருண்ட இந்தியாவில், எத்தனை முறை வேண்டுமானாலுந்தான் ஆண்மகன் கலியாணம் செய்து கொள்ளலாமே!

பெண்தானே, பருவ மங்கையாயினும் பட்டாடை உடுத்திக் கொண்டு பல்லாங்குழி ஆடி விளையாடும் சின்னஞ்சிறு சிறுமியாயினும், மணமாகிப் பின்னர் கணவன் பிணமானால் விதவையாகிவிடவேண்டும்.

இளமை இருக்கலாம். ஆனால் இன்பவாழ்வுக்கு அவள் அனுமதி பெற அந்தக் கூட்டம் அனுமதிப்பதில்லை. அவளது விழி, உலகில் உள்ள வனப்பான வாழ்க்கைச் சித்திரங்கள் மீது பாயலாம்.


இந்தச் சமயத்தில்தான் ராஜாஜியைப் பெரியார் சந்தித்துப் பேசினார் என்று ஒரு பரபரப்பான செய்தி, பத்திரிகைகளில் வெளிவந்தது. இருவரும் வெகு காலமாக அரசியலில் இருப்பவர்கள், ஒரு காலத்தில் காங்கிரஸில் ஒன்றாகச் செயல்பட்டவர்கள். இன்னமும் நண்பர்கள் தான் என்று வேறு சொல்லப்பட்டது. சொல்லப்பட்டது என்றாலும், ஈ.வே.ரா மேடையேறினால் ராஜாஜி தன் நண்பர் என்ற சிந்தனையே அவருக்கு இராது. அவர் ஒரு பிராமணர் என்பதும் காங்கிரஸ் தலைவர் என்பதும் தான் முன் வந்து நிற்கும்; அவர் பேச்சின் தோரணையையும் தாக்குதலையும் தீர்மானிக்கும். இருப்பினும், 'என் நண்பரே ஆனாலும், ராஜாஜி ஒரு பிராமணர் ஆதலால் பிராமணருக்குச் சாதகமாகத்தானே அவர் சிந்திப்பார், நமக்கு சாதகமாகவா அவர் எண்ணங்கள் இருக்கும்?' என்றும் அடிக்கடி சொல்வார் மேடைகளிலும் எழுத்திலும்.

இருப்பினும் அவர் ராஜாஜியைச் சந்தித்துப் பேசுகிறார், திருவண்ணாமலையில் என்பதும் அதுவும் திடீரென நிகழ்ந்த சந்திப்பு என்பதும் அதுவரையும் அந்த மாதிரியான சந்திப்பிற்கான பிரமேயம் ஏதும் இல்லாமல் அது ரகசியமாகவே நிகழ்ந்தது என்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திராவிட கழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் அனேகமாக அனைவருக்குமே அது அதிர்ச்சியைத் தந்தது. எதிரும் புதிருமான இந்த இரு தலைவர்கள் எந்தக் காரணம் கொண்டும் சந்திப்பார்கள் என்பதைத் திராவிட கழகத்தவர் எவரும் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள். எனவே, பின்னர் இதை அடுத்து நடந்த ஒரு மகாநாட்டில், அண்ணாதுரை, பெரியாரிடம், 'உங்கள் இருவரிடையே என்ன பேச்சு நடந்தது என்று சொல்லவேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.

ஆனால் அதற்குப் பெரியார், 'நாங்கள் அரசியல் பேசவில்லை, என் சொந்த விஷயமாகத்தான் பேசிக்கொண்டோம். அதை நான் இங்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை' என்று சொல்லித் தட்டிக் கழித்ததாகவும் செய்திகள் வந்தன. அண்ணாதுரை ஏதோ ஒரு அன்னியரைக் கேட்பது போல பொது மேடையில் கேட்க நேர்ந்ததும், அதற்குப் பெரியார் சொன்ன பதிலும், ஒரு கட்சியின் பெரிய தலைவர்கள் இருவரும் பரிமாறிக்கொள்ளும் பேச்சாகத் தோன்றவில்லை. இருவருக்கும் இடையே நெடு நாட்களாக ஏதோ தமக்குள் பேசித் தீர்த்துக்கொள்ள முடியாத உரசலும் புகைச்சலும் இருப்பதைத்தான் காட்டுவதாகவும் விமரிசனங்கள் வந்தன. படிப்பகங்களிலும் இப்படித்தான் பேசிக்கொண்டார்கள். இதில் கட்சி பிரிந்து காரசாரமாக வாதங்கள் நடந்ததையும் கழகப் படிப்பகங்களில் கழகப் பத்திரிகைகளிலும் மற்ற செய்திப் பத்திரிகைகளிலும் நான் பார்த்தேன்.

இவற்றைத் தொடர்ந்து தான் ஈ.வே.ரா - ராஜாஜி சந்திப்பும் அதைத் தொடர்ந்த பரபரப்பான பல சம்பவங்களும். 'அது என் சொந்த விஷயம்' என்று சொல்லித் தட்டிக் கழித்த போதிலும், அதைத் தொடர்ந்து ஒரு சில நாட்களிலேயே, பெரியார் - மணி அம்மை திருமணம் பற்றிய செய்தி வந்தது. இது ஒரு பெரும் புயலையே கிளப்பிவிட்டது. பெரியாருக்கு அப்போது வயது எழுபதுக்கு மேல். மணியம்மைக்கு வயது 26 என்று சொல்லப்பட்டது. வெகு வருடங்களாக, வயதான தலைவருக்கு மகள் போல, பேத்தி போல உதவ வந்த பெண்ணைத் தாத்தா கல்யாணம் செய்துகொள்ளப் போகிறேன் என்று கிளம்பினார் என்றால்..... எல்லாக் கழகப் பத்திரிகைகளிலும், விடுதலை தவிர மற்றவற்றில், இது பெரிய சர்ச்சைக்கான விஷயமாகியிருந்தது. பொருந்தாத் திருமணம் என்றும், இதுகாறும் பெரியாரும் திராவிட கழகமும் பேசி வந்த கொள்கைகளுக்கு விரோதமான ஒரு செயல் என்றும் அத்தகைய செயலைப் பெரியாரே செய்துவிட்டு அது தன் சொந்த விஷயம் என்றும் கட்சிக்கு அதில் சம்பந்தமில்லை என்றும் சொன்னது கழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

"எனக்கும் என் சொத்துகளுக்கும் ஒரு வாரிசாக, என்னுடன் கடந்த பல வருடங்களாகப் பழகி என் நம்பிக்கையைப் பெற்ற ஒருவரைச் சட்டப்படியான வாரிசாக ஒருவரை ஏற்படுத்திக்கொள்ளும் ஏற்பாடு இது. என் நலத்திலும் இயக்கத்திலும் உண்மையான பற்றும் கவலையும் நம்பிக்கையும் கொண்டுள்ள, பல வருடங்களாக என்னுடன் இருந்து என் நம்பிக்கையைப் பெற்றுள்ள மணி அம்மையை வாரிசாக ஆக்கிக்கொள்வதற்குத் தான் இந்த ஏற்பாடு" என்று இப்படி ஏதோ பெரியார் விளக்கம் தந்துகொண்டிருந்தார். ஆக, அன்று வரை அவருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்த அண்ணாத்துரை மட்டுமல்ல, அவர் கட்சி ஆரம்பத்திலிருந்து அன்று வரை அவருடன் கட்சியில் உழைத்த யாருமே அவருடைய நம்பிக்கைக்கு பாத்திரராகவில்லை; அவர் நம்பிக்கை வைத்து கட்சியையும் சொத்தையும் உரிமையாக்கப் போவது அவருக்கு உதவி செய்ய வந்த 26 வயது மணி அம்மையை என்பது 'இதுகாறும் நம்மை நம்பாத ஒரு தலைவரின் கீழா கட்சிக்காக உழைத்தோம்' என்று அனைவரையும் அதிர வைத்தது.

அண்ணாதுரை தன் திராவிட நாடு இதழில் தம் தலைவரின் திடீர் கொள்கை மாற்றத்தையும், இத்தனை வருடங்கள் தன்னுடன் கட்சியில் இருந்த எவரிடமும் தனக்கு நம்பிக்கை இல்லை என்று ஒரு தலைவர் சொல்வதைக் கேட்டு கண்களில் கண்ணீர் மல்குவதாகவும், தலைவர் தம் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று இறைஞ்சிக் கேட்டுக்கொள்வதாகவும் எழுதினார். உடனே பெரியார் தனக்கு எதிராகக் கிளம்பிய அத்தனை பேரையும் கண்ணீர்த்துளிகள் என்று விடுதலையில் கிண்டலும் வசையுமாக எழுத ஆரம்பித்தார். தொடர்ந்து தன்னோடு பல வருஷங்களாக கட்சிப் பணி புரிந்த அத்தனை பேரையும், பெயர் சொல்லக்கூட விருப்பம் இல்லாத வெறுப்பில், வருஷக் கணக்கில் 'கண்ணீர்த்துளிகள்' என்று சொல்வதையே விடாப்பிடியாகக் கொண்டிருந்தார்.

அண்ணாதுரையோ, பெரியாரின் அவ்வளவு கேலியும் பகைமையும் நிறைந்த 20 வருட தொடர்ந்த பிரசாரத்திற்கும் பதிலாக ஒரு முறைகூட, கோபத்துடனோ, வெறுப்புடனோ பெரியாரைப் பற்றி ஒரு வார்த்தை பேசியதில்லை. அண்ணாதுரையின் மீது கொண்ட என் மதிப்பு இன்னும் உயர்ந்தது. அது வரை அவரது பேச்சையும் எழுத்தையும் கண்ட வியப்பு, இப்போது அவரது குணத்தைக் கண்ட மதிப்பாக வளர்ந்தது.

கடைசியாக கும்பகோண வாழ்க்கையில் இன்னொரு புதிய சேர்க்கையையும் சொல்ல வேண்டும். மணல் வீடு என்ற சிறுகதைத் தொகுப்பு, சி.சு.செல்லப்பா என்பவர் எழுதியது, ஒன்று கிடைத்தது. அது எப்படி, யாரிடமிருந்து கிடைத்தது என்பதெல்லாம் நினைவில் இல்லை. அந்தக் கால கட்டத்தில் செல்லப்பாவை எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கக் கூடியவர்கள் என்று யாரையும் எனக்கு நினைவுபடுத்திக்கொள்ள முடியவில்லை. அப்போது படித்து வெகு நாட்களுக்கு நினைவில் பதிந்துவிட்ட அத்தொகுப்பில் இருந்த ஒரு கதை இங்கே.

தாசில்தார் குடும்பம் ஒன்று. அவர்களுக்கு வெகு நாட்களாகக் குழந்தைப் பேறு இல்லை. ஒரு ஜோஸ்யர் வழி சொல்கிறார். கன்றோடு ஒரு பசு மாட்டைத் தானம் கொடுத்தால் வழி பிறக்கும் என்று. தாசில்தார் அந்த நினைவிலேயே இருக்கும்போது, தாசில்தாரின் மனைவி, அந்த சமயத்தில் வீட்டுக்கு வந்த ஒரு கிராமத்துக் கணக்குப் பிள்ளையிடம் பசுவுக்கும் கன்றுக்கும் ஏற்பாடு செய்யச் சொல்கிறாள். பின் தடை ஏது? மாடும் கன்றும் தாசில்தார் வீட்டுக்கு வந்து சேர, அதிக நாள் பிடிக்கவில்லை. கோதானம் விமரிசையாக நடந்துவிடுகிறது. மாதங்கள் கழிகின்றன. தாசில்தார் குடும்பத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் விசேஷச் செய்தி ஒன்றும் வருவதாக இல்லை. ஒரு நாள் கணக்கப் பிள்ளை ஒரு தட்டில் பழம் பாக்கு, வெற்றிலை, பணம் சகிதம் தாசில்தார் தம்பதியரை முகத்தில் சந்தோஷம் வழிய நமஸ்காரம் பண்ணி 'பெரியவாள் ஆசீர்வாதம் செய்யணும், ரொம்ப நாளாக இல்லாத புத்திர பாக்கியம் கிடைச்சுடுத்து எனக்கு,' என்கிறார்.

இதற்குப் பின் ஒன்றிரண்டு வருடங்களில், புர்லா(ஓரிஸ்ஸா)வில் இருக்கும்போது, கலைமகள் பிரசுரமாக சி.சு.செல்லப்பாவின் சிறுகதைத் தொகுப்பு 'சரசாவின் பொம்மை' (விலை ரூபாய் இரண்டு) என்று பார்த்த போது, "அட, இவர் அந்த மணல் வீடு செல்லப்பா அல்லவா?" என்ற வியப்புடன் அதிலிருந்து செல்லப்பாவை ஆவலுடன் படிக்கத் தொடங்குகிறேன்.

இதற்கெல்லாம் இடையில் பள்ளிக்கூடம், பாடங்கள், பரிட்சை என்றெல்லாம் இருக்கின்றனவே. இப்போது நினைத்துப் பார்க்கும்போது, பள்ளிக்கூடம் போவதும் வருவதும் அவ்வளவு தொல்லை தருவதாக இருக்கவில்லை என்று தான் தோன்றுகிறது. சுந்தரம் பிள்ளை பற்றி முன்னரே பிரஸ்தாபித்திருக்கிறேன். அவருடைய சரித்திர வகுப்புகள் தான் எனக்கு மிக சுவாரஸ்யமானவையாக இருந்தன. அடுத்து, ஆறு பெண்களும், என்னையும் சேர்த்து மூன்று பையன்களுமாக இருந்த ஹிந்தி வகுப்புகள். குறைந்த பேர்களைக் கொண்டிருந்ததாலும் ஹிந்தி ஆசிரியர் என்ற தன் ஆளுமையை எங்களுக்கு பூதாகாரமாக ஆக்கிக் காட்டாத காரணத்தாலும், ஹிந்தி வகுப்புகள் வெகு சகஜ பாவத்திலேயே நடந்ததாலும் ஹிந்தி வகுப்புகள் எனக்கு சுவாரஸ்யமாக இருந்தன. சுவாரஸ்யத்துக்கு மற்றொரு காரணம், ஆறு பெண்களும் தங்களுக்குள் எப்போதும் அரட்டை அடித்துக்கொண்டே இருப்பார்கள். நாங்கள் இருப்பதைப் பொருட்படுத்தியவர்கள் இல்லை. அவர்கள் அரட்டையை ஏதோ அப்பாவிகள் போல நாங்கள் கேட்டுக்கொண்டிருப்போம். ஹிந்தியில் அவர்கள் எல்லோருமே மிகத் தேர்ந்தவர்களாக இருந்தார்கள்.

மற்றபடி வேறு எந்த வகுப்பும் எனக்குப் பிடித்தமாக இருந்ததில்லை. வகுப்பில் நடப்பதைக் கேட்டுக்கொண்டிருப்பேன். அவ்வளவே. ஆனால் இந்த ஒரு மாதிரியான சுவாரஸ்யமின்மை வருஷக் கடைசியில் வந்த இரு பரிட்சைகளின் போது தான் என்னைத் திகிலடைய வைத்தன. வேறு எங்கும் இல்லாதவாறு, பள்ளியின் இறுதி வகுப்பு அரசு நடத்தும் பொது பரிட்சையாதலால், தம் பள்ளியின் தேர்ச்சி எண்ணிக்கையைப் பெரிதாகக் காட்டுவதற்காக, இறுதித் தேர்வில் யாரை அனுமதிப்பது என்பதற்கும் ஒரு தேர்வு இருந்தது. நான் எப்படியோ அந்தக் கண்டத்தைத் தாண்டிவிட்டேன். எப்படி என்பது இப்போது யோசித்துப் பார்க்கும் போது விளங்குவதில்லை.

எனக்கு இப்போது நன்றாக நினைவில் இருப்பது, அன்று ஹிந்தி பரிட்சை. இரண்டு வருஷ படிப்பில், ஹிந்தி படித்துவிடுவேனே தவிர, அந்த வருட பாடப் புத்தகத்தில் பாதி நான் படிக்காததாகவே இருந்தது. பரிட்சை அன்று காலை ஒரு மணிநேரம் முன்னதாகவே பரிட்சை ஹாலுக்குப் போய் புத்தகத்தில் படிக்காத பாடங்களைப் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் ஆபத்பாந்தவனாக, வீர ராகவன் வந்தான். அவனைப் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு, நிறைய பக்கங்கள் உள்ள பாடங்களில் என்ன சொல்லியிருக்கிறது என்று அவனைச் சொல்லச் சொல்லிக் கேட்டுக்கொண்டேன். 'ஏண்டா, இதையெல்லாம் ஒரு தடவை கூட நீ படிக்கலையா? என்னடா பரிட்சை எழுதப் போறே நீ?' என்று அவன் சத்தம் போட்டான். ஆனால், நான் கேட்ட பாடங்களில் என்ன இருக்கு? என்று சொல்லவும் செய்தான். இப்படித்தான் நான் விரும்பியே எடுத்துக்கொண்ட ஹிந்தியையும் நான் படித்த லட்சணமும் இருந்தது.

பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு அரசு நடத்துவது என்றேன். அதை மெட்ரிகுலேஷனுக்குச் சமமான எஸ்.எஸ்.எல்.ஸி. பரிட்சை என்பார்கள். இதில் பாஸ் செய்துவிட்டால், காலேஜுக்கு மேல் படிப்புக்குப் போகலாம். அல்லது வேலை தேட ஆரம்பிக்க வேண்டும். இதற்கெல்லாம் முதலில் பாஸ் செய்ய வேண்டும். நிலக்கோட்டையிலிருந்து மாமா வேறு அப்பாவுக்குக் கடிதம் எழுதினார். இந்தப் பரிட்சையில் நல்ல மார்க் எடுத்தால், மதராஸ் பப்ளிக் செர்வீஸ் பரிட்சைக்கு உட்காரலாம். அதில் பாஸ் செய்துவிட்டால் வேலை சுலபமாகக் கிடைத்து விடும் என்று எழுதியிருந்தார். இது எனக்கு புதிதாக ஒரு கவலையைச் சேர்த்தது. ஒரு கண்டம் கழியும் என்று நினைத்துக்கொண்டிருந்தால் இன்னொன்று எனக்காக வாசலிலேயே நின்றுகொண்டு எப்போது உள்ளே நுழைவது என்று பயமுறுத்துவது போலிருந்தது. ஆனால் அது மாமாவின் கார்டு வந்த ஓரிரு நாட்கள் தான். பிறகு அது பற்றிய சிந்தனையே இல்லை.

நன்றி:
Chennai Online
Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis